அஞ்சான் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை துவங்குகிறது:-
சூர்யா - சமந்தா நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்கவுள்ளன.
யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படமான அஞ்சான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் ஏற்கெனவே மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளன. மிக வேகமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்புகள் பொங்கலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நிறைவுபெற்றன.
ஏக்சன் படமாக உருவாகிவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நாளை தொடங்கி சுமார் ஒரு மாதம் மும்பை மற்றும்
மஹாராஷ்டிராவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். சூரி, வித்யூ ஜம்மவால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர்



10:10 PM
Unknown

Posted in:
0 comments:
Post a Comment