.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 6, 2013

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி!




We used to fry the cabbage plays an important role. We realize that a lot of cabbage, one of the benefits of knowing.



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி  நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும்  ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது.  ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை  ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில்  குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.



இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.  முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப்  வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.



பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.  நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில்  போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)




ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!


 
 
 
 
வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.


  1.  தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)



     2. HEART 
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.




    3. இலவச பைபிள் பாடம் 


   4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம் 


    5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

   6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

  7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
 இலவசமாக பெற உள் நுழைக

  8.குபுண்டு open source os
  இலவசமாக தபாலில் பெற முடியாது. முன்பு வாரி வழங்கினார்கள்.

  9.The Stories of School.
ஆவுஸ்ரேலியா இல் உள்ள கருப்பின மக்களின் வாழ்க்கை, பாடசாலை பற்றிய விவரண காணொளி.

 இலவசமாக பெற உள் நுழைக


இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

 இவற்றால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்று இல்லை .
  1. HD video பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
  2. ஆங்கிலம் உச்சரிப்பை ஆங்கிலமாகவே  பழகலாம் 


வந்த பின் இங்கு சொல்லுங்கள்............................................
 
 

பேஸ்புக் மூலம் தன் பட விநியோகத்தை விரிவுபடுத்தும் சேரன்!


இப்போதெல்லாம் பேஸ்புக் மூலம் எதையும் செய்யலாம் என்றாகி விட்டது. அந்த வகையில் புதிய சினிமா தயாரிபாவ்ர்கள் பலரும் தங்கள் பட டைட்டிலில் ஒரு பேஜ் ஆரம்பித்து பப்ளிசிட்டி பண்ணுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் தன சொந்த படமான் ‘ ஜேகே’திரைப்படத்தை பேஸ்புக் உதவியுடன் உலகின் பல நாடுகளில் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்

.
6 - JK-Enum-Nanbanin-Vaazhkai.j


இது குறித்து சேரன் தன பேஸ்புக் பக்கத்தில்,


ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.. தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது… எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்… 


தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்…

 இது வியாபாரமே… அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்… 


சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது…. 


இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்… 


படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்…


இதை படிக்கும் நண்பர்கள் மற்றவர்களும் உங்கள் நண்பர்களும் படிக்க இந்த செய்தியை பகிரவும்…… நன்றி…”


 என்று தெரிவித்துள்ளார்.

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.



பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் பட்டியலை விரைவிலேயே வெளியிட்டு விட்டது.



5 - edit_crime.


மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற குற்றங்கள், சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் பட்டியல், காவல்துறை அவற்றை எவ்வாறு கையாண்டது என்பனவற்றை இதன் மூலம் நாம் அறியலாம். புள்ளிவிவரங்கள் இரு முனை கத்தி போன்று சாதகம், பாதகம் இரண்டும் பொருந்தியது. புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கணித்துவிட முடியாது என்றாலும், சில புள்ளிவிவரங்கள் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டும். அவை கற்பிக்கும் பாடம் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.


வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கூடிய வழக்குகள், விசாரிக்க முடியாத வழக்குகள் என்று குற்ற நிகழ்வுகள் பிரிக்கப்படுகிறது. 2012-ஆம் வருடம் நாட்டில் விசாரிக்கக்கூடிய வழக்குகள் 60,41,559 என்று காவல் துறை பதிவு செய்தது. இதில் இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் 23,87,188. இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உடல் மற்றும் சொத்து மீது இழைக்கப்படும் குற்றங்கள் சம்பந்தப்பட்டது. சிறப்பு சட்டங்கள், மற்ற பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,54,371, ஆக, மொத்த வழக்குகள் 60.41 லட்சம்.


இந்திய தண்டனைச் சட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுவது கொலை, ஆதாயக் கொலை, கொடிய காயம் விளைவித்தல், பொது இடங்களில் சண்டை சச்சரவு போன்றவை.


கொலை, காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் 5.6 லட்சம் நிகழ்ந்தன. இதில் நாட்டில் கொலை வழக்குகள் மட்டும் 34,434. தமிழ்நாட்டில் 1,949, உத்தரப் பிரதேசத்தில் 4,966, பிகாரில் 3,516, ஆந்திரத்தில் 2,717, கர்நாடகத்தில் 1,860 கொலைகள் பதிவு செய்யப்பட்டன.


இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் 2012-இல் நடந்த கொலைகள், தில்லியில் 408, மும்பையில் 215, பாட்னாவில் 224, பெங்களூரில் 266, சென்னையில் 180, மதுரையில் 39, கோவையில் 29. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் நமது நகரங்களில் குறைவு என்றாலும் எந்த ஒரு கொலையும் பீதியை கிளப்புகிறது.


பாலியல் பலாத்கார வழக்குகள், வன்புணர்ச்சி வழக்குகளின் விவரம் 1971 முதல்தான் சேகரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 24 வருடங்கள் பாலியல் வழக்குகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது விழிப்புணர்வு குறைவா, மெத்தனமா? நமது சமுதாய உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி சொல்வதற்கே அஞ்சுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவார்கள். புகார் செய்யப்படும் வழக்குகளைவிட நடந்த நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் என்ற வகையில்தான் புள்ளிவிவரங்களை ஆராய வேண்டும்.


தில்லியில்தான் அதிகமாக 585 வன்புணர்ச்சி வழக்குகள் 2012-இல் பதியப்பட்டன. மும்பையில் 232, சென்னையில் 94, பெங்களூரில் 90 வழக்குகள். 1971-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி நாட்டில் 2,487 ஆக இருந்த வன்புணர்ச்சி வழக்குகள் 2012-ஆம் ஆண்டு 24,923 வழக்குகளாக (90.2 சதவிகிதம்) உயர்ந்துள்ளது. இதர பாலியல் பலாத்கார வழக்குகளை எடுத்துக் கொண்டால் 2011-இல் 2.28 லட்சமாக இருந்த வழக்குகள் 2012-ஆம் ஆண்டில் 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகமாக 3,425 வன்புணர்ச்சி வழக்குகள் பதியப்பட்டன. தமிழ்நாட்டில் 737 வழக்குகள், சென்னையில் 94, சேலம் 51, திருநெல்வேலி 47, மதுரை 41, கோவை 29.


பாலியல் குற்ற ஒழிப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்ற சமுதாய நலன் கருதி இயற்றப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் அமலாக்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அதிக விழிப்புணர்வு. பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் 2,563 வழக்குள் பதியப்பட்டன தமிழகத்தில் 500 வழக்குகளும் ஆந்திரத்தில் 472 வழக்குகளும் பதியப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை குற்றவாளிகளாகக் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் களையப்பட வேண்டும். 2012-ஆம் வருடம் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 38,172. 2011-இல் 33,098. 15.3 சதவீதம் உயர்ந்துள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. மொத்த இந்திய தண்டனை சட்ட வழக்குளில் 8.89 சதவிகிதம் 2012-இல் பதிவாகியுள்ளது. குழந்தைக் கடத்தல், வன்புணர்ச்சி, கொலை, பாலியலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளைக் கடத்துதல் போன்ற, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக நாட்டில் நிகழ்கிறது. உத்தரப் பிரதேசம் 6,033, மத்தியப் பிரதேசம் 5,168, தில்லி 4,462, மகாராஷ்டிரம் 3,456, பிகார் 2,894, ஆந்திரம் 2,274. தமிழ்நாட்டில் 1,036 வழக்குகள். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவு.


ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளும் சமுதாய சீர்திருத்த சட்டங்களில் முக்கியமாகக் கருதப்படுகிறது. குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம், அரசியல் சாசனம் 17-இல் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரகடனப்படி 1955}இல் இயற்றப்பட்டது.


இச்சட்டத்தின்கீழ் 2012-ஆம் வருடம் 33,655 வழக்குகள் நாட்டில் பதியப்பட்டன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் முறையே 6,303, 5,559, 4,821 அதிகமான வழக்குகள் கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் 1,647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் முறையே 3,057, 2,685, 810 வழக்குகள். வழக்காடுதல் மட்டும் சீர்திருத்தத்தை வளர்க்காது என்பதை, அதிகரிக்கும் வழக்குகள் வெளிச்சமிடும்.
சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் முக்கிய பணி. தெருக்களில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பூசல்கள், வன்முறைகள் சட்டம் ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கும். 2.75 லட்சம் வன்முறை சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. 2011-ஆம் வருடம் நிகழ்ந்த 2.56 லட்சம் வழக்குகளை ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.


இது மொத்த இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் 11.5 சதவீதம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 33,824, பிகாரில் 29,842, மூன்றாவதாக மகாராஷ்டிரத்தில் 26,972 நிகழ்வுகள்.


மேற்படி வன்முறைப் பதிவுகளில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 86,469 சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது சங்கடப்படுத்தும் விவரம். இவற்றில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டும் 24,923 என்பது இந்தியாவிற்கு தலைகுனிவு. இதில் அதிகமாக பிகாரில் 11,670 வழக்குகள் பதிவாயின உத்தரப்பிரதேசத்தில் 6,003 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 10,106, சிறிய மாநிலமான கேரளத்தில் மிக அதிகமாக 11,506 வழக்குகள் பதிவாயின. அவற்றில் சட்ட விரோதமாக தெருக்களில் ரகளை நிகழ்வுகள் 10,938.


படித்தவர்கள் அதிகமான கேரளத்தில் இந்த நிலை. படித்தவர்கள் ஏன் தெருக்களுக்கு வந்து சண்டையிடுகிறார்கள்? அறிவு புரிதல் அளிப்பதால் அநியாயங்களை கண்டு தட்டிக் கேட்க தெருக்களுக்கு வருகிறார்கள் என கொள்ள வேண்டும் ; நல்லவேளை தமிழ்நாட்டில் இத்தகைய பொது இட வன்முறைகள் 3,862 மட்டுமே.


திருட்டு வழக்குகள் கன்னக்களவு வழக்குகள் 4.3 லட்சம் பதிவாகியுள்ளது. இதில் கன்னக்களவு 92,892. தமிழ்நாட்டில் திருட்டு வழக்குகள் 18,467. இதில் கன்னக்களவு 4457. மராட்டிய மாநிலத்தில் அதிகமாக 71,188 வழக்குகள், ஆந்திரத்தில் 36,717 கர்நாடகத்தில் 27,164, கேரளத்தில் 7874. இந்தியாவில் திருட்டு வழக்குகளில் மொத்த இழப்பு ரூபாய் 21,071 கோடி. அதில் தமிழ்நாட்டில் ரூபாய் 137.44 கோடி. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 82.58 கோடி அதாவது 60 சதவிகிதம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது சிறப்பான நடவடிக்கை.


காவல்துறையின் செயல்பாடு திறமையான புலனாய்வில் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் 2012-ஆம் ஆண்டு 32.43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 23.95 லட்சம் வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டன. 8.45 லட்சம் வழக்குகள் ஆறுமாதத்திற்கு மேல் விசாரணையில் உள்ளன.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் 78.8 லட்சம். தமிழ்நாட்டில் 3,08,578 வழக்குகள். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வழக்குகள் தமிழ்நாட்டில் 56.5 சதவிகிதம், அகில இந்திய அளவு 38.1 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.


காவல்துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. மொத்த ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை 21.64 லட்சம். பணியில் இருப்பவர்கள் 16.74 லட்சம். மொத்த பெண் போலீசாரின் எண்ணிக்கை 85,462. மராட்டிய மாநிலத்தில் 17,134 பெண் போலீஸ் அதற்கு அடுத்தாக தமிழ்நாட்டில் 12,085.


இந்தியாவில் மொத்த காவல் நிலையங்கள் 14,155. தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள். சராசரி 1 லட்சம் பொதுமக்களுக்கு 138 காவலர்கள் பணியில் உள்ளனர். மேலை நாடுகளில் இது மூன்று மடங்கு அதிகம்.


2012-ஆம் வருடம் 77.5 லட்சம் நபர்கள் கைதாகியுள்ளனர் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம்.இந்தியாவில் குற்ற கடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 273 வழக்குகள் பதிவாகின்றன. பதிவாகாதவை, புகார் செய்யாதவை பல இருக்கலாம். 373 நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு கைதாகிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 வன்புணர்ச்சி வழக்கு பதிவாகிறது.


குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம். தாமதமாக ஓடச் செய்யலாம், நிற்காமல் நீராக ஓடும் குற்றங்களைத் தடுக்கலாம் – காவல்துறையினர் பொதுமக்களோடு ஒன்றிஉழைத்தால்.


ஆர். நடராஜ் (காவல்துறை முன்னாள் தலைவர்).

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவது 2 ஆண்டு தாமதம் ஆகும்!




 அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியால் செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ450 கோடி செலவில் நாசாவின் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி  அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு விண்ணில் செவ்வாய்க்கு செயற்கைகோள் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் அமெக்காவில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நாசா ஊழியர்கள் 18 ஆயிரம் பேரில் 97 சதவீதம் பேர் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் ஏவுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இரண்டு ஆண்டுகள் தாமதமாகும்:  இஸ்ரோவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும் செயற்கைக்கோள் அக்டோபர் 28ம் தேதியில் இருந்து நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படவில்லை என்றால் அதன் பின்னர் விண்ணில் செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.



 நாசா மையத்தை தற்போது தொடர்புகொள்ள இயலாது என்ற பதிவு செய்யப்பட்ட தகவல் தான் ஒலிக்கிறது.


 இதுகுறித்து தேசிய நிபுணர் குழு தலைவர் யு.ஆர்.ராவ் கூறுகையில், முடிந்தவரை நவம்பர் 19ம் தேதிக்குள் செயற்கை கோளை விண்ணில் செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய தருணத்தை தவறவிட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் செயற்கை கோள் ஏவப்படுவது தவிர்க்கப்படும். அந்த நேரத்தில் கடலில் புயல் அபாய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றார். 


இந்நிலையில் இஸ்ரோ அதிகாரி தேவி பிரசாத் கார்னிக், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  எவ்வித கால தாமதமும் இன்றி திட்ட மிட்டபடி அக்டோபர் 28ம் தேதி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? கருத்து தெரிவிக்க கமல் மறுப்பு!






ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று கருத்து கூற நடிகர் கமல்ஹாசன் மறுத்து விட்டார். பெங்களூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த கூறியதாவது: கர்நாடகத்தில் சினிமா தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களும் காணப்படுகின்றன. பெங்களூர், மைசூரில் இதற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளன. எனவே, அடுத்து புதிய தமிழ் படத்தை கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது.



முழுக்க கர்நாடகாவில் ஷூட்டிங் செய்யப்பட உள்ள தமிழ் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நான் இதில் நடிக்க உள்ளேன். விஸ்வரூபம் படம் திரையிடும் போது மறக்க முடியாத அனுபவம் கிடைத்தது. விஸ்வரூபத்தின் 2,ம் பாகம் திரையிடும்போது, அதுபோல் ஏற்படாது என்று நினைக்கிறேன்.



விஸ்வரூபம் பட பிரச்னையால் நான் நாட்டைவிட்டே வெளியேறிவிடுவேன் என்று கூற வேண்டிவந்தது. இப்போதும் எனது வார்த்தைகளை திரும்ப பெறப்போவதில்லை. நான் மீண்டும் மிரட்டப்பட்டாலோ, தொல்லைக்கு உட்படுத்தப்பட்டாலோ ஒரு கலைஞனாக நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிவரும். ஆனால் இந்த நாடு என்னை விட்டுவிடுமா? அரசியலுக்கு ரஜினி வருவாரா? மாட்டாரா? என்பதை பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. வாக்குப்பதிவின் போது ஒரு விரல் நுனியில் கருப்பு மையை வைத்து கொள்ள விரும்புகிறேனே தவிர கை முழுவதையும் கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

காலணியும் ஒரு கருவிதான்! தொழில்நுட்பம்!



Shoe themselves at risk to save their school children have found a new technique.

ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் காலணியைக் கொண்டு தங்களை காத்துக்கொள்ளும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் பள்ளி  மாணவிகள். தானே மராத்தி மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நால்வரின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த காலணி ஆயுதம். வழக்கமாக பெண்கள்  அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில கருவிகளை இணைத்துள்ளனர்.


விஷம எண்ணத்துடன் அருகில் நெருங்கும் ஆண்களின் காலை இந்த காலணி அணிந்திருக்கும் பெண்கள் வேகமாக மிதித்தால் போதும்... அந்த நபர்  மயக்கமடையும் அளவுக்கு மின்சாரம் அவர் உடலில் பாய்ச்சப்படும். அல்லது ஆபத்து அருகே வரும் போது காலணியை வேகமாக தரையில்  மிதிக்கலாம்.



அதன்பிறகு பெண்ணின் கைப்பை அல்லது பர்ஸில் இணைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் அலாரம் ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். அத்துடன் ஏற்கனவே  பதிவு செய்யப்பட்டிருக்கும் சில செல்போன் எண்களுக்கு உடனே எஸ்.எம்.எஸ். சென்று விடும். ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்கும் இந்த  காலணிக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது!


தீக்காயத்தின் முதலுதவி என்ன?


 Show wound in water for 10 minutes.


தீவிர காயம் : சிகிச்சை முறை

10 நிமிடங்களுக்கு நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.
நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

சிறிய காயங்கள்: சிகிச்சை


பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.

துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும். தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும். சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது. பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம். அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது. பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது. கொப்புளங்களை உடைக்கக் கூடாது. 


மஞ்சள் காமாலை வருவது ஏன்?



About  jaundice array N. Laparoscopy and Endoscopy special administrator of the hospital and the doctor and physician.   Demonstrates Manoharan.


மஞ்சள்காமாலையைப் பற்றி கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிறப்பு  மருத்துவருமான டாக்டர். மனோகரன் விளக்கம் அளிக்கிறார்.

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கவனியாமல் விட்டுவிட்டால் நிலைமை மிக  மோசமாகிவிடும். அவற்றில் மிகவும் ஆபத்தானதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ள நோய் மஞ்சள் காமாலை. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பான  கல்லீரல், வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு ரத்தத்திலுள்ள பிலுருபினின் அளவு அதிகரிப்பது மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை  உள்ளவர்களுக்கு தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். சிறுநீர் தொடர்ந்து மஞ்சள் நிறத்தில்  இருக்கும்.

மஞ்சள் காமாலையின் வகைகள்?


வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவது : இது ஹெபடைடிஸ் ஏ.பி.சி என்று மூன்று வகைப்படும்.

அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் :

பொதுவாக கல்லீரல் பித்தநீரை சுரந்து உணவு செரித்தலுக்கு பித்தநீரை அனுப்பும் வேலையைச் செய்கிறது. இவ்வாறு கல்லீரலில் சுரக்கும்  பித்தநீரானது செல்லும் பித்தநாளத்தில் சில சமயங்களில் பித்தக்கல்லால் அடைப்பு ஏற்பட்டாலோ, பித்தநாளம் சுருங்குவதாலோ அல்லது  பித்தநாளத்திற்கு வெளியில் கட்டி ஏற்பட்டு பித்தநாளத்தை நெருக்கினாலோ ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஜான்டீஸ் என்று பெயர்.  அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பெயர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளுத்து காணப்படும். உடலில் அரிப்பு ஏற்படும். பசியின்மை, சோம்பல், களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் எடை குறைவு, உடல் அரிப்பு, சாதாரண காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல்  போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப்பகுதியில் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம்  மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்


ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்தல், கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள், பித்தநீர் பை மற்றும் பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு, மது  அருந்துதல், மாசுபட்ட தண்ணீரில் காணப்படும் நோய் கிருமிகள் போன்றவை.

தடுப்பு முறைகள்


தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும். தன் சுத்தம் பேண வேண்டும். துரித உணவை தவிர்க்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது முறையாக  பரிசோதனை செய்த பின் செலுத்த வேண்டும். மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!

வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்


உலகெங்கிலும் வீட்டு வைத்திய முறைகள் கையாளப்படுகின்றன. சில பகுதிகளில் மரபு வழி வைத்திய முறைகள் தலைமுறை தலைமுறையாகப் பலநூறு ஆண்டுகளாகப் புழகத்தில் இருந்து வந்திருக்கின்றன. வீட்டு வைத்திய முறைகளில் பல, அதிக அளவில் பலன் தருகின்றன; வேறு சில, குறைந்த அளவில் பலன் தருகின்றன.

வீட்டு வைத்திய முறைகளில் சில ஆபத் தான வையாகவும், தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். நவீன மருந்துகளைப் போலவே வீட்டு மருத்துகளையும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

பலன் தரும் வீட்டு மருந்துகள்  :

பல நோய் களுக்குக் காலம் காலமாகப் பயன்படுத்திப் பலன் கண்ட வீட்டு மருந்துகள் நவீன மருந்துகளுக்கிணையாக அல்லது அவற்றுக்கும் மேலாகக்கூடப் பலன் தருகின்றன. பெரும்பாலானவை நவீன மருந்துகளைவிடச் சிக்கனமானவை.

மேலும் சில, நவீன மருந்துகளை விட அதிகப் பாதுகாப்பானவை. எடுத்துக்காட்டாக, இருமலுக்கும் சளிக்கும் பயன்படுத்தப்படும் மூலிகைக் கஷாயங்கள், நவீன மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் இருமல் இனிப்பு மருந்துகள், வீரியம் மிக்க மற்ற மருந்துகள் ஆகியவற்றை விடவும் நல்ல பலன் தருகின்றன.

இவற்றால் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் குறைவே. குழந்தைகளின் வயிற்றுப் போக்குக்குத் தாய்மார்கள் தருகிற கஷாயங்கள் அல்லது பானங்கள் வேறெந்த நவீன மருந்துகளை விடவும் சிறந்தவை; பாதுகாப்பானவை. வயிற்றுப்போக்கால் சிரமப்படும் குழந்தை அதிக அளவில் திரவத்தை உட்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

வீட்டு வைத்திய முறைகளின் வரம்பு  :

சில நோய்களுக்கே வீட்டு மருந்துகள் உதவுகின்றன. மற்ற நோய்களை நவீன மருத்துவ முறைகள் மூலம், மேலும் சிறப்பாகக் குணப்படுத்த முடியும். இது பெரும்பாலான தொற்றுகளுக்குப் பொருந்தும். நிமோனியா, தசைவிறைப்பு ஜன்னி, டைஃபாய்டு, காசநோய், குடல்வால் அழற்சி, பால் வினைத் தொற்றுகள், பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படுகிற காய்ச்சல் போன்றவற்றை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக நவீன மருத்துவ முறைகளைக் கொண்டு குணப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நோய்களை முதலில் வீட்டு மருந்துகள் மூலம் மாத்திரமே குணப்படுத்த முயன்று காலத்தை வீணாக்காதீர்கள். சில சமயங்களில் வீட்டு வைத்தியத்தில் எது நல்ல பலன் தரும், எது பலன் தராது என்பதை உறுதி செய்துகொள்வது கடினம். இது குறித்து அதிக கவனத் துடன்கூடிய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

பழைய வழிமுறைகளும் புதிய வழிமுறைகளும்  :

சில நவீன சுகாதார வழிமுறைகள் பழங்கால முறை களைவிடச் சிறந்தவை. ஆனால் சில சூழ்நிலைகளில் மரபு வழிமுறைகளே நல்லது. எடுத்துக் காட்டாக, குழந்தை அல்லது முதியோர் பராமரிப்பில் மரபு வழிவந்த முறைகள் பெரும்பாலும் அன்பு கலந்த அக்கறை உடையனவாகவும், நவீன முறைகளைவிட உறவின் நெருக்கம் மிகுந்தவையாகவும் இருக்கின்றன.

தாய்ப்பால்தான் சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு என்ற சரியான நம்பிக்கை அண்மைக் காலம்வரை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் புதிதாக வளர்ச்சி பெற்ற புட்டிப்பால் தயாரிக்கும் பெரிய வணிக நிறுவனங்கள், தாய்ப்பாலைவிட புட்டிப்பால் சிறந்தது என்றன.

இது உண்மை இல்லையென்றாலும் பெரும்பாலான தாய்மார்கள் இதை நம்பித் தங்கள் குழந்தைகளுக்கும் புட்டிப்பால் கொடுக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் தேவையின்றித் தொற்றுகளுக்கும் பசிக்கும் இலக்காகி மடிந்தன.

குணமளிக்கும் நம்பிக்கைகள்  :

வீட்டு மருந்துகளில் சில, உண்மையாகவே குணமளிக்கின்றன; மற்றவை, குணமளிப்பதைப் போல் தோன்றுகின்றன. காரணம், மக்களுக்கு அவற்றின் மீதுள்ள நம்பிக்கைதான். குணப்படுத்து வதில் நம்பிக்கைக்குள்ள சக்தி மிகவும் வலுவானது.

எடுத்துக் காட்டாக, மிகக் கடுமையான தலைவலியால் அவதிப்படும் ஒருவருக்கு தலைவலியைப் போக்க, ஒரு பெண் சேனைக் கிழங்குத் துண்டு ஒன்றைக் கொடுத்து, அது சக்தி வாய்ந்த வலி நிவாரணி என்று சொன்னாள். அவள் சொன்னதை அவர் நம்பினார்.

தலைவலி விரைவில் மறைந்தது. இங்கே அவருக்குக் குணம் அளித்தது அந்தப் பெண் கொடுத்த கிழங்குத் துண்டால் அல்ல; அந்தப் பெண்ணின் வைத்தியத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைத்தான். வீட்டு மருந்துகளில் பல இவ்வாறே வேலை செய்கின்றன. இவற்றால் பெரும்பாலும் குணம் தெரிவதற்குக் காரணம், மக்களுக்கு அவற்றில் உள்ள நம்பிக்கையே.

மக்களின் மனபிராந்தி தொடர்புடைய நோய்களையும், கவலை, பயம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களையும் ஓரளவு குணப்படுத்துவதில் இத்தகைய நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் உதவியாக இருக்கின்றன. இவ்வகை நோய்கள் எல்லாவற்றுக்கும் வைத்தியம் செய்வோரின் குணப்படுத்தும் முறை அல்லது `கைராசி' மிகவும் முக்கியமானது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் நோயாளியிடம் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை நோயாளி உணருமாறு செய்வதும், அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட அல்லது அவர் அமைதியடைய உதவுவதும்தான்.

உட்கொள்ளும் மருந்தில் வைத்திருக்கிற நம்பிக்கை மாத்திரமே, சில சமயங்களில் முற்றிலும் உடல் தொடர்பான கோளாறு களைக்கூடக் குணப் படுத்திவிடுகிறது. எடுத்துக்காட்டாக, கிராம மக்கள் விஷப்பாம்புக் கடிக்குப் பயன்படுத்தும் வைத்திய முறைகள்:

1. பாம்புக் கல்லைப் பயன் படுத்துவது; ஒருவித வேர் பயன் படுத்தப்படுவது. 2. கையளவு மிளகாய் அல்லது வேப்பிலையைச் சாப்பிடுவது.
3. வாழைத்தண்டுச் சாறு நிறையக் குடிப்பது.

பாம்புக்கடிக்கு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு வகையான மருந்துகளைப் பயன்படுத்துக்கின்றனர். நாம் அறிந்த வரையில் இந்த வகையான வீட்டு மருந்து எதுவுமே பாம்பு விஷத்தை முறிப்பதில்லை. பாம்பு விஷத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியது வீட்டு மருந்துதான் என்று ஒருவர் சொன்னால் அவரைக் கடித்தது விஷப் பாம்பாக இருந்திருக்காது.

இருந்தாலும் இவ்வகை வீட்டு மருந்தை ஒருவர் நம்பும் பட்சத்தில் அது சில நன்மைகளைச் செய்யலாம். இந்த நம்பிக்கை அவருடைய பயத்தைக் குறைப்பதால் நாடித்துடிப்பின் வேகமும், பதற்றமும், உடல் நடுக்கமும் குறையும். இதன் காரணமாக விஷம் அவருடைய உடலில் மெதுவாகவே பரவும். ஆகையால் அபாயம் குறைகிறது.

ஆனால் இவ்வகை வீட்டு மருந்துகள் ஓரளவு பலனையே தருகின்றன. இம்மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் பாம்புக் கடியினால் இன்னமும் பெரும்பாலானவர்கள் கடுமையாக நோய்வாய்ப்படுகின்றனர் அல்லது இறந்து போகின்றனர். பொதுவாகப் பாம்புக்கடிக்கு நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. `பாம்புக்கடி விஷமுறிகள்' அல்லது `நிணநீர் மருந்துகளை' தேவை ஏற்படுவதற்கு முன்னரே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 
back to top