.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

கமலுடன் ஜோடி சேர காஜலுக்கு ரூ.2 கோடி...!




உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது.

தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'மாற்றான்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிங்குசாமி தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. அனுஷ்காவை பரிசீலித்தனர். ஆனால் அவர் தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திர திரைப்படங்களில் பிஸியாக நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இதனையடுத்து காஜல் அவர்வாலிடம் பேசினர். அவர் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் யோசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.2 கோடி சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் இதையடுத்து 'உத்தமவில்லன்' திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?





கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?


தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.


பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.


மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.


எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.


ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

கணவன் வாங்கலையோ..கணவன்....?




ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா...!  

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.  


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   



முதல் தளத்துல அறிக்கை பலகைல


 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   



இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா



இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல



 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    



இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   



மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல



"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு



அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.



நாலாவது தளத்துல அறிக்கை பலகைல




"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?



கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.



ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

 

 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....


அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

 

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..


இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .


எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

'ஜில்லா'- நடப்பது என்ன?




'ஜில்லா' படத்தின் சென்சார் டிசமபர்.30-ம் தேதி, டிரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய், மோகன்லால், காஜல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கியிருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க, இமான் இசையமைத்து இருக்கிறார்.

பாடல் வெளியீடு முடிந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் டீஸர் அல்லது டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் இருந்தது படக்குழு. இதனால், படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி நிலவியது.

இத்தகவல்கள் குறித்து 'ஜில்லா' படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, "ஜனவரி 10ம் தேதி 'வீரம்' படத்துடன் 'ஜில்லா' வெளியாவது உறுதி. படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

டிசம்பர் 30-ம் தேதி படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம். அதற்கு மறுநாள், டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரெய்லர் YOUTUBE தளத்தில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து படத்தினை பிரமாண்ட விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றனர்.

படத்தின் டைட்டில் கார்ட்டில் விஜய் பெயருக்கு முன்பாக மோகன்லால் பெயர்தான் காட்ட இருக்கிறார்கள். மோகன்லால் பெயர்தான் முதலில் வர வேண்டும். அவர் மிகப் பெரிய ஸ்டார் என்று விஜய் கூறிவிட்டதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341


         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)

   
   
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். – 489



         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உரை)

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்




தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

 எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.


ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.


பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.


அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.


இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.


மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.


சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.


நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?




இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

தெரியுமா உங்களுக்கு?





1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

மௌன நாயகனாக நடிக்கும் தனுஷ்




ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

           காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் .மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

சூரியின் பெயரால் சூப்பர் ஸ்டாருக்கு அவதூறு...




டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’.இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாக பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. இந்தப்படம் பற்றி டுவிட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க, சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்.ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால் விசாரித்ததில் சூரிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாதாம். சூரியின் மேல் வெறுப்பு கொண்ட சிலர் தான் இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதப்படிங்க முதலில்.....!




பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி பட்டப் படிப்பு 100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இந்திய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் இருப்பதால் வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு நிறையவே உண்டு. இத்

துறைக்கு ஆங்கில மொழித்திறன் அவசியம். கேட்டரிங் படிக்க விரும்புபவர்கள் அவசரப்பட்டு, 10-ம் வகுப்பு முடித்ததும் ஹோட்டல் டிப்ளமோ படிப்பதைவிட பிளஸ் 2 முடித்து, பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி படிப்பது சிறந்தது.

தவிர, பி.எஸ்சி. ஆஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் ஜெனரல் ஆபரேஷன் படிப்பதன் மூலம் நட்சத்திர ஹோட்டலை நிர்வகிக்கலாம். ஃப்ரன்ட் ஆபீஸ் படித்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றலாம்.

 ஃபுட் பேவரேஜ் படிப்பதன் மூலம் உணவுத் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு தொடங்கி விநியோகம் வரை நிர்வகிக்கலாம். ஹவுஸ் கீப்பிங் படிப்பவர்கள், ஹோட்டல் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கலாம். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் படிப்பவர்கள், ஹோட்டல் வளர்ச்சிப் பணிகளை நிர்வகிக்கலாம்.

மணிப்பாலில் வெல்கம் குரூப் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தவிர, மாநிலத்தின் ஒவ்வொரு தலைநகரத்திலும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை தரமணியில் இந் நிறுவனம் இயங்குகிறது. இங்கு சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு உண்டு.

என்.சி.ஹெச்.என்.சி.டி - (ஜே.இ.இ.) இணை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2014, ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடக்கிறது. www. nchnct.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு கணிதம், ரீசனிங் அண்டு லாஜிக்கல், பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 30 மதிப்பெண்; ஆங்கிலம் - 60 மதிப்பெண், ஆக்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் - 50 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் கொண்டது. பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 800; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 400. சென்னையில் இத்தேர்வு நடக்கும்.

ரஜினி பிறந்தநாள்னா ஏன் எங்கிட்ட வர்றீங்க? குஷ்பு ஆவேசம்





ரஜினியின் பிறந்தநாளுக்கு  தமிழகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் ஆங்காங்கே வினைல் போர்டுகள் வைத்து இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தில் திளைக்க கிளம்பிவிட்டார்தகள்.
ஆனால் பத்திரிகை நிருபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி சம்பந்தமாக யாரிடம் பேட்டி கேட்டாலும், இப்போ பிஸியா இருக்கேன் என்று கூறியே தப்பிக்கிறார்களாம். ரஜினியோடு ஜோடியாக நடித்த நடிகைகளை மட்டுமாவது தேடிப்பிடித்து பேட்டியெடுத்துவிடலாம் என்று அலைந்து திரிந்த ஒரு நிருபருக்கு நேர்ந்த கதி பரிதாபம்.

ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா என்று பலரையும் தேடி தொலைபேசியில் பிடித்துவிட்டார் அவர். இரண்டு வரி ரஜினி சாரை பற்றி சொல்லுங்க என்று கேட்டதுதான் தாமதம். நான் பிஸியா இருக்கேன். நானே கூப்பிடுறேன் என்ற போனை கட் பண்ணியவர்கள்தானாம். அதற்கு பிறகு அவர்களாகவும் அழைக்கவில்லை. இவர் அழைத்தாலும் எடுக்கவில்லை. நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ஏன் எப்ப ரஜினியை பற்றி நீங்க எழுத நினைச்சாலும் எனக்கு போன் அடிக்கிறீங்க? அவருக்கு பிறந்த நாள்னா கொண்டாடிட்டு போங்க. ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க என்று கேட்க, ஸாரி என்று போனை வைக்க வேண்டியதாயிற்று நிருபருக்கு.

சுஹாசினி கேட்ட கேள்வி நியாயமா, அநியாயமா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். என் பர்த்டேவுக்கு அவர்கிட்ட வாழ்த்து கேளுங்க. கொடுப்பாரா? பிறகு என்கிட்ட மட்டும் எதுக்கு கேட்கிறீங்க? ஆளை விடுங்க என்றாராம். சரி, யாருமேவா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை? சொன்னார்களே... ஜெயச்சித்ரா, அம்பிகா, ராதா, சீதா இவர்கள் மட்டும். மீனா கூட, பிறகு பேசுறீங்களா என்று போனை வைத்துவிட்டதாக தகவல்.

இப்படியொரு நிலைமையா ரஜினியின் இமேஜுக்கு?

கிசு கிசுவுக்கும் எனக்கும் என்னதான் சம்பந்தமமோ தெரியவில்லை: டாப்ஸி




2013 இல் சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகை யாரென்று கேட்டால், அமலாபால், அனுஷ்கா, நயன்தாரா என்பீர்கள். அதுதான் இல்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் டாப்ஸி. “குண்டல்லோ கோதாவரி’ தொடங்கி, “ஷாஸ்மி பட்டூர்”, “ஷேடோ’, “சகாசம்”, தமிழில் “ஆரம்பம்”, “முனி – 3 கங்கா” என்று படங்கள் தொடர்ச்சியாக இருக்கிறது. பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் வெள்ளாவி என்ன சொல்கிறார்…

அடிக்கடி, கிசு கிசுக்களில் சிக்கி விடுகிறீர்களே?

கிசு கிசுவுக்கும் எனக்கும் அப்படி என்னதான் சம்பந்தமமோ எனக்கே தெரியவில்லை. அந்தளவிற்கு என்னைப் பற்றிய கிசு கிசுக்கள் வெளியாகி விட்டன. முதலில், இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது, பழகி விட்டது. என்னைப் பற்றிய கிசு கிசு செய்திகளைப் படிக்கும்போது, எனக்கே, பயங்கர காமெடியாக இருக்கும். விழுந்து விழுந்து சிரிப்பேன்.

எந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி உங்களைக் கவிழ்த்திருக்கிறாரா?
வேறு யார், ஆர்யாதான். படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசாக கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய்’ என்பார். இதுபோல், நிறைய முறை, ஆர்யாவிடம்  ஏமாந்திருக்கிறேன். ரொம்பவும் நாட்டிபாய்.

சத்தமில்லாமல் நிறைய படங்களில் நடிக்கிறீர்கள் போல?
அப்படியெல்லாம் இல்லை. தமிழில் “ஆரம்பம்’ வரப்போகிறது. “முனி -3 கங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கில் வர இருக்கிறது. தெலுங்கில் “சகாசம்’ என்ற படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் இரண்டு புது படம் தொடங்குறேன். அக்டோபரில் என் இரண்டாவது ஹிந்திப்படம் தொடங்க இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள்தான் அமையமாட்டேன் என்கிறது. நீங்களாச்சும் தமிழ் டைரக்டர்கிட்ட என்ன பத்தி நல்ல விதமா சொல்லுங்களேன்.

“கங்கா’ எப்படியிருக்கு?

வெரி பவர்புல் படம். பொதுவா நான் தைரியமான, போல்டான பொண்ணு ஆனால் பேய், பிசாசுன்னா கொஞ்சம் பயப்படுவேன்.  தனியாக படம் பார்க்னும்ன்னனா கூடஎனக்குப் பயம்தான். அதுவும் பேய் படம்னா கேட்கவே வேண்டாம். அடிக்கடி பக்கத்துல ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட பொண்ணு பேய் படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்? நிறைய சீன்ல நிஜமாவே பயந்திட்டேன். செம திரில்லிங் பா.

தமிழ் நல்லா பேசுறீங்களே?

இது என்ன சில்லி கொஸ்டின். இவ்ளோ நாள் தமிழ் நாட்ல இருக்கேன். இதைக்கூட கத்துக்க மாட்டனா? அப்புறம் ஒன்னு சொல்லட்டா.. தமிழ்ப் பேசறது ரொம்ப ஈஸியா இருக்குப்பா. ஐ லைக் தமிழ்.

ஹன்சிகா உங்க இடத்தைப் பிடிச்சுட்டாங்களே கவனிச்சீங்களா?

அப்படியா…? அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. ஹன்சிகா, தமிழில் மட்டும்தான், கவனம் செலுத்தி, நடிக்கிறாங்க. நான், அப்படி இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும், பிஸியாக நடிக்கிறேன். எனக்கு வர வேண்டிய படங்கள் எனக்குத் தான் கிடைக்கும். அதை யாரும், தட்டிப் பறிக்க முடியாது. இன்க்குளூடிங் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?

ஒன்லி அஜித்சார். அவர் பழகும் முறை, நடந்துகொள்ளும் விதம், அவர்கூட நடிக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஐ லைக் ஹிம்.

உங்களுக்கு ரொம்பப் பிடித்தது டான்ஸாமே?

ஆமாம் எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். 8 வருஷமா கதக் கத்துட்டு இருக்கேன்.  நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். இப்ப என்னோட யாரும் டான்ஸýல போட்டி போடலாம். ஐ யம் ரெடி.

 உங்களின் கனவு, ஆசை என்ன?


நான் சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள, மணிரத்னம் சார் படத்தில நடிக்காம, விடமாட்டேன். நான் இந்திய சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள இது நடக்கும். எந்த கேரக்டர்னாலும், எந்த மொழின்னாலும், நான் மணிரத்னம் சார் படத்தில நடிச்சே தீரணும். இதான் என் கனவு, ஆசை எல்லாம்.

உங்க பிளஸ் என்ன, மைனஸ் என்ன?

நான் ரொம்ப தைரியமான பொண்ணு. மனசில நினைக்கிறதை அப்படியே சொல்லிடுவேன். ரொம்பப் பேசுவேன். கரெக்டா இருப்பேன். கேமராக்குப் பின்னாடி எப்பவும் நான் நடிக்க மாட்டேன். ஓப்பனா இருக்க நினைப்பேன்.

மைனஸ்னா நிறைய இருக்கு. ஒன்று வேணும்னு நினைச்சா அடுத்த நிமிஷமே எனக்கு அது கிடைக்கணும். எதுக்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். பொறுமை கொஞ்சம் கம்மிதான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கோபம் அப்படி வரும். இப்போதான் கொஞ்சம் குறைச்சி இருக்கேன். அப்புறம் முக்கியமா, எல்லாரையும் ஈஸியா நம்பிடுவேன். என்னை ஈஸியா ஏமாத்திவிடலாம். யாராச்சும் என்கிட்ட வந்து என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன். நான் இருக்கும் தொழிலுக்கு இது ரொம்ப டேஞ்சரான விஷயம். உடனே என்னை  இந்த விஷயத்தில் இருந்து மாத்திக்கணும் பார்க்கலாம்.

மனம் திறந்து யாருடன் நட்புடன் இருக்கிறீர்கள்?

இன்டஸ்ட்ரில இப்போ நான் யார் கூடவும் அதிகமா டச் வைச்சிக்கிறதில்லை. நயன்தாரா கூட நடித்ததால் மட்டும் அவருடன் சில விஷயங்களைக் கொஞ்சம் ஷேர் பண்ணிப்பேன். அவ்ளோதான். மத்தபடி யாரிடமும் நான் நட்புடன் இல்லை!

எதிர்கால திட்டம்?
சரியாக 10, 12 வருஷம் நல்ல நல்ல படங்களில் நடிச்சிட்டு, வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிடுனும்னு என்பதில் ரொம்பத் தெளிவான இருக்கேன். நிறைய வருஷம் நடிக்கணும் என்ற ஆசை இல்லை.

திருமணம்?

நான்தான் வீட்டில் பெரியவ. என் பெற்றோர் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஆள் கிடைக்கணுமே. நான் விரும்புறவர், பெண்களை மதிக்கிறவராக இருக்கணும். என் அம்மா, அப்பா, என் தங்கை, என் குடும்பத்தை அவர் குடும்பமா பார்த்துக்கணும். ஹிருத்திக் ரோஷன் அளவிற்கு அழகெல்லாம் தேவை இல்லை. என் அளவுக்கு மேட்ச் ஆனா போதும். வெள்ள கலர், சிக்ஸ் பேக் இதெல்லாம் வேணாம். உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்கிற, ஒரு நேர்மையான ஆண் கிடைக்கணும். அப்பதான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்

கூடப்பிறக்காத அண்ணண் அஜீத்: மைனா விதார்த் உருக்கம்




வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக மைனாவில் நடித்த விதார்த்.நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது   முடிவடைந்துள்ள நிலையில் தனக்கு கூடப்பிறக்காத அண்ணன் அஜித் என்று விதார்த் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து விதார்த் கூறுகையில்: அஜீத் சார் படத்துல் நடிக்கவிரும்புகிறீர்காள என்று  டைரக்டர் சிவா சார் என்னை கூப்பிட்டார்.  கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போய் நின்றேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அய்யோ… தல படத்துல நடிக்க முடியாமல்  போயிடுமேன்னு கலங்கி நின்றேன். அப்போது அஜீத்சாரே நான் நடித்து வரும் படத்தின் டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

பொதுவாக அஜீத் சார் நடிக்கிற படங்ககில்  அவரோட ஓப்பனிங் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். ஆனா “என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு நிகரான ஓப்பனிங் சீன் வையுங்க”ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் “சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?” என்று  கேட்டார்., இல்லைன்னு நான் சொன்னேன். “அப்ப கிளம்புங்க போகலாம்” என்றார் ஒரே நாளில் விசாவினை தயார் செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.. எனக்கு அங்கே ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் கொடுத்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

ஒரு நாள் “பைக்லேயே டூர் போலாமா?”ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னால் உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. சாலையோர கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து… என்ன ஒரு அனுபவம் அது.

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் இவ்வாறு உருக்கமாக பேசினார் மைனா விதார்த்.


அந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்...




ஒரு நடிகை தான் வாங்கிய அட்வான்சை ஒரு போதும் திருப்பிக் கொடுப்பதில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு பட பூஜைகள்.

அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் ஒருவரது தலைமையில் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாதாரண ஆட்களில்லை. நயன்தாரா, தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கோபிசந்த் ஆகியோர். இது நயன்தாரா நடிக்கும் படம் என்பதால் சென்னையிலிருக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமான பலரும் கூடிவிட்டார்கள்.

சரி, முதல் வரி மேட்டருக்கு வருவோம். இந்த படம் ஏற்கனவே பூபதி பாண்டியன் டைரக்ட் செய்வதாக இருந்த படம். அதை துவங்கும் முன்பாகவே இவருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக் கொண்டது. படத்தையே டிராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். அப்படியென்றால் நடிகர் நடிகைகளுக்கு கொடுத்த அட்வான்ஸ்? அதை திருப்பி கேட்கும்போதுதான் படமாவே நடிச்சு கொடுத்துடறோம் பாஸ் என்றார்களாம் நயன்தாராவும் கோபிசந்தும். வேறு வழியில்லாமல் புதிய இயக்குனரை வைத்து இந்த படத்தை மீண்டும் துவங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதே நிலைமைதான் இப்போது தமன்னா நடிக்க ஒப்புக் கொண்ட தெலுங்கு படம் ஒன்றுக்கும். நாகசைதன்யாவுடன் தமன்னா ஜோடியாக நடிக்கவிருந்த ஹலோ பிரதர்ஸ் படம் டிராப். அட்வான்சை திருப்பி கேட்ட தயாரிப்பாளரிடம், படமே பண்ணிடலாமே. எதுக்கு அட்வான்சை திருப்பி கேட்கிறீங்க என்கிறார்களாம் இருவரும்.

இதே மாதிரி இலியானாவிடம் சில கோடிகளை கொடுத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு தயாரிப்பாளர். இத்தனைக்கும் இந்த படத்தில் இலியானாவுக்கு ஜோடியாக நடிக்க புக் ஆகியிருந்தவர் நம்ம ஊரு ஹீரோ விக்ரம். சீயானாவது திருப்பி கொடுத்தாரா இல்லையா? அது இப்ப தெரியாது...

கொல்கத்தா தாதாவாக விஜய்?




முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம்.
ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.

கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.

அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.

இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது

சிறந்த பொய்!!!!




ஒரு குட்டி கதை:
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

புளித்த பாலின் பயன் அறிவீரா?




அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

 வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.


பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?




பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

டிச.15 வரையிலான 2 வாரங்களில் முன்பேர வர்த்தகம் 40 சதவீதம் சரிவு




டிசம்பர் 15 வரையிலான இரண்டு வாரங்களில் முன்பேர வர்த்தகம் 60 சதவீதம் சரிந்து ரூ.2.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.6.88 லட்சம் கோடியாக இருந்தது.

தயக்கம்

கணக்கீட்டு காலத்தில் விளைபொருள் முன்பேர வர்த்தகம் அளவின் அடிப்படையில் மிகவும் குறைந்ததே சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், முன்பேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் சாதாரண உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம் அதிகபட்சமாக 70 சதவீதம் குறைந்து ரூ.1.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.37,207 கோடியாக சரிவடைந்துள்ளது. தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் 66 சதவீதம் சரிவந்து ரூ.3.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.07 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான வர்த்தகம் 57 சதவீதம் குறைந்து ரூ.1.50 லட்சம் கோடியிலிருந்து ரூ.65,215 கோடியாக சரிவடைந்துள்ளது. வேளாண் விளைபொருள்கள் மீது ரூ.66,966 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 27 சதவீதம் (ரூ.92,060 கோடி) குறைவாகும்.
இந்தியாவில், கடந்த 2003–ஆம் ஆண்டின் முன்பேர வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நம் நாட்டில் தற்போது 17 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் எம்.சி.எக்ஸ், என்.சி.டீ.இ.எக்ஸ், என்.எம்.சி.இ., ஏ.சி.இ., ஐ.சி.இ.எக்ஸ். மற்றும் யூ.சி.எக்ஸ் உள்ளிட்ட ஆறு சந்தைகள் தேசிய அளவில் செயல்படுகின்றன. இதர 11 சந்தைகள் பிராந்திய அளவில் செயல்படுகின்றன.

கட்டுப்பாட்டு அமைப்பு

அனைத்து முன்பேர வர்த்தக சந்தைகளும் பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எஃப்.எம்.சி) என்ற கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. முன்பேர சந்தைகளில் ஈட்டப்படும் மொத்த வருவாயில் எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் பங்கு அதிக அளவில் உள்ளது.

ரஜினியை இயக்கும் ஆசையில் ஐஸ்வர்யா தனுஷ்!




ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தின் மூலம இயக்குனராக அறிமுகமானார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருந்த அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதனால்தான், அடுத்து உடனடியாக வை ராஜா வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.

முதல் படத்தை விட இரண்டாவது படத்தை ஹிட்டாக கொடுத்து பேசப்படும் இயக்குனராகி விட வேண்டும் என்று கவனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது தங்கை செளந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி விட்டதால், ஐஸ்வர்யாவுக்கும் அப்பாவை வைத்து ஒரு மெகா படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

அதனால் ஏற்கனவே அப்பாவுக்காக சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த ஐஸ்வர்யா அதில் ஒரு சிறந்த கதையை மெருகேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். வை ராஜா வை தான் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் படமாக அமைந்தால், தான் ரெடி பண்ணி வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை அப்பா ரஜினியிடம் சொல்ல திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.

சாப்ளினைப் பற்றி.....




சாப்ளினைப் பற்றி.....
சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.
சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!

$1 மில்லியன் ஒப்பந்தம் (ஒரு மில்லியன் டாலர் ஊதியம் பெற்ற முதல் நடிகர்)

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.

சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

 மார்ச்சு 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர்

. பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் காலீஸ்




இந்தியா–தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்க அணி 2–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது.  இதைதொடர்ந்து  3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் , தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. அதைத் தொடர்ந்து போதிய வெளிச்சமும் இல்லாததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு   முன்பாக நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது. காலிஸ் 78 ரன்களுடன் (224 பந்து, 10 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.இதில் டுமினி 28 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.தொடர்ந்து வந்த ஸ்டைனுடன் கைகோர்த்து ஆடிய காலீஸ்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 45 வது சதத்தை பூர்த்தி செய்தார்.தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் அவர் 245 பந்துகளில் 100 ரன்களை கடந்தார்.கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் 4 வது தென் ஆப்ரிக்கா  வீரர் காலீஸ் ஆவர்.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இந்திய அணியை விட தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

உண்மைய சொன்னேன் ..



உண்மைய சொன்னேன் ..

1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..

2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...

3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..

4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..

5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, மயங்கி கீழே கிடப்பவனுக்கு கிடைப்பதில்லை..

6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...

7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...

8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

2013ல் இறைவன் அழைத்துக் கொண்ட கலைஞர்கள்...?





 2013ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகனுக்கு சோகமான ஆண்டாகவே இருந்து. தமிழ் சினிமாவை தனது சிறப்பான பங்களிப்பால் அலங்கரித்த பல ஜாம்பவான்களை இறைவன் தன்னகத்தே அழைத்துக் கொண்டான். அவர்களில் சில முக்கியமானவர்கள் பற்றி இங்கே நினைவு கூர்வோம்...


ராஜசுலோச்சனா:


கருப்பு வெள்ளை சினிமா காலத்தின் கனவு கன்னி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர். இந்திய மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அரசிளங்குமரி, குலேபகாவலி, ராஜாராணி, சேரன் செங்குட்டுவன், ரங்கோன்ராதா, தாய் மகளுக்கு கட்டியதாலி, நல்லவன் வாழ்வான் போன்றவை அவர் நடித்த முக்கிய படங்கள். நாட்டியத்தின் பல பரிமாணங்களை கண்டவர். தனது 75வது வயதில் அவர் மரணிக்கும் வரை நாட்டியம் கற்றுக் கொடுத்தார். ஆடவும் செய்தார். அமெரிக்க குடியுரிமை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.


பி.பி.ஸ்ரீனிவாஸ்:


தனது வெண்கல குரலால் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டவர். ஜாதகம் படத்தில் அறிமுகமாகி பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஸ்ரீனிவாஸ் ஒரு சாப்பாட்டு பிரியர் கம் பேனா பிரியர். அவரது பாக்கெட்டில் எப்போதும் பத்து பேனாக்கள் இருக்கும். நல்ல ஓட்டல்களாக தேடிபிடித்து போய் சாப்பிடும் வழக்கம் உள்ளவர். இன்றைய செம்மொழி பூங்கா முன்பு ட்ரைவ் இன் உட்லண்ட்சாக இருந்தபோது அதுதான் அவருக்கு பிடித்த இடம். இரண்டு லட்சம் கவிதைகளை எழுதி வைத்துள்ளார். 8 மொழிகளில் அவருக்கு பேசவும், எழுதவும் தெரியும். காலங்களில் கரைந்த இந்த வசந்தம். எப்போதும் மணம் வீசிக்கொண்டே இருக்கும்.


டி.கே.ராமமூர்த்தி:

திருச்சியை சேர்ந்த டி.கே.ராமமூர்த்தி ஒரு வயலின் வித்வான். எம்.எஸ்.விசுவநாதனுடன் இணைந்து 700 படங்களுக்குமேல் இசை அமைத்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக 20 படங்கள் வரை இசை அமைத்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். டி.கே.ராமமூர்த்திக்கு 11 குழந்தைகள் அதில் 7 பெண்கள். 89வது வயதில் மரணம் அடைந்தார். விஸ்வநாதன்&ராமமூர்த்தி இரட்டையர்கள் திரையிசை சரித்திரத்தில் சாதித்த சாதனைகளை இன்றுவரைய எவராலும் முறியடிக்க முடியவில்லை.


டி.எம்.சவுந்தராஜன்:

எம்.ஜி.ஆர் அரசியலிலும், சிவாஜி நடிப்பிலும் சிகரத்தை தொட தன் குரல் கொடுத்து உதவியர் டி.எம்.சவுந்தர்ராஜன். சவுராஷ்டிரத்தை தாய்மொழியாக கொண்டவரின் நாடி நடிப்புகளில் ஓடியது தமிழிசை. 100 சதவிகிதம் ஆண்மைகுரல் கொண்ட ஒரே பாடகர். 1950 முதல் 1980 வரை தன் கம்பீரகுரலால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர். திரையிசையிலும், பக்தி இசையிலும் தனக்கென தனி பாணி அமைத்தவர். ஒரு தேர்ந்த நடிகராகவும் தன்னை நிரூபித்தவர். அவரது இழப்பு திரையிசை உலகின் ஈடுசெய்ய முடியாத இழப்பு. உலகில் காற்று இருக்கும் வரை சவுந்தர்ராஜனின் கானம் அதில் கலந்திருக்கும்.


வாலி:

திருவரங்கம் டி.எஸ்.ரங்கராஜன் என்கிற வாலி திரையிசையின் ஜாலி கவிஞன் 5 தலைமுறை ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சாங் எழுதியவர், அகில இந்திய வானொலியில் பணியாற்றத் தொடங்கி தன் தமிழால் அகிலத்தையே வென்றவர். ஆயிரம் படங்களில் 15 ஆயிரம் பாடல்கள் வாலியின் வாலிப வரிகளால் உருவானது. திரைப்பாடல்களோடு காலத்தால் அழியாத இலக்கியங்களையும் படைத்தார். பார்த்தாலே பரவசம், ஹே ராம். சத்யா, பொய்கால்குதிரை படங்களில் நடித்தார். வடமாலை என்ற படத்தை இயக்கினார். வாலியை இழந்த திரையிசை உலகம் தாலியை இழந்த தாரகையாக தவிக்கிறது.


லால்குடி ஜெயராமன்:

2013ம் ஆண்டு திரையிசை உலகத்துக்கு பெரும் இழப்புகளை தந்த ஆண்டு. அடுத்தடுத்து இசை ஜாம்பவன்கள் மறைந்த ஆண்-டு. லால்குடி ஜெயராமன் கர்நாடக இசை உலகின் சக்கரவர்த்தி. லால்குடி கோபால அய்யர் ஜெயராமன் என்பதின் சுருக்கம் லால்குடி ஜெயராமன். வயலின் வித்வான். பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளை குவித்தவர். மிகச் சில திரைப்படங்களுக்கே இசை அமைத்திருக்கிறார். 2010ம் ஆண்டு சிருங்காரம் என்ற தமிழ் படத்திற்கு இசை அமைத்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். அதன் தொடர்ச்சியா இன்னும் சில படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார். காலம் அதற்கு அனுமதிக்கவில்லை.


சுகுமாரி:

நாகர்கோவிலில் வசித்த பாரம்பரிய மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவை அலங்கரித்த லலிதா, பத்மினி, ராகினியின் கசின் சிஸ்டர். தமிழ் படங்களில் குரூப் டான்சராக தன் வாழ்க்கையை துவக்கியவர் ஒர் இரவு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழிலும், மலையாளத்திலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் காமெடி வேடங்களில் கலக்கினார். பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். ஆயிரம் படங்களை தாண்டிய மலையாளத்து ஆச்சி இவர். 2011ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அந்தப் படம் வருகிற ஜனவரி 3ந் தேதி ரிலீசாகிறது. 7வயது முதல் 72 வயதுவரை நடிப்பையே சுவாசித்து வாழ்ந்தவர் சுகுமாரி.


மஞ்சுளா:

சாந்தி நிலையம் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தில் குப்பத்து பெண்ணாக ரவுசு பண்ணி சினிமாவை கலக்கியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமாராவ் நாகேஸ்வரராவ், ரஜினி, கமலஹாசன் என அத்தனை ஹீரோக்களுடனும் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கடைசி காலத்தில்கூட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். தனது 59வது வயதில் மரணம் அடைந்தார்.


மணிவண்ணன்:

கோவை சூலூரைச் சேர்ந்த எஸ்.மணிவண்ணன் ராஜகோபால் வசனகர்த்தாவாக தன் சினிமா வாழ்க்கையை துவக்கினார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்று கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனரானார். 50 படங்களை இயக்கினார். அதில் அமைதிப்படையும், அதில் வரும் அமாவாசை கேரக்டரும் மறக்க முடியாதவை. இதுதவிர 400 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட மணிவண்ணனின் இழப்பு சினிமா அறிவுஜீவிகள் உலகின் இழப்பு.


ராசு.மதுரவன்:

பூமகள் ஊர்வலம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். பத்து வருட இடைவெளிக்கு பிறகு பாண்டி இயக்கினார். கிராமத்து செண்டிமெண்டுகளை தனது களமாக கொண்டு மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படங்களை இயக்கினார். கடைசியாக சொகு பேருந்து படத்தை முடிக்க காலம் இடம்கொடுக்கவில்லை.


ரகுராம்:

தமிழசினிமாவின் மாஸ்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆரின் டான்ஸ் மாஸ்டராக இருந்து ஏ.கே.சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றி பின்பு டான்ஸ் மாஸ்டர் ஆனவர். 900 படங்களுக்குமேல் பணியாற்றியவர். கமலஹாசனின் ஆஸ்தான நடன இயக்குனர். சலங்கைஒலியில் இவர் அமைத்த நடனங்கள் இப்போதும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. தசாவதாரம் உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மகள் காயத்ரியும், மனைவியுடம் டான்ஸ் மாஸ்டர்கள்தான். முதல்வர் ஜெயலலிதாவும் இவரும் ஒரே குருவிடம் ஒரே நேரத்தில் நடனம் பயின்றவர்கள்.

உணவுக்கும், பசிக்கும் ‌நிறைய தொடர்பிருக்கிறது...?




உணவுக்கும், பசிக்கும் ‌நிறைய தொடர்பிருக்கிறது.

அது பற்றி ‌நிறைய பழமொழிகளும் உள்ளன.
ஒவ்வொன்றும் அனுபவித்துக் கூறப்பட்ட வார்த்தைகளாகும்.

பழமொழியைப் படிப்போமா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே.

உண்ட ‌வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே.

உண்டி சுருங்கின் பெண்டிருக்கு அழகு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.
கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?

பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!!!!




பெண்களின் உடலைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்!

தொன்றுதொட்டே ஆய்வுகள் அனைத்தும் ஆண்களை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இருபாலினத்தவரையும் பாதிக்கக்கூடிய புற்றுநோய்க்கான முக்கியமான சில மருத்துவ முன்னோட்டங்களில் பெண்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.


 குழந்தை வளர்ப்பு சார்ந்த பிரச்சனைகள் முதற்கொண்டு பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வயது தொடங்கி பரிசோதனை முயற்சியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வரையிலானவை பற்றிய விழிப்புணர்வை பெண்களிடையே பரப்புவதில் ஆய்வாளர்கள் காட்டும் தயக்கம் வரையிலான பல விஷயங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பெண்களின் உடல்நலக் கோளாறுகள் தொடர்பான, ஆய்வுகள் அவ்வளவாக மேற்கொள்ளப்படாத, இதர பிரிவுகளில், பிரச்சனைக்குரியது பாலுணர்வு மட்டுமே அல்ல. பெண்களின் ஹார்மோன் சுரப்புகளின் ஏற்ற இறக்கங்கள் சிக்கலானவை. அவை அடிப்படையான சில கண்டுபிடிப்புகளையும் குழப்பிவிடக்கூடியவை. ஆனால் சமீபத்திய வருடங்களில், பெண்களின் மீதான கவனம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இப்போதும் கூட பெண்களின் உடற்கூறைப் பற்றிய தவறான தகவல்களே சமூகத்தில் உலவி வருகின்றன. இங்கு பெண்ணின் உடற்கூறு பற்றிய கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!

கட்டுக்கதை 1

ஒரு பெண் கன்னி தானா என்பதை ஒரு மருத்துவரால் கண்டறிய முடியும்.

10 மடிப்பு கொண்ட உருத்தோற்றப் பெருக்கியை உபயோகித்து சோதித்தாலும் கூட, மருத்துவர்களால் கன்னிப்பெண்களை, ஏற்கெனவே பாலுறவு கொண்டிருக்கக்கூடிய பெண்களிடம் இருந்து வேறுபடுத்த இயலாது என்று பல்வேறு ஆய்வுகளும் இடித்துரைக்கின்றன. கன்னித்திரையில் ஓட்டை இருக்கிறதா என்று பார்த்து சுலபமாக சொல்லி விட முடியாது, ஏனெனில் கன்னித்திரையில் ஓட்டை இருக்கவே செய்யும்


.
"கன்னித்திரையானது, பெண்ணின் பிறப்புறுப்பை மூடி இருக்கும் (கன்னித்தன்மையை இழக்கும் வரை) என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்; ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணமாகும்", என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், கரோலுடன் இணைந்து "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்."-இல் இணை ஆசிரியராகப் பணியாற்றியவருமான டாக்டர்.ரேச்சல் வ்ரீமன் கூறுகிறார். மிக அரிதாக அவ்வாறு கன்னித்திரை பிறப்புறுப்பை மூடியிருக்கும் பட்சத்தில், மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் தேங்கி, மிக மோசமான உடல்நலக் கோளாறுகளை உருவாக்கிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

கட்டுக்கதை 2

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகளின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன.

"மருத்துவர்கள் பலரே இந்தக் கதையை நம்புகின்றனர்," என்று கரோல் கூறுகிறார். குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை தனியாக உட்கொள்ளும் போது, அவை செயல்படாமல் போகக்கூடிய வாய்ப்பு ஒரு சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளுடன் எடுத்துக் கொண்டாலும் கூட இந்த விகிதத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் கரோல் குறிப்பிட்டுள்ளார்.



காசநோய்க்கென பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்கான ரிஃபாம்பின் என்ற மருந்து மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடும். குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் முடுக்கிவிடக்கூடிய கர்ப்பத் தடை ஹார்மோன்களின் அளவை ரிஃபாம்பின் குறைக்கும்; என்றாலும் கர்ப்பம் தரிக்கும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடிய அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரிஃபாம்பின் பற்றிய ஆய்வே ஆன்டிபயாட்டிக்/குடும்பக் கட்டுப்பாடு வதந்தியை கிளப்பியிருக்கலாம் என்று கரோல் எண்ணுகிறார். "சில நேரங்களில் மக்கள் எதையாவது சொல்லப்போக, அது அப்படியே காட்டுத்தீ போல பரவி விடுகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுக்கதை 3

பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவு உறக்கமே தேவைப்படுகிறது.

திரும்பித் திரும்பி புரண்டு படுப்பது பெண்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குவதோடு, அவர்களின் இன்சுலின் மற்றும் அழற்சியின் அளவுகளை உயர்த்தி, பல வித உடல்நலக்கோளாறுகளையும் உண்டாக்கும் என்று ட்யூக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த எட்வார்ட் சுவாரெஸ் அவர்களின் தலைமையின் கீழ் 2008 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்ட சுமார் 210 பேர் அடங்கிய குழு கண்டுபிடித்துள்து.

சுமார் 6,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன், வார்விக் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்களின் வழிகாட்டுதலுடன் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே உறங்கும் பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படக்கூடிய வாய்ப்பு, ஏழு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் உறங்கும் பெண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.

ஆண்களிடையே, இத்தகைய ஒப்பீடுகள் ஏதும் இருப்பது போல் தெரியவில்லை. எனவே உறங்கும் தேவதைகள் தமக்கு விழிப்புத் தட்டிய பின் எழுவதே அவர்களின் உடல்நலத்துக்கு நல்லது.

கட்டுக்கதை 4

இறுதி மாதவிடாய்க்கு பின் பாலுறவில் நாட்டம் இருக்காது.

இறுதி மாதவிடாயினால் படுக்கையறை பழக்கவழக்கங்களில் மட்டுமே மாற்றம் காணப்படும் என்று கூற முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த எட்வார்ட் லௌமன் அவரது சகாக்களுடன் இணைந்து 1994 ஆம் ஆண்டில் மேற்கொண்ட பாலுறவு பழக்கவழக்கங்கள் பற்றிய விரிவான சர்வேயில், ஐம்பதுகளில் உள்ள பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேர் ஒரு மாதத்தில் பலமுறை பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.



இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகளுள் ஒன்றான ஜுரம் மற்றும் இதர தொந்தரவுகள் தற்காலிகமாக பெண்களுக்கு பாலுறவில் நாட்டமின்றிப் போகச் செய்யலாம். ஆனால் பாலுறவு சார்ந்த நாட்டத்திற்கும், இறுதி மாதவிடாய்க்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று வ்ரீமன் கூறியுள்ளார். அதனால் உங்களுக்கு இறுதி மாதவிடாய் ஏற்பட்டிருந்தால், நீங்கள் பாலுறவுக்கு டாட்டா காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுக்கதை 5

மாதவிடாயின் போது ஒரு பெண்ணால் கருத்தரிக்க இயலாது.

மாதவிடாயின் போது ஒரு பெண் கர்ப்பம் தரிக்கக்கூடிய சாத்தியம் இல்லை தான்; என்றாலும், கர்ப்பம் தரித்தல் என்று வரும் போது, எதுவும் சாத்தியமே" என்று இந்தியானா யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்தவரும், "டோன்ட் ஸ்வால்லோ யுவர் கம்: மித்ஸ், ஹாஃப்-ட்ரூத்ஸ் அண்ட் அவுட்ரைட் லைஸ் அபவுட் யுவர் பாடி அண்ட் ஹெல்த்" (செயின்ட்.மார்டின்'ஸ் க்ரிஃபின், 2009) -இன் இணை ஆசிரியருமான ஆரோன் கரோல் கூறியுள்ளார்.

ஒரு பெண்ணின் உடலுக்குள் சென்றடைந்த பின், ஆணின் விந்தணு, சினை முட்டைக்காக சுமார் ஒரு வார காலம் வரை காத்திருக்கும். சினை முட்டை வெளியேற்றம் உடனேயே நிகழலாம் அல்லது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தப்போக்கு இருக்கும் காலத்திலும் கூட நிகழ்ந்து, பொறுமையாக காத்துக் கொண்டிருக்கும் விந்தணுவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.


 குடும்பக்கட்டுப்பாட்டிற்கான காலதிட்ட அமைப்பு, சரிவர செயல்படுவது இல்லை என்று கூறும் கரோல், இத்திட்ட அமைப்பை கடைப்பிடிக்கும் தம்பதியர் பல நேரங்களில் பெற்றோர் ஆகிவிடுவதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...




மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...

பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது நடப்பதில்லை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருக்கும். இதனால் மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை அதிகம் தங்கி, அந்த இடத்தையே ஒருவித தோற்றத்தில் வெளிப்படுத்தும்.


இருப்பினும் சரியான சரும பராமரிப்புக்களை மேற்கொண்டால், அழகாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு அப்படி மூக்கில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.
அதைப் பின்பற்றி மூக்கை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்


* மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

* உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

* வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

* மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

* உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

* வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்
.

Sunday Special - உருண்டை குழம்பு....





Sunday Special - உருண்டை குழம்பு....


தேவையான பொருட்கள் :

கடலைபருப்பு - 1/2 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1

பட்டைமிளகாய் - 4

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்


குழம்புக்கு தேவையானவை :


புளி - எலுமிச்சையளவு

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 1

சின்னவெங்காயம் - 8

உப்பு தேவையான அளவு

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 மேசைகரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து குழம்பு கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின் ஒரு பருப்பு உருண்டையை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது கொதி வந்தவுடன் உருண்டையை ஒரு கரண்டியால் எடுத்து பார்க்கவும்.

உருண்டை கரையாமல் வந்தால் மேலும் கொதிக்க கொதிக்க உருண்டைகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.

 (உருண்டைகள் கரைந்தால் இட்லி தட்டில் வைத்து லேசாக வேகவைத்து பின் குழம்பை நன்றாக சுண்டிய பின் உருண்டைகளை அதில் போட்டு இறக்கலாம்)

கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம் - எச்சரிக்கை!!!






பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்

 இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்...

சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 3 நிலைகள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. 


 
இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். 



இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

 

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது…

 

இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்

இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...!




இனி இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...
சமூக வலை தளமான பேஸ்புக் பயன்பாட்டை ஒன்பது மொழிகளில் நாடு முழுதும் உள்ள தன் ப்ரி-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்க உள்ளதாக பார்தி ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 "இது பேஸ்புக் தளத்தை நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பது மொழிகளில் இலவசமாக பயன்படுத்த வழங்கும்" என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மொழிகள்

 மொபைல் போன்களில் பேஸ்புக் உபயோகிப்போர் (ப்ரௌசர் அல்லது நேரடி அப்ளிகேஷன்) இனி ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இலவசமாக பயன்படுத்தலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால சலுகை


"ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 30 எம்பி வரையிலான இந்த இலவச பயன்பாட்டை பெற்று மகிழ ஏர்டெல் அனுமதிக்கும்" என அந்நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது.

மென்பொருள்

 இந்த புதிய சேவை ஜாவா, ஆண்ட்ராயிடு, ஐபோன் மற்றும் விண்டோஸ் முதலியவற்றில் இயங்கும் சாதனங்களுக்குப் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் இண்டர்நெட் சேவை


 ஏர்டெல் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் சேவையின் முலம் அதிகப்படியான லாபத்தை அடைகிறது. டிராய் எஸ்எம்எஸ் கட்டுப்பாடு விதிகளை விதித்தப் பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது. இதனால் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது. அதன் மூலம் ஏர்டெல் 6 மடங்கு அதிக லாபத்தை அடைந்தது.

 
back to top