.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 31, 2013

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்!

free-tutorials-project 
 
பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன்.நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
  பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.

பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.

Karaoke Software என்றால் என்ன?

சாதாரண மக்கள் – பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.

Karaoke Software இன் திறன் என்ன?

Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்… இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.

Karaoke Software இன் அடிப்படை  என்ன?

இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.

சில Karaoke Softwares

Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.

Sony Sound Forge Pro 10:

இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.

Adobe Audition CS6:

இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.

மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.

இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.

AV Music Morpher Gold 5

இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial  இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,

Home Page: musicmorpher.com



இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.

பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது?

samsung 
 
 
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது… அதே சமயம் தீபாவளி பர்சேஸ் ஒரு சிலருக்கு இனிமேல்தான் தொடங்கும். ஆனால் உங்களுக்கென்றே பிரத்யேகமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க நினைத்திருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதையே ஒரு பெரிய குறிக்கோளாகவே வைத்திருப்பார்கள்.


ஒரு நல்ல காஸ்ட்லி போன் வாங்க நீங்க தீர்மானிச்சிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து படியுங்கள். காஸ்ட்லி போன் வாங்குவதால் பல நன்மைகள் உண்டு. நல்ல தரமிக்க டிஸ்பிளே, அதிக பிக்சல் கொண்ட கேமரா, அதிக உள்ளக நினைவகம், மெமரிகார்ட் மூலம் அதிகமாக கோப்புகளை சேமித்து, சேகரித்து வைக்கும் வசதி. அதிக நாள் உழைக்க கூடிய, நீண்ட நேரம் மின்சக்தியை வழங்க கூடிய பேட்டரிஇப்படி நிறைய உண்டு. காஸ்ட்லி ஐட்டம் வாங்குவது என முடிவெடுத்துவிட்டீர்கள். எந்த கம்பெனி போன் வாங்கனால் நல்லது? இப்படியும் ஒரு சில குழப்பம் வரும். தரமென்று வந்துவிட்டால் அதை ஒப்பு நோக்கிதான் வாங்க வேண்டும். இங்கு எனக்குத் தெரிந்த சில போன்களையும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.. இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு பிடித்தமான விலையில் உள்ள போன்களை தேர்வு செய்யுங்கள்.


1. Nokia Lumia 1020

                                            lumia1020all_large_verge_medium_landscape

இதுதான் லேட்டஸ்ட் போன். நோக்கியா கம்பெனி சமீபத்தில் தான் வெளியிட்டது. விற்பனையில் சக்கைப் போடு போட்டுக்கொண்டுள்ளது. இது ஒரு விண்டோஸ் போன். இதில் 4.5 அங்குல அகலம் AMOLED touch screen இருக்கு. வயர்லஸ் சார்ஜிக் வசதி இருக்கு. 41 மெகா பிக்சல் கேமரா, 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor, மியூசிக் அப்ளிகேஷன், நோக்கியா மியூசிக், மிக்ஸ் ரேடியோன்னு ஏகப்பட்ட வசதிகள் குவிஞ்சு கிடக்கு. இதில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

  • 1.2 MP Secondary Camera
  • Powered by Windows Phone 8 OS and 2 GB RAM
  • Wireless Charging
  • Full HD (1080p) Recording
  • 41 MP Primary Camera with PureView technology and Optical Image Stabilisation
  • Carl Zeiss Tessar lens
  • Music apps: Nokia Music; Mix Radio
  • Comes with MS Office and Free Voice-guided Navigation
  • 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor
இவ்வளவு சிறப்பு வசதிகளுடன் கண்ணைக் கவரும் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும் இந்த நோக்கியா 1020 போனின் விலை ரூபாய் 47222./- விலைக்கேற்ற தரமும் வசதிகளும் அடங்கியிருப்பது சிறப்பு.

2. Samsung Galaxy Note 3 N9000 (Jet Black)

SM-N9000ZKEINU-1235650-0

இந்த போனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரபல நிறுவனம் சாம்சங்கின் தயாரிப்பு இது. சங்சங் நிறுவனத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. தரம்.. தரம்.. தரம்… அதுதான் இந்த நிறுவனத்தில் தாரக மந்திரமே அதுதான்.. ஆயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி.. ஐம்பதாயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி…. விலைக்கேற்ற தரமும், உழைப்பும் நிச்சயம் உண்டு. இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது.. விலை 46899. இதுல இரண்டு ஐட்டம் இருக்கு. 1. jet black, 2. classic white. இந்த இரண்டு போன்களில் வெளிப்புற நிறங்கள் மட்டுமே வேறுபாடு.. உள்ளிருக்கும் பகுதிகள் எல்லாமே ஒன்றுதான். அதாவது வெளிப்புற உறை மட்டுமே நிறத்தில் வேறுபடும்.

இதிலுள்ள முக்கியமான சிறப்பம்சங்கள் மட்டும் கீழே (ஆங்கிலத்தில்)

  • NFC Support
  • Dual Camera: Dual Shot / Dual Recording / Dual Video Call
  • Android v4.3 (Jelly Bean) OS
  • 2 MP Secondary Camera with Smart Stabilization and BSI Sensor
  • Full HD (1080p) Recording and Playback Support
  • 13 MP Primary Camera with Auto Focus and BSI Sensor
  • Octa Core Processor (1.9 GHz Quad + 1.3 GHz Quad) and 3 GB RAM
  • Samsung Smart Scroll and Samsung Smart Pause
  • 5.7-inch Full HD Super AMOLED (1920 x 1080) Display
  • S Pen Optimized Features: Air Command; Action Memo; Scrapbook; S Finder; Pen Window; Multi Window; Direct Pen Input
  • Air Gesture and Air View
3. Micromax Canvas Doodle 2 A240

samsung 

மைக்ரோமேக்ஸ் கம்பெனி உள்நாட்டு நிறுவனம். இதனுடைய தயாரிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தியே இருக்கும். இந்தியபோன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிறுவனம். இந்நிறுவனத்தில் அதிகபட்ச விலையுடன் போன் இது. விலை ரூபாய் 17499. இந்த போனில் 12 மெகா பிக்சல் கேமரா, 5.7 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கோட் கோர் பிரசசர்ன்னு நிறைய விஷயங்கள் இருக்கு.
இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • 2 MP Primary Camera
  • 5 MP Secondary Camera
  • 5.7-inch Capacitive Touchscreen
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 1.2 GHz Quad Core Processor
  • Dual SIM (GSM + GSM)
4. Sony Xperia ultra சோனி எக்ஸ்பீரியா:

                                                 Sony-Xperia-Z-Ultra-smartphone

சோனி நிறுவனத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.. ஜாப்பன் நிறுவனம் இது.. இதனுடைய தயாரிப்புகள் எல்லாமே மிக பிரபலமானவை. ஸ்மார்ட் போன் விற்பனையிலும் இப்போது புது புது மாடல் போன்களை தயாரித்து முன்னணி வகிக்கிறது.. குறிப்பாக சொல்வதென்றால் தண்ணீரிலேயே பயன்படுத்தும் ஸ்மார்ட் போன். இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது. Sony Xperia ultra. இதனுடைய விலை ரூபாய் 41199. இதில் 8 மெகா பிக்சல் கேமரா, ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ். , 6.4 அங்குல ஹெச்.டி திரை, HD recording, வைபை, டஸ்ட் ப்ரூப், வாட்டர் ப்ரூப்ன்னு எக்கச்சக்க வசதிகள் இதுல இருக்கு..


இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • Android v4.2 (Jelly Bean) OS
  • 6.4-inch Full HD Display
  • 2.2 GHz Qualcomm Snapdragon 800 Quad Core Processor
  • Full HD Recording
  • 16 GB Internal Memory and 2 GB RAM
  • Ultra Slim; Dust-proof and Water Resistant
  • 2 MP Secondary Camera
  • NFC Enabled
  • Wi-Fi and WiFi Hotspot Support
5. Karbonn S5 titanium – கார்பன் மொபைல்: 

karbonn vs nexus 

கார்பன் மொபைலும் இப்போ ஸ்மார்ட் போன் தயாரிப்புல பயங்கரமான வளர்ச்சி அடைந்திட்டு வருதுங்க.. இதுல காஸ்ட்லி ஐட்டம் என்று பார்த்தால் இரண்டு போன்களை சொல்லலாம். ஒன்னு karbonn S5 Titanium, இன்னொன்று karbonn Titanium s9. முதல் போன் ரூபாய் 12700. இரண்டாவது டைட்டானியம் எஸ்9 போனின் விலை ரூபாய் 17990. இதுல 13 மெகா பிக்சல் கேமரா இருக்குங்க. வீடியோ,படங்கள்ன்னு நல்ல தரமிக்கதா எடுக்கலாம். டூயல் சிம் வசதி. 5.5 அங்குல தொடுதிரை. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ன்னு நிறைய விஷயங்கள் இதுல இருக்கு.


இரண்டாவது இருக்கிற karbonn Titanium s9 போனோட சிறப்பம்சங்கள்:


1. 1.2 GHz Quad Core Processor
2. Wi-Fi Enabled
3. Dual SIM (GSM + GSM)5 MP Secondary Camera
4. Android v4.2 (Jelly Bean) OS
5. Expandable Storage Capacity of 32 GB
6. 13 MP Primary Camera
7. 5.5-inch Capacitive Touch screen

விஸ்வரூபம் ரகசியம்!

vishwaroopam

கமலின் விஸ்வரூபம் படத்தின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகநாயகனின் படம் என்றாலே பல சுவாரசியமான செய்திகள் மறைந்திருக்கும்.

ஆனால் அவற்றையெல்லாம் வெளிவிடாமல் ரகசியமாக காத்து வருகிறார் கமல்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் ரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது.


 அது என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் காட்சிகள் அனைத்தும் அடையாறு சத்யா ஸ்டுடியோ மைதானத்தில் எடுக்கப்பட்டவையாம்.

அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படும் காட்சிகள் கூட உள்ளூ‌ரில் எடுக்கப்பட்டவைதானாம்.

எல்லாமே கிராபிக்ஸ் வேலைகள் தான் என்ற ரகசியம் இப்போது தான் வெளிவந்துள்ளது.

"தல" ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு மாட்டுகிறார்!

ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தல அஜித்தின் ஆரம்பம் படம் இன்று(அக்டோபர் 31) தமிழகம் எங்கும் வெளியானது.
பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்- அஜித் கூட்டணியில் உருவான படம் ஆரம்பம்.


இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா- டாப்சி நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, ஆடுகளம் கிஷோர் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயாரித்துள்ளார்.


இப்படம் இன்று தமிழகம் முழுக்க 1400 தியேட்டர்களில் ரிலீசானது.


ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அஜித்தின் ஆரம்பம் படம் ஒருவாரத்திற்கு புக்காகிவிட்டது.
சென்னையில் அதிரடி பட்டாசுகளோடு, ரசிகர்களின் கூட்டம் சென்னை தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது.


சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே படம் வெளியானது.


சென்னை, ராக்கி தியேட்டரில் 4.30 மணிக்கும், காசி தியேட்டரில் 5மணிக்கும் வெளியானது, கோவையில் அதிகாலை 4 மணிக்கு படம் தொடங்கியது.
சென்னையில் ரசிகர்களின் கூட்டத்தோடு சிம்பு, இயக்குநர் ராஜேஷ், டாப்சி, ஞானவேல் ராஜா, பாண்டிராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே அஜித்தின் ஆரம்பம் படத்தை சென்று பார்த்தனர்.


அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர், படத்தில் தல வந்து ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு அதை மாட்டுவார், அ‌ந்த காட்சியை பார்த்துவிட்டு நான் ஒரு நடிகன் என்பதையும் மறந்து ஒரு ரசிகனாக கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் தாணு, நலிந்து போன தயாரிப்பாளர் ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் அஜித் தான். அந்த மனப்பான்மை தல ஒருத்தருக்கு மட்டும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை தவிர்த்து மதுரை, கோவை, திருச்சி, சேலம் என்று அனைத்து ஏரியாக்களிலும் ஆரம்பம் படத்திற்கு கூட்டம் களைகட்டி காணப்படுகிறது.
 
back to top