.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, October 31, 2014

கல்கண்டு (2014) - திரைவிமர்சனம்

நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை.

அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஆனால், இளையவனான கார்த்திக்கோ பிளஸ்-2-வில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார். இதனால், அவரை மருத்துவ படிப்பு வைக்க முடியவில்லை.

இதனை தனது அண்ணனிடம் சொல்கிறார் கார்த்திக். அவரோ, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிடலாம் என ஆலோசனை கூறுகிறார். அதன்படி, முக்கிய அமைச்சரிடம் பேசி, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க ஏற்பாடு செய்கிறார். அந்த பணத்தை கார்த்திக்கே அமைச்சரிடம் கொடுக்க செல்கிறார்.

பணத்தை வாங்கிக் கொண்ட அமைச்சர் அவரது ரிஜிஸ்டர் நம்பரையும், பேரையும் எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதை எழுதிக் கொடுக்கும் கார்த்திக் தன்னுடைய ரிஜிஸ்டர் நம்பரான 10015-ஐ 1015 என்று தவறுதலாக எழுதிக் கொடுத்துவிடுகிறார். பின்னர், மாணவர் சேர்க்கைக்கான பெயர் விவரம் வெளியிடப்பட்டதில் கார்த்திக் பெயர் வரவில்லை.

கோபமடைந்து அமைச்சரிடம் சென்று நியாயம் கேட்கிறான் கார்த்திக். அமைச்சரோ, அவன் எழுதிக்கொடுத்ததை நினைவு கூர்கிறார். அப்போது கார்த்திக் தான் செய்ததுதான் தவறு என்பதை உணர்ந்து அமைச்சரிடம் கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால், அவரோ ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி கார்த்திக்கை அனுப்பி விடுகிறார்.

பின்னர், சோகத்துடன் திரும்பும் கார்த்திக், வீட்டில் இந்த உண்மையை மறைத்து, தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிட்டதாகவும், அதற்காக சென்னைக்கு போவதாகவும் கூறிவிட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்குகிறார்.

அதே லாட்ஜில் தங்கியிருக்கும் அழகப்பன் (கஞ்சா கருப்பு), ராமநாதன் (சாமிநாதன்), டவுட் செந்தில் ஆகியோர் இவருக்கு நண்பர்களாகிறார்கள். ஒருநாள் தன்னுடைய சோகத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் கார்த்திக்கிடம் உன்னுடைய பணத்தில் மெடிக்கல் சீட் வாங்கி படிப்பவர் யார் என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த பணத்தை வாங்குவோம் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

அதன்படி, மெடிக்கல் காலேஜ் பியூனின் உதவியோடு அந்த ரிஜிஸ்டர் நம்பருக்குண்டான நபரை தேடிக் கண்டுபிடிக்கிறார் கார்த்திக். அவர்தான் நாயகி கார்த்திகா (டிம்பிள் சோப்டே). அவரைப் பார்த்ததுமே காதல் வயப்பட்டு விடுகிறார் கார்த்திக். அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஆனால், அவளோ இவனை கண்டுகொள்வதாக இல்லை.

ஒருநாள் அவளிடம் தன்னுடைய காசில்தான் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்றும், பணத்தை திருப்பிக் கொடு, இல்லையென்றால் என்னை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் கார்த்திக். வேறுவழி தெரியாத கார்த்திகாவும், தோழியின் ஆலோசனைப்படி கார்த்திக்கை காதலிப்பதாக ஒப்புக் கொள்கிறாள்.

படிப்பு முடிந்ததும் கார்த்திக்கிடம் சொல்லிக் கொள்ளாமல் அவளுடைய சொந்த ஊருக்கு சென்று விடுகிறாள் கார்த்திகா. அவள் எங்கு சென்றால் என்பது தெரியாமல் அவளை தேடி அலைகிறார் கார்த்திக்.

இறுதியில், கார்த்திகாவை தேடிக் கண்டுபிடித்து அவளுடன் ஒன்று சேர்ந்தாரா? கார்த்திக்கின் தில்லு முல்லுவை அவரது பெற்றோர்கள் அறிந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கஜேஷ், அவருடைய அப்பா ஆனந்த் பாபுவை அப்படியே திரையில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார். ஆட்டத்திலும், கொண்டாட்டத்திலும், நடிப்பிலும் தன்னுடைய தாத்தா நாகேஷ், அப்பா ஆனந்த் பாபு ஆகியோரின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். நாயகியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். இறுதிக் காட்சியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் அண்ணனாக வரும் அகிலுக்கு சிறப்புத் தோற்றம்தான் என்றாலும், அழுத்தமான நடிப்பு. அண்ணனுக்குண்டான பொறுப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

நாயகி டிம்பிள் சோப்டே அழகாக இருக்கிறார். தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் கஞ்சா கருப்பு, சாமிநாதன், டாடி ஒரு டவுட் செந்தில் ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு. மெடிக்கல் ரெப்பாக வரும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார். மனோபாலாவை, மகாநதி சங்கரின் ஆட்கள் அடிக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

பாசம், காதல், நகைச்சுவை கலந்த கலவையாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தாலும், படத்தை இறுதிவரை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ், டுவிஸ்டுகளை வைத்து கொஞ்சம் குழப்பமடையவும் வைத்திருக்கிறார்.

கே.வி.கே.சுரேஷின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். கண்ணனின் இசையில் மீனே வாஸ்து மீனே பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘கல்கண்டு’ தித்திக்கும்.

Friday, July 4, 2014

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர் - பரபரப்பை ஏற்படுத்திய ஸ்டில்கள்


புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ஐஸ்கிரீம் என்ற படத்திலிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா.

டோலிவுட்டில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ஹார்ட் அட்டாக், மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ஐஸ்கிரீம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் வர்மா அவரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தளத்துக்குள் லைட் மேன், உதவியாளர்கள் உள்பட அனைவரையும் வெளியேற்றினார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். ரகசியமாக தேஜஸ்வி நடித்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டன.

Saturday, February 1, 2014

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!



திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?

இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள்.

இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர். ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

இதற்கிடையில் ஆர்ம்பத்திலேயே சொன்னது மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.

மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ சொல்ற மாதிரி இல்ல.

Tuesday, January 21, 2014

அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது..!



அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது:-

சூர்யா - சமந்தா நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்கவுள்ளன.

யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படமான அஞ்சான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளன. மிக வேகமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்புகள் பொங்கலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நிறைவுபெற்றன.

ஏக்சன் படமாக உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை தொடங்கி சுமார் ஒரு மாதம் மும்பை மற்றும்
மஹாராஷ்டிராவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். சூரி, வித்யூ ஜம்மவால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர்

துப்பாக்கி ரீமேக் ரிலீஸ் தள்ளிப்போகிறது..!



இளையதளபதி விஜய் - காஜ்ல் அகர்வால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படம் ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மே மாதம் முதல் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு ஜூன் 6 ஆம் தேதிக்குத்
தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வி.கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த திரைப்படம் துப்பாக்கி. இப்படம் தமிழில் மாபெரும்
வெற்றியடைந்ததால் தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியிலும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸே இயக்கவுள்ளார்.

அக்‌ஷய்குமார் மற்றும் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஹாலிடே எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தி ரீமேக்கினை
ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படம் வருகிற மே 1 ல் வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் IPL போட்டிகள் மே மாதத்தில் தொடங்குவுள்ளதால் இப்படத்தின் வெளியீட்டினை ஜூன் 6 ற்குத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரியில்
தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் வசனத்தில் 'யாழ்'...!!!



யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகிறது ‘யாழ்’ திரைப்படம்.

மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.

இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் எம்.எஸ்.ஆனந்த் படம் பற்றி கூறுகையில், யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.

இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும், பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை, வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.

‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக் கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது.

மேலும் யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின்போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

குடியரசு தினத்தில் ரிலீஸாகும் படங்கள்.....



குடியரசு தினத்தையொட்டி ‘நேர் எதிர்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘கோலி சோடா’, ‘நினைத்தது யாரோ’ ஆகிய 4 புது படங்கள் ரிலீசாகிறது.

பொங்கலுககு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் வந்ததால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் பொங்கலுக்கு சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது அவை குடியரசு தினத்தையொட்டி வருகின்றன.

‘நேர் எதிர்’ படத்தில் ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.

‘கோலி சோடா’ படம் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கிஷோர், பாண்டி போன்றோர் நடித்துள்ளனர். குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் என்.சுபாஷ் சந்திரபோஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பரத் சீனி தயாரித்து உள்ளார்.

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. நடிகை ஸ்ரீப்ரியா இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரிஷ், நித்யா மேனன் நடித்துள்ளனர். ஆண்களின் வக்கிரமங்களுக்கு எதிராக போராடும் இளம் பெண்ணை பற்றிய கதை.

‘நினைத்தது யாரோ’ படத்தை விக்ரமன் இயக்கியுள்ளார். நாயகனாக ரஜித், நாயகியாக நிமிஷா நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.ரமேஷ், இமானுவேல் தயாரித்து உள்ளனர். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. ஸ்டுடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

விரைவில் விஜய் - சமந்தா...



முதல் முறையாக நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரவுள்ளராம் நடிகை சமந்தா.

கடந்த 2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது விஜய் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தின் தலைப்பு 'வாள்' எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. அதனை தொடர்ந்து தீபிகா படுகோன் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சற்று முன் கிடைத்த தகவலின் படி
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளாராம்.

விஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய். அப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் விஜய் மோதலை அடுத்து சிம்பு தனுஷ் மோதல்!



சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் இசை வெளியீடு வருகிற காதலர் தினத்தில் வெளியாகவிருக்கிறது. அதே நாளில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்தின் இசையும் வெளியாகவுள்ளது.

சமீபமாக இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரது ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கின.

விஜய்மற்றும் அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபடக்கூடதென இரு பெரும் நட்சத்திரங்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

விஜய் - அஜித்தின் மோதலுக்குப் பிறகு வருகிற காதலர் தினத்தில் சிம்பு மற்றும் தனுஷ் மோதவுள்ளனர்.

இரு நட்சத்திரங்களுமே சமமான அளவில்
ரசிகர்களைக் கொண்டிருப்பதால் இம்முறையும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருமே இந்த வெளியீட்டினைப் பேரார்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வாலு மற்றும் வேலையில்லாப் பட்டதாரி படங்களின் ஆடியோ ஒரே நாளில் வெளியாவதை வாழ்த்தியிருக்கும் சிம்பு, போட்டிக்குத் தயாரா என தனுஷிடம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவைத் தம்பி என்றழைத்த தனுஷ்..!



லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை நடிகர் தனுஷ் தம்பி என்று அழைத்திருக்கிறார்.

சிம்பு விரைவில் தனது முப்பவதாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். இதுகுறித்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தான் இன்னு சில தினங்களில் முப்பது வயதை எட்டவிருப்பதாகவும், தனது டீனேஜிலிருந்தே தனது முப்பதாவது வயதினை எட்டுவது குறித்து விரும்பியதாகவும், தற்பொழுது முப்பதாவது வயதினை அடைந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வண்ணம் தனுஷ் சிம்புவிற்கு “ வா தம்பி, இட்ஸ் நாட் டூ பேடு” என்று பதிலளித்துள்ளார்.

தனுஷ் மற்றும் சிம்புவின் இந்த உரையாடல் அவர்களது ரசிகர்களால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்துவருகிறார். மேலும் வாலு திரைப்படத்திலும், செல்வராகவன்
இயக்கவிருக்கும் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

தனுஷ் தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அனேகன் திரைப்படத்திலும், வேல்ராஜ் இயக்கிவரும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திலும்
நடித்துவருகிறார்.

ஹேப்பி பர்த்டே அப்பாடக்கர்..!



இன்று அவர் தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அப்பாடக்கர் சந்தானம்..

சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் முக்கியக் காமெடியனாக அறிமுகமான சந்தானம், விஜயின் சச்சின், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், சிம்புவின் வல்லவன் என்று படிப்படியாகப் பிரபல நகைச்சுவை நாயகனாக உருவாகிவந்தார்.

சந்தானத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இயக்குனர் எம்.ராஜேஷின் சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படங்கள் அமைந்தன என்றால் அது மிகையல்ல. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய அப்பாடக்கர் என்ற வார்த்தை மக்களிடையே மிகப்பிரபலமாகப் பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் இவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தன.

தற்பொழுது எண்ணற்ற தமிழ்ப் படங்களில் நடித்துவருவதுடன், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நுழைந்திருக்கிறார் நமது அப்பாடக்கர். விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் அலங்கரித்த இடத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கரித்துவருகிறார் சந்தானம்.

நகைச்சுவை நடிகராக இருந்துவரும் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் வருகிற தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மெஹா ஹிட்டடிக்க  வாழ்த்துக்கள்.

 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சந்தானம்.

மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக,சிம்பு - நயன்தாரா...



 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடிக்கும் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் மனம்விட்டு பேசிப் பழகும் நண்பர்களாக வலம் வருகிறார்கள்.கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது புதிய படத்துக்கு சிம்புவை நாயகனாக ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் நாயகி தேர்வில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இறுதியில் கதைக்கு நடிகை நயன்தாரா பொருத்தமானவராக இருப்பார் என்ற யோசனை எழுந்தது.

கதை சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு தொடர்ந்து 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஜனவரி முதல் வாரத்தில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

புத்தாண்டை ஒட்டி நடிகர் சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு பொங்கல் விடுமுறையில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக சிம்பு - நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கும் இருவரும் முதல் நாள் படப்பிடிப்பு முதலே உற்சாகமான நண்பர்களாக பேசிப் பழகி வருகிறார்களாம். மதிய உணவு இடைவேளையின்போது இருவரும் படக்குழுவினருடன் உணவை பகிர்ந்து உண்டு, சகஜமாக பழகி வருகின்றனர். தொடர்ந்து இந்த வார இறுதி வரை இருவரும் கலந்துகொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கும் சூழலில் சிம்பு- நயன் தாராவின் காதல் காட்சிகள் சிறப்பாக படமாகி வருவதில் கூடுதல் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர், படக்குழுவினர்.

விஜய்சேதுபதி– விஷ்ணு, யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து....



பையா, வழக்கு எண் 18/9,வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் N.லிங்குசாமி, N.சுபாஷ் சந்திபோஸ் தயாரிப்பில், தென்மேற்குப்பருவக்காற்று,நீர்ப்பறவை ஆகியவெற்றிப்படங்களை இயக்கிய,தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் இடம் பொருள் ஏவல்’.

விஜய்சேதுபதி– விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் முதன்முறையாக இணைகின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் , இயக்குனர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று, யுவன்சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணி இடம் பொருள் ஏவல் படத்திற்காக முதன்முறையாக இணைகிறது.

இப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இப்படத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்குகிறது.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் எண்ட்ரி..!!!



மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் சுஹாசினி, லிஸி, குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த விருந்தை நடத்தினர். ஆந்திராவில் சிரஞ்சீவியும், கன்னடத்தில் அம்ரிஷூம் நடத்தினர்.

இந்த ஆண்டு மோகன்லால் நடத்தினார். 80களில் பிரபலமாக இருந்த அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினியையும் அழைத்தனர்.

அவர் நான் கோச்சடையான் பணியில் பிசியாக இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மோகன்லால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த டின்னருக்கு 80களில் டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அந்த விருந்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் வந்தார் ரஜினி. விருந்து முடியும் வரை அவர்களோடு இருந்து ஜாலியாக சிரித்து பேசிவிட்டு கிளம்பி விட்டாராம்.

ஜில்லா & வீரம் படங்களின் லாப நஷ்டக் கணக்கு - சில குறிப்புகள்..!



சும்மா இருப்பதே சுகம் … அதிலும் நான் மற்றும் என்னை போன்ற சில விவரம் தெரிந்த சினிமா மனிதர்கள் யாரையும் பகைத்துகொள்ள வேண்டாம் என நினைக்கும் சில பத்திரிகை நண்பர்களும் சும்மா இருப்பதே சுகம் … யாருக்கு என கேட்கிறீர்களா … யாருக்கோ .. யார் யாருக்கோ… விதி நான் இன்று சும்மா இருப்பதாக இல்லை

1. ஜில்லா திரைப்படம் யார் யாருக்கு லாபம் … யார் யாருக்கு நஷ்டம்

2. வீரம் திரைப்படம் யார் யாருக்கு லாபம் யார் யாருக்கு நஷ்டம்

3. ஏன் உண்மைகள் வெளி வருவதில்லை

4. என்று மாறும் இந்த நிலை

இதுதான் இன்றைய கருத்துகள். உண்மை என்பதால் சிலருக்கு சுடும் .. சிலருக்கு சுகம்.

ஜில்லா கல்லா கட்டவில்லை .. மினிமம் காரண்டீ (minimum guarantee) முறையில் திரையிட்ட அனைவருக்கும் நஷ்டம் … நிச்சயம் …பல வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம்.(இதே கதை வீரத்துக்கும் பொருந்தும் .. ஆனால் விலை சற்றே குறைவு என்பதால் நஷ்டமும் குறைவு. ..

அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி முழுமையாக வரவில்லை .. வரி ஏய்ப்பில் நிறைய திரை அரங்குகளுக்கு பங்கு உண்டு .. அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வரவுக்கு வாய்ப்பு உண்டு.

லாபம் யாருக்கு என கேட்டால் … ஜில்லா படத்தில் தயரிப்பாளருக்கு நல்ல லாபம். நடிகர் விஜய் முதல் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் லாபம் . சில திரை அரங்கு தவிர பல திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் …

விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் லாபம் . படம் முழு திருப்தி தராததால் 300 500 என காசு கொடுத்து வாங்கிய ரசிகர்களுக்கு நஷ்டமோ நஷ்டம்…

வீரம் திரைப்படத்தில் தயரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை … வினியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லை .. ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் இல்லை …ஆனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் .
வரி ஏய்ப்பு செய்வதில் ஜில்லாவுக்கு இணையாக வீரமும் உண்டு ..

ஏதோ இரு படங்களுக்கும் வரி உண்டு என முடிவு செய்ததால் அரசாங்கத்துக்கு கொஞ்சமாவது வருமானம் வந்தது..

சரி இதெல்லாம் உண்மையாக இருக்குமானால் … ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை

சிறு பத்திரிகைகளை சிறிய விலைக்கும் பெரிய பத்திரிகைகளை பெரிய விலைக்கும் யாராவது வாங்கி விடுகிறார்களா… யாமரியேன் பராபரமே..

என்று மாறும் இந்த நிலை …

மக்கள் அதிக விலைக்கு டிக்கட் வாங்க மாட்டோம் என முடிவு எடுத்தால்…

திரை அரங்கு உரிமையாளர்கள் கருணை வைத்தால் …

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் அரசாங்கம் தியேட்டரிலும் கண் வைத்தால் ..

பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால்…

ஊடகங்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால்…

நல்ல திரைப்படங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ..

நடிகைகளுடன் அரட்டையடிப்பதை நிறுத்திய சந்தானம்..!



தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கதாநாயகிகளாக தேடிப்பிடித்து சென்று கடலை போடுவார் சந்தானம். படப்பிடிப்பு பேக்கப் ஆனாலும் மணிக்கணக்கில் அம்மணிகளுடன் கலகலத்து விட்டே விடைபெறுவார். இதெல்லாம் ஆர்யா அவருக்கு காட்டிக்கொடுத்த ஜாலியோ ஜிம்கானா. ஆனால், இப்போது ஆர்யாவுக்கு பிக்கப் நடிகர் என்று சில நடிகர்கள் மேடைகளிலேயே அட்டாக் கொடுத்ததால் இனியும் நடிகைகளுடன் சகவாசம் வைத்துக்கொண்டால், இமேஜ் டேமேஜாகி விடும் என்று கடலை போடுவதை விட்டு விட்டார். அவரைப்பார்த்த சந்தானமும், காமெடியனுக்கு மட்டும் இமேஜ் இல்லையா? என்ன? என்று சொல்லிக்கொண்டு தானும் அரட்டையை நிறுத்தி விட்டார்.

யாராவது, நடிகைகள், தான் சீரியசாக காமெடி சீன் யோசித்துக்கொண்டிருக்குபோது அருகில் வந்து அமர்ந்து, வாயாடத் தொடங்கினால், செம காண்டாகி விடுகிறார். சிரிக்க வைக்க எதையாவது சிந்திக்கிறப்ப என்னை சீரியசாக்கிடாதே என்று அம்மணிகளை விரட்டியடிக்கிறார்.

ஆனால் இப்படி அவர் திடுதிப்பென்று மாறியதற்கு இமேஜ் மட்டுமே காரணமில்லையாம். கவுண்டமணி, வடிவேலு போன்ற மெகா காமெடியனகள் ரீ-என்ட்ரி ஆகியிருப்பதால், இந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்தால் வீணாகி விடுவோம் என்று உஷாரான சந்தானம், மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொள்வது முயற்சியாக தீவிரமாக யோசிக்கத் தொடங்கி விட்டாராம்.

 முன்பைவிட தான் நடிக்கும் காமெடி காட்சிகள் இனி ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் சதா சிந்தனையிலேயே சிறகடிக்கிறாராம் சந்தானம். அதனால் அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சீரியசாக மாறிவிட்டது போலவே தெரிகிறதாம்.

சூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது..!




லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா. ஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.

கமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார். திடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.

அதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம். அஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.

தனுஷ் - கஸ்தூரிராஜா மோதல்..!



கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ஐஸ்வர்யா, இன்னொரு மகன் செல்வராகவன், மகள், மருமகன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் சரவணன், பொன்ராம், துரை.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் பாடலுக்கு அதில் நடித்தவர்களே ஆட்டம்போட்டனர். கஸ்தூரிராஜாவும் ஒரு பாட்டுப் பாடினார். பின்னர் படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. பின்னர் தனுஷ் பேசினார். அப்பா நடத்தின் ஆடியோ பங்ஷன்ல முதல் தடவையாக கலந்துக்குறேன். நான் நடிகனாகித்தான் கலந்துக்கணும்னு இருந்திருக்கு. சின்ன வயசுல அவருக்கு பயந்து நாங்க நின்னுக்கிட்டு இருந்த மாதிரியே இன்னிக்கு அவரு பயந்து நின்னுக்கிட்டு இருந்ததை பார்க்க சந்தோஷமா இருந்திச்சு. இந்த படத்துல ஒரு பாட்டு பாடச் சொன்னார். நேரம் இல்லாததால நான் பாடலை. போடா நான் வேற ஆளவச்சி பண்ணிக்கிறேன்னு பண்ணிட்டார். அவருக்காக இந்த மேடையில பாடுறேன் (சில வரிகளை பாடினார்). அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அடுத்த படத்துலையாவது தமிழ் பாடகர்களுக்கு சான்ஸ் கொடுங்க என்றார்.

உடனே மேடைக்கு வந்த கஸ்தூரி ராஜா "தமிழ் தெரியாதவங்கள தமிழ்ல பாட வைக்கிறது தான் சாதனை. இவ்வளவு சொல்ற, நீ மட்டும் இந்தி பேசி நடிக்கலாமா?" என்று திருப்பிக் கேட்டார்.

மீண்டும் மைக் பிடித்த தனுஷ் "அப்பா பேசும்போது நான் ஒரு புனித நூலை எடுத்துக்கிட்டு வந்தேன். குடும்ப சுமையால அதை படிக்க முடியல. இப்போ குடும்ப சுமைய இறக்கி வச்சிட்டேன் அந்த புனித நூலை காணல. அதை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. அந்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கிட்டு போய் பெரிய ஆளாயிட்டோம். நீங்க பேசாம அம்மாவை கூட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு போங்க" என்றார்.

"உங்க அம்மாவ கன்வீன்ஸ் பண்ணிட்டி டிக்கெட் போடு நான் போறேன்" என்றார் கஸ்தூரிராஜா.

தலைப்புகளில் எண்களை பயன்படுத்துவது ஏன்..?



 சினிமா டைட்டில்களில் எண்களை வைக்கும் டிரெண்ட் அவ்வப்போது தலை நீட்டுகிறது. த்ரிஷா நடித்த படமொன்றுக்கு ‘எனக்கு 20 உனக்கு 18‘ என்றும், தனுஷ் நடித்த படத்துக்கு ‘3Õ, பாடலாசிரியர் சினேகன் நடித்த படத்துக்கு திரு 420 , சித்தார்த் படத்துக்கு Ô180Õ என  எண்களை கொண்டு பெயரிடப்பட்டது.

அந்தவரிசையில் தற்போது ஒரு படத்துக்கு ‘கண்ணன் 1 காதலி 2Õ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘எண்களை தலைப்பில் பயன்படுத்துவது ஏன்?‘ என்று இப்பட இயக்குனர் ஏ.கோபால்சாமியிடம் கேட்டபோது கூறியதாவது:படத்தின் கதையை சித்தரிக்கும் வகையில்தான் டைட்டில்களில் எண்கள் சேர்க்கப்படுகிறது. அப்படித்தான் இப்பட டைட்டிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி முடித்து ஜாலியாக பொழுதை போக்கும் ஹீரோ பைரவ் ஒரே நேரத்தில் ஹீரோயின்கள் பார்கவி, மோனிகாவை ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலிக்கிறார். இறுதியில் அவர்கள் 2 பேரில் ஒருவரின் காதல் பிடியில் சிக்குகிறார். மற்றொரு காதலி எடுக்கும் முடிவு என்ன என்பதை காமெடியாக இப்படம் விளக்குகிறது.

எண்களை தலைப்புடன் இணைத்து வைப்பதால் குழப்பம் எதுவும் ஏற்படப்போவதில்லை. தலைப்பு மற்றவரின் கவனத்தை கூடுதலாக இழுக்க வேண்டும் என்பதற்காகவே எண்கள் சேர்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை சாமி-சக்தி ஏற்க, ஜெகன்கல்யாண் இசை அமைக்கிறார் காக பிலிம் தயாரிப்பு.

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!



 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.

 இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். ‘சல¢லால மொபைல்ஸ்‘ என்ற படத்துக்காக சொந்த குரலில் நஸ்ரியா பாட்டு பாடி இருக்கிறார்.

 இப்பாடல் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நஸ்ரியா தனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். தான் பாடிய பாடலுக்கு என்ன பொருள் என்பதை விளக்கி இருக்கிறார். ‘கோழிக்கோடு மலையாள பேச்சு வழக்கு இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது‘ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 
back to top