.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 3, 2014

சாகசம் செய்ய தயாராகும் பிரசாந்த்..!!




சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பவுள்ளார்.


ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ‘வைகாசி பொறந்தாச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


திருமணம் மூலம் பிரச்னையை சந்தித்த பிரசாந்த் அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு இடைவெளி விட்டு மம்பட்டியான், பொன்னர் சங்கர் போன்ற படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் சரியாக போகாததால் எந்த இயக்குனரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சிறிது காலம் பொறுத்து பார்த்த பிரசாந்த், தற்போது மீண்டும் சொந்த தயாரிப்பில் படம் எடுக்க களம் இறங்கியுள்ளார்.


சாகசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவருமே பிரசாந்த்தான். வில்லன் கேரக்டருக்காக உடம்பை ஏற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். ஜிம்மிற்கு சென்று ஆறுமணிநேரம் தினசரி உடற்பயிற்சி செய்து வருகிறார்.


சாகசம் என்ற தலைப்பை அவருக்கு பரிந்துரைத்தவர்கள் பேஸ்புக்கில் உள்ள நண்பர்கள்தானாம். இதனை அவரே புத்தாண்டு அன்று அறிவித்துள்ளார்.

அம்மாவாக அமலாபால்....?




இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் அமலாபால்.


தமிழ் சினிமாவில்தான் கதாநாயகிகள் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தயங்குகிறார்கள்.


ஆனால், மலையாள சினிமாவில் அப்படியல்ல. எத்தனை வயது குழந்தைகளுக்கும் தாயாக நடிக்கிறார்கள்.


அந்த வகையில், தமிழில் யூத்புல் கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் அமலாபால், தாய்மொழியான மலையாளத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார்.அப்படமும் வெற்றி பெற்றிருப்பதால், அதேபோன்று மெச்சூரிட்டியான வேடங்கள் நிறைய அமலாபாலை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கிறதாம்.


அதனால், தமிழிலும் பிசியாக இருக்கும் அமலாபால், அடுத்தடுத்து மாறுபட்ட கதாநாயகி வேடங்களாக மலையாளத்தில் ஓ.கே செய்து கொண்டிருக்கிறாராம்.


மேலும் இதற்கு முன்பு நரைமுடி கதாநாயகர்களுடன் நடிக்க தயங்கி நின்ற அமலாபால், இப்போது மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஹீரோக்களுடனான வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு வருகிறாராம்.

‘ஜில்லா’வுக்கு 3 இடத்தில் கத்தரி..?





விஜய்யின் ஜில்லா படத்தை பார்த்த சென்சார் போர்டு 3 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.


பொங்கல் விருந்தாக வரும் விஜய்யின் ஜில்லா படம் சென்சார் போர்டுக்கு போட்டுக் காட்டப்பட்டது.படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் 3 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்று கூறியுள்ளனர்.


இதற்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒப்புக் கொண்ட பிறகே படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.


படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ள இரண்டு காட்சிகளுக்கு கத்தரி போடப்பட்டுள்ளது.


மேலும் மதுரை பக்கத்து கெட்ட வார்த்தை வரும் ஒரு காட்சிக்கும் கத்தரி போடப்பட்டுள்ளது.


ஜில்லா தமிழகம் தவிர கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 2, 2014

ஜில்லா பேனருக்கு தடை!




ஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடைவிதித்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.


தலைவா படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மூலம் தடை உத்தரவுகள் பலப்படுத்தப்பட்டதால், மீண்டும் அதே நிலை தனது படங்களுக்கு வரக்கூடாது என்று உஷாராக செயல்பட்டு வருகிறார் விஜய்.அதனால் ஜில்லா படத்தில் எந்தவொரு பஞ்ச் டயலாக்கும் இல்லாமல், கதைக்கு தேவையான வசனங்களை மட்டுமே பேசி நடித்துள்ளார்.


அப்படி பேசி நடித்துள்ள டயலாக்கும் யாரையாவது மறைமுகமாக தாக்குவது போல் தெரிந்தால், அந்த வசனத்தையும் மாற்றி பேசி நடித்திருக்கிறார்.


பொங்கலுக்கு படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதால், ஜில்லா படத்தின் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரத்திலுள்ள சில ஏரியாக்களில் ஜில்லா விஜய்யின் ராட்சத கட்அவுட் மற்றும் பேனர்களை வைக்க அவரது ரசிகர்கள் மன்றத்தினர் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் தடை விதித்து விட்டார்களாம்.


அதனால் பேனர்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்களாம் விஜய் ரசிகர்கள்.
 
back to top