.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, September 21, 2013

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு!

In kelvarak calcium, iron is high. Kelvarak than the calcium in milk is higher in calcium.


கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.  கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.


தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய்  பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும்.  கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.  கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.  தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்   இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை  கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

சோனி SmartWatch 2 இந்தியாவில் அறிமுகம்!



சோனி நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் சோனி SmartWatch 2 இந்திய கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சோனி SmartWatch 2 கடிகாரத்தின் விலை ரூ.14.990 ஆகும். இந்த smartwatch, NFC வழியாக மற்ற சாதனங்களுடன் இணையும். 1.6MP கேமரா கொண்டுள்ளது.

சோனி SmartWatch 2, 220x176 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. பெரிய 1.6 இன்ஞ் திரை உள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளவும் மற்றும் உரை(text) செய்திகள், மின்னஞ்சல்கள், பேஸ்புக் அல்லது டிவிட்டர், காலெண்டர் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அறிவிப்புகளை அண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைந்து பெறலாம்.

ஸ்மார்ட் கேமரா அப்ளிக்கேஷன்ஸ் பயன்படுத்தி தொலைவிலிருந்து SmartWatch மூலமாக புகைப்படம் எடுக்கலாம். தரமான மைக்ரோ-USB கேபிள் வழியாக சார்ஜ் செய்ய முடியும். சோனி SmartWatch 2 waterproof (IP57) கொண்டுள்ளது. SmartWatch 2 நான்கு வண்ணங்களை வரும்.

சோனி SmartWatch 2 சிறப்பம்சங்கள்:

1.6 இன்ஞ்,
220 × 176 காட்சி
அலுமினியம் உடல்
மைக்ரோ USB சார்ஜ்
பெரும்பாலான Android தொலைபேசிகளுடன் இணக்கத்தன்மை கொண்டதாக இருக்கும்
NFC இணைப்பு
ப்ளூடூத் 3.0 கொண்டுள்ளது
பேட்டரி 3 முதல் 4 நாட்களுக்கு பயன்படுத்தப்படும்
கேமரா, Mic அல்லது ஸ்பீக்கர்கள் இல்லை


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 சிறப்பம்சங்கள்!



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்பொழுது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 என்று அழைக்கப்படும் புதிய டேப்லெட்டை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட் வாய்ஸ் காலிங் வசதி கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 விலை ரூ. 16,500 ஆகும்.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 சிறப்பம்சங்கள்:


8 இன்ஞ் மல்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே
ரெசலூஸன் 1024*768 பிக்சல்ஸ்
1.2GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi,
3ஜி
புளுடூத் 3.0
4800mAh பேட்டரி

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?






ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம். இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.

சந்திரனின் முக்கியத்துவம்


ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம். சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது. அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.
சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திரன் இருக்கும் இடம்

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது. அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது. நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும். இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு. பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும். மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம். நான்காம் ராசி:
பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம். ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி. ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல். ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம். ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள். பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள். பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம். பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும். உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம்    -    சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    -    அனுஷம்
பரணி    -    கேட்டை
கிருத்திகை    -    மூலம்
ரோகிணி    -    பூராடம்
மிருகசீரிஷம்    -    உத்திராடம்
திருவாதிரை    -    திருவோணம்
புனர் பூசம்    -    அவிட்டம்
பூசம்    -    சதயம்
ஆயில்யம்    -    பூரட்டாதி
மகம்    -    உத்திரட்டாதி
பூரம்    -    ரேவதி
உத்திரம்    -    அஸ்வினி
அஸ்தம்    -    பரணி
சித்திரை    -    கிருத்திகை
சுவாதி    -    ரோகிணி
விசாகம்    -    மிருகசீரிஷம்
அனுஷம்    -    திருவாதிரை
கேட்டை    -    புனர்பூசம்
மூலம்    -    பூசம்
பூராடம்    -    ஆயில்யம்
உத்திராடம்    -    மகம்
திருவோணம்    -    பூரம்
அவிட்டம்    -    உத்திரம்
சதயம்    -    அஸ்தம்
பூரட்டாதி    -    சித்திரை
உத்திரட்டாதி    -    சுவாதி
ரேவதி    -    விசாகம்

ஆண்ட்ராய்டு 4.4 KitKat அக்டோபர் மாதம் வெளியீடு!


நெஸ்ட்ளே நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட்  என்ற புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. ஆன்டிராயட் 4.4 கிட் காட்  அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்ளே நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது.  




அண்மையில் ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. ஆன்டிராய்டின் அடுத்த வெர்ஷன் ஓஎஸ் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் என்று கூகுள் நிறுவனம்  அறிவித்திருந்தது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே. கூகுளின் அடுத்த நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




Android 4.4 KitKat  வெண்ணிலா User Interface, புதிய அனிமேஷன்கள், Visual tweaks, புதிய அறிவிப்பு விட்ஜெட்கள் ஆகியவை மறு வடிவமைக்கப்பட்டு வரும் மற்றும் முன்பிருந்த அண்ட்ராய்டு நீல நிறத்தை மாற்றி பல்வேறு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூகுள் நிறுவனம் கூறுகின்றது. 


ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)!






ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,

கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.

அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.

ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது .அப்பாலம் ஒரு நபர் சென்றால்..ஒருவர்

எதிரே வர முடியாத அளவு குறுகலானது.

பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு,பெரும்பகுதியை ஆடு கடந்ததும்,ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது..

இப்போது ஆடும்.ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் ..'நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன்...சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால்..நான்

சென்றுவிடுவேன் ..'என்றது.

இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது ''நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன்'

நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ' என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு ..'நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன்' என தான் பின்னால் சென்று..ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது.ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு...தன் புத்திசாலித்தனத்தால்..ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன்..கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால்

உயிர் பிழைத்தது.

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'




ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் பப்பாளி, திராட்சை, சப்போட்டா, மா, கொய்யா ரகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
தோட்டத்திலேயே கிடைமாடுகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்கி, அவற்றின் சாணத்தை சேகரிக்கிறேன். மாடுகளுக்காக சிறிய குளம் அமைத்துள்ளேன். மலைப்பகுதியில் மேய்ச்சல் முடிந்து, இரவில் இங்கே இளைப்பாறும். மாட்டுச்சாணம், கோமியம், உளுந்து பயறு, நாட்டு சர்க்கரையுடன் கரைசலை ஊற்றப் போகும் இடத்தின் மண்ணையும் கலந்து 48 மணி நேரம் ஊறவைப்பேன். இதுதான் ஜீவார்மித கரைசல். மண்ணையும், என்னையும் வாழவைக்கிறது.


புளித்த தயிரை தண்ணீரில் கரைத்து தெளித்தால், செடிகளுக்கு நல்ல கிரியாஊக்கியாக செயல்படுகிறது. பூச்சி தாக்குதல் இருந்தால் அக்னி அஸ்திரம் இருக்கவே இருக்கிறது. இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் பொருட்களை அரைத்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி செடிகளுக்கு தெளிப்பேன். திராட்சை கொடிகளுக்கு கீழே, கடலை சாகுபடி செய்துள்ளேன். அதேபோல, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, அவற்றை அப்படியே பறித்து போட்டால், உரமாகிறது.
திராட்சையில் பழச் சீசனில் இலைகள் உதிரும். அவற்றை அப்படியே மண்ணில் மட்கச் செய்து உரமாக்கி விடுவேன். திராட்சை செடிக்கு பசுந்தாளும், பசுந்தாளுக்கு திராட்சை இலைகளும் நல்ல உரம் தான். வாழையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உள்ளேன். எல்லாமே நாட்டு ரகம் தான். 


மலையில் மழைபெய்தால் அங்கிருந்து வரும் நீர், என் தோட்டத்திற்கு தான் முதலில் பாய்கிறது. சுத்தமான தண்ணீராக இருப்பதால், தோட்டத்திற்கு வளம் சேர்க்கிறது. என் தோட்டத்தின் மண்ணெல்லாம் மெத்தை போன்று மிருதுவாக இருக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்பதால், மண்ணும் மிருதுவாகி விட்டது. தனியாக மண்புழு உரம் இடுவதில்லை. தோட்டத்து மண்ணைத் தோன்றினால் பொது பொதுவென்று மண்புழுக்கள் உதிரும். மண் நன்றாக இருந்தால் தானே, புழுக்கள் உயிரோடு இருக்கும். மண்ணும் வளமாக, உயிரோடு இருப்பதால் திராட்சையின் தரம் நன்றாக இருக்கிறது. இதுவே, ஏற்றுமதிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது என்கிறார், ஜானகிராமன்.

இவரிடம் பேச: 91500 09998.

Click Here

‘யா யா’ - விமர்சனம்!



சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை.


சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும் சந்தானம் பேச்சுக்கு குறைவில்லை.


சிவாவுக்கு ஜோடி தன்ஷிகா. சந்தானம் ஜோடி காதல் சந்தியா, கூடவே இளவரசு, ரேகா, சித்ராலட்சுமணன் நடித்திருக்கிறார்கள். டாக்டர் சீனிவாசன் தனி ஆவர்த்தனம் பண்ணுகிறார். அவருக்கு ஜோடி தேவதர்ஷினி.
எல்லாம் சரி கதைன்னு எதையாவது சொல்ல முடியாதா… அப்படீன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது…

Ya Ya Movie New Stills... glintcinemas.com

 


சிவாவுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. அப்படியே வேலைக்கு போனாலும் அரசாங்க வேலைக்குத்தான் போவேன்னு அடம் புடிக்கும் கேரக்டர். சிவா அப்பா இளவரசு கட்சியில வட்டசெயலாளர் அதை பயன்படுத்தி சிவாவுக்கு வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார். அதுக்காக பெண் கவுன்சிலரை பார்க்கப்போகும் சிவா மீது அந்த கவுன்சிலருக்கு காதல் பிறக்கிறது.


அப்படி வேலைக்கு போகும் வழியில் பஸ்சில் தன்ஷிகாவை பார்க்கிற சிவாவுக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்காக பல தகிடுதத்தங்கள் செய்கிறார். 


தன்னை விட்டு விட்டு தன்ஷிகாவை காதலிக்கும் சிவாவிடம் இருந்து தன்ஷிகாவை பிரிக்க பெண் கவுன்சிலர் திட்டமிடுகிறார். இதற்காக சிவாவின் நண்பன் சந்தானத்தை பணம் கொடுத்து கவுன்சிலர் விலைக்கு வாங்குகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு நண்பன் சிவாவின் காதலை பிரிக்க சதி செய்கிறார் சந்தானம்.


ஒரு கட்டத்தில் சந்தானம் எல்லா உண்மைகளையும் சிவாவிடம் சொல்லிவிட அது பெண் கவுன்சிலருக்கு தெரிவருகிறது. தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார். அதேபோல, தன்ஷிகாவால் பாதிக்கப்பட்ட சீனிவாசனும் தன்ஷிகாவை கடத்த திட்டமிடுகிறார்.


இதற்கிடையில், காதல் சந்தியாவுக்கும் சந்தானத்துக்கும் திடீரென கல்யாண ஏற்பாடு நடக்கிறது. கல்யாண மண்டபத்தில் பெண்ணை கடத்த வரும் சீனிவாசனும், பெண் கவுன்சிலரும் தன்ஷிகாவை பார்க்கிறார்கள்.
தன்ஷிகா கடத்தப்பட்டாரா? சிவாவின் காதல் கைகூடியதா? சந்தானம் கல்யாணம் நடந்ததா? பவர்ஸ்டார் சீனிவாசன் என்ன ஆனார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.


அப்பாடா…. இந்த படத்தோட இயக்குனர் கூட இவ்ளோ தூரம் யோசிச்சி கதை எழுதியிருக்க மாட்டார்னு நெனைக்கிறேன்… அந்தளவுக்கு யா யா கதையை சொல்லிட்டேன்…


இனிமே தமிழ் சினிமான்னா கதையிருக்காது… ஒரே ரூமுக்குள்ளயே படம் புடிச்சிக்குவாங்க… காமெடின்னு இஷ்டத்துக்கு எதையாவது பேசிகிட்டே இருப்பாங்க… கண்ண மூடினா பாட்டு பாடுவாங்க… பவர்ஸ்டார் சீனிவாசனுக்கெல்லாம் ஜோடி போட்டு டூய்ட் ஆட வைப்பாங்க… ஆக்ஷன் பிளாக் வைப்பாங்க…


இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கிற ராஜசேகரன் இந்த படம் மூலமா இயக்குனராகியிருக்கிறார். விஜய் எபினேசர் இசையமைத்திருக்கிறார். பல இடங்களில் பழைய பாடல்களையும், ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களையும் போட்டு பேலன்ஸ் பண்ணியிருக்காரு. எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ‘யா யா’ படத்தோட பேர் போலவே யாருக்கும் புரியாது…

முந்திரிக் கொத்து - சமையல்!

Moong dal, sesame, coconut varuttu for three separate terms to change color.



என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 1 கிலோ,
தேங்காய் - 2 (துருவியது),
எள் - சிறிது,
பச்சரிசி - 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் - சிறிது,
கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
 


எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.  கருப்பட்டி அல்லது  வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாகப் பாகு காய்ச்ச வேண்டும். வறுத்த பாசிப் பருப்பை மிதமாக  அரைத்து, அதில் ஏலக்காய் தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி, பாகை ஊற்றிக் கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ள வேண்டும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த  மாவில் நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். 


மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!



 In the spirit of keeping a clean cloth maitamavai role in the tumor idli take away the speed, aravitavum.

 


என்னென்ன தேவை?

மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது),
ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது),
சர்க்கரை - 1 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் 1/2 கப்,
ஏலக்காய் தூள்- சிறிது,
நெய் - தேவைக்கேற்ப.
 

எப்படிச் செய்வது?  

மைதாமாவை ஒரு சுத்தமான துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து, ஆறவிடவும். பின் 2 லு கப் தண்ணீரை  கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, 2 டீஸ்பூன் நெய் விடவும். கொதிக்கும் தண்ணீரில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி  வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். இத்துடன் ரவையையும் தேங்காயையும் நன்கு சிவக்க  வறுத்து, சர்க்கரை சேர்த்து வதக்கி சுருள எடுத்து வைத்துக் கொள்ளவும். இது பூரணம். கையில் நெய் தொட்டுக் கொண்டு மேல் மாவில் இருந்து  (மைதா கலவையில்) ஒரு எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை பிடித்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில்  வேக வைத்து எடுக்கவும்.


திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!


 Groundnut oil fry the dough. After pouring the boiling milk than




என்னென்ன தேவை?

கடலை மாவு  - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்.
 


எப்படிச் செய்வது?  

கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.
 

மார்ஸ் கிரகத்திற்க்கு பாம்பு ரோபோட்: நாஸா



 
 

நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு சோஜோர்னர் (sojourner), ஸ்பிரிட் (spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) ரோபோட்களை அனுப்பி மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின் மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு. 




இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் இருக்கும் மண்ணை சோதனை செய்து அதை பற்றிய தகவலை பூமிக்கு அனுப்பும். ஆனால் இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் உள்ள சில முக்கியமான இடங்களுக்கு சென்று மண்ணை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை. அதற்க்காகவே பாம்பு ரோப்பாட்டை (snake robot) அடுத்து மார்ஸ்க்கு பரிசீலனை செய்கின்றனர். பாம்பு வடிவ ரோபோட் மார்ஸ் கிரக்கத்தில் உள்ள மத்த ரோபோட்கள் செல்ல முடியாத இடத்திற்க்கு சென்று மண்ணை பரிசோதிக்க உதவும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. 


செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்!




மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. 



இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 




எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான். 



ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. 



 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார். 



எந்த கிரகம் வசதியானது?

* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.

ஐ.நா.- இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்! மன்மோகன் சிங் வலியுறுத்தல்!



ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த உள்ளார். 


நியூயார்க்கில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வரும் 28ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைப்பார் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி, அதில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்று ஐநா பொதுச்சபையில் பிரதமர் வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். 


செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரதமர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரும் 27ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுஜாதா சிங் கூறியுள்ளார். அப்போது ஆசியா கண்டத்தில் பலம்மிக்க நாடான இந்தியாவை ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க மன்மோகன்சிங் வலியுறுத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 




ஜநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. ஜநா கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


இந்தியாவால் தேடப்படும் ஹபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் எந்தவித தடையுமின்றி நடமாடி வருகின்றனர். இந்தியா கோரியபடி பாகிஸ்தான் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நவாஸ் ஷெரிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. 

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும் தைராய்டு!


கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையில் ஏதாவது இருக்கிறதா?



இதையெல்லாம் தாண்டி எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. என்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட நீங்கள் உடனடியாக தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.



Male thyroid anatomy

 



இது குறித்து நம்மிடம் விவரித்த டாக்டர்கள்,”இப்போதெல்லாம் இந்த தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 



அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். 



தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம். 



உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். 



பாதுகாப்பு முறை: 

தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். 



உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.” என்றனர்.

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!


ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!
 
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!

கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் நினைவு மண்டபமும் ஒருசேர ஒரே இடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியமல்லவா?

அந்த ஆச்சர்ய கன்னியாகுமரியை இப்போது அறிவோம்
 

கன்னியாகுமரியில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கின்றன.  இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழாவாக திகழ்கின்றது கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரையைக் காணக்காண மனதெல்லாம் உற்சாகம் பரவும்
1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல அம்மனின் சக்தி பீடங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாக திகழ்கிறது
 

கன்னியாகுமரி அம்மன் ஆலயம்
 
கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.
 

திருவள்ளுவர் சிலை

கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமாய் வானுயர நின்ற வடிவில் எழிலோடு நம் அய்யனின் திருச்சிலை  அமைந்திருக்கிறது   இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை திறந்த வெளியில் நிற்பதால் கடல் காற்றாலும், மழை மற்றும் வெயிலாலும் சேதம் அடைகிறது. இதை தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்படுகிறது. சிலையில் படிந்துள்ள உப்பு படிவங்கள் உறிஞ்ச பேப்பர் ஒட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர் வேக்கர் சிலிகான் மெட்டீரியல் மூலம் சிலை முழுவதும் ரசாயன கலவை பூசப்படுகிறது.
 

காந்தி நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பாகும்
 

விவேகானந்தர் நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். 1892ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையை முடித்துக்கொண்டு  குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது. குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
நாங்களும் ஒருமுறை கன்னியாகுமரி சென்று அந்த ஆச்சர்யத்தை உணருங்கள் 
 
 

கன்னியாகுமரிக்கு அருகே
அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை

முயலும் ஆமையும் (நீதிக்கதை)!




ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.
 
 

தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது.
 

இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.
 

ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
 

முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.
 

தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..
 

அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.
 
 

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…!



அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவில் லீகலாய் நுழைய முடியும்.


sep 22 - ravi passport

 



இப்படிதான் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை மோஸாட் – ஹமாஸ் தலைவரை துபாயில் கொல்ல கூட இந்திய பாஸ்போர்ட் புக்கை திருடித்தான் இந்த காரியத்தை முடித்தது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் (Z ) வகை 500 பாஸ்போர்ட்கள் காணாமல் போய் (Z) வைத்திருந்தாலே ஒரு மாதிரி செக் செய்யும் அவலம் இன்றும் ஏர்போர்ட் இமிகிரேஷனில் உலகம் முழுவதும உண்டு. இப்போது இந்த தொல்லை!.


தற்போது ஒரு இந்தியன் பாஸ்போர்ட்டுக்கு சுமார் 7 முதல் 10 லட்சம் வரை விலை போகும்-சர்வ சாதாரணமாய். இந்திய பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது இதை ஒப்பு கொண்டார். ஹும்.. பாஸ்போர்ட் தொலைஞ்சா எம்பஸில சொல்லாம், எம்பஸியே தொலைச்சா யாருக்கிட்ட சொல்ல முடியும்…!

குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!


 
ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார். அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
 

வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
 
 

அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப் பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..
அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
  

தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..  
 
குல்லா மூட்டையைக் காணாது .. 
 
மரத்தை ஏறிட்டு நோக்க ..   
 
குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன. 

அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .

அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .

வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் 
கொண்டு   வியாபாரத்திற்குக்  கிளம்பினார் .

  எந்த காரியத்திலும் நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களுக்கு  சேதமின்றி திரும்பக் கிடைத்தது . 
 

 
back to top