.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 5, 2014

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?


சரும புற்றுநோயைத் தடுக்கும்:

சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு:

தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!

இளமையாக இருக்க:

தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!

குளிரைத் தாங்க:

தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய:

பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு:

ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு:

அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.

இதனால் தான் அன்று சித்தர்கள் முனிவர்கள் தாடி உடன் இருந்தார்களா..?
தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு கருத்தும் நன்மைகளும் இருக்கிறது.

காதலுக்கு கண்ணில்லை (2014) - திரைவிமர்சனம்

நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான் அவரது ரசிகை என்றும் அவரை நேசிப்பதாகவும் கூறுகிறார். இதை முரளியுடன் இருந்து கவனித்த முரளியின் அம்மா இந்து, ஷிவானியை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு சென்று விடுகிறார்.

அதன்பின்னர் ஷிவானி, முரளி குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார். முரளியின் அம்மாவிற்கு ஷிவானியை பிடித்து விடுகிறது. ஆதலால் முரளியிடம் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். முரளியும் தன் அம்மாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து, ஷிவானியை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

பின்னர் முரளி-ஷிவானி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அப்போது முரளியின் அப்பா திருமணத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஷிவானி வீட்டில் நிபந்தனை விதிக்கிறார்கள். இதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்து, என் அப்பா கலந்துக் கொண்டால்தான் இந்த திருமணம் நடக்கும் என்றால் எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.

முரளியின் அப்பா யார்? எதற்காக அவரை வெறுக்கிறார்? ஷிவானியை முரளி திருமணம் செய்துகொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் முரளி மற்றும் ஆனந்த் என்னும் இரண்டு கதாபாத்திரங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார். முரளி கதாபாத்திரத்தில் அமைதியாகவும், ஆனந்த் கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஆனந்த் கதாபாத்திரத்தில் அளவோடு இல்லாமல் அளவிற்கு மீறிய நடிப்பாக எண்ணத் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நாயகி அலிஷா தாஸ் திறமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட திறமையாக அழுதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க அழுது கொண்டே இருக்கிறார். நிறைய சிரமப்பட்டு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கவர்கிறார். மற்றொரு நாயகியான நிஷாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஜெய் ஆகாஷின் அம்மாவாக நடித்திருக்கும் இந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

யு.கே.முரளியின் இசையில் 2 பாடல்கள் மட்டும் கேட்கும் ரகம். தேவராஜ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ஒரு பெண், சைக்கோவாக இருக்கும் ஒருவனை நல்லவன் என்று நம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவனால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கதைக்கருவாக வைத்துள்ளனர். ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு பின்னடைவு. மேலும் தேவையற்ற காட்சிகளையும் லாஜிக் இல்லாத காட்சிகளையும் இயக்குனர் ஜெய் ஆகாஷ் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘காதலுக்கு கண்ணில்லை’ வலுவில்லை.

உடல் எடையில் நல்ல மாற்றம் தரும் ஜுஸ்கள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும்.

எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜுஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது.

அது எப்படி ஜுஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜுஸ்களை குடித்தால், ஜுஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.

குறிப்பாக உடல் எடை குறைய வேண்டு மானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

தர்பூசணி ஜுஸ் :

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜுஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜுஸ் :

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜுஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜுஸ் :

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜுஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும்.

மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதோடு ரத்த சுத்திகரிப்பையும் சிறப்பாக மேற்கொள்கிறது. உடலுக்கு கூடுதல் சக்தியையும் வழங்குகிறது.

தக்காளி ஜுஸ் :

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜுஸ் :

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜுஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜுஸ் :

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜுஸ் :

ஆரஞ்சு பழ ஜுஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜுஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜுஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை ஜுஸ் :

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப்பழ ஜுஸ் :

கொய்யாவில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளதால், இதனை ஜுஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து விடும்.

பெர்ரிப் பழ ஜுஸ் :

பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன், இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது.

மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டு மல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உண வுகளில் கவனமாக இருப்ப வராக இருந்தால், இந்திய உணவுப்பொருட்கள் என்று சொல்லப்படும், வீட்டில் இருக் கும் சில பொருட்களைக் கொண்டே உடல் பருமனை எளிதில் குறைத்து விடலாம்.

மேலும் இந்த உணவுகள் உடல் எடையை குறைப்பதோடு, உடலை ஆரோக் கியமாக நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இப்போது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும் சில இந்திய உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப்படித்து முயற் சித்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள் : இந்திய உணவுகள் அனைத் திலும் சேர்க்கப்படும் மஞ்சுள் தூளில், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும் சக்தியானது உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

பூண்டு : அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு, இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மிளகாய் : உடலில் உள்ள கொழுப்புக் களை கரைப்பதில் மிளகாய் மிகவும் சிறப்பான பொருள். ஏனென்றால், அதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை தங்க விடாமல் செய்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கிறது.

முட்டை : தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய புரோட் டீன், கொழுப்பு மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் போன்றவை கிடைத்து, எனர்ஜி மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல் எடை குறையும்.

எலுமிச்சை : இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சாப்பிடக் கூடிய உணவுப் பொருள் தான் எலுமிச்சை. இத்தகைய எலுமிச்சையை தினமும் ஜுஸ் போட்டு குடித்து வந்தால், நிச்சயம் உடல் எடை சரியான அளவில் இருக்கும்.

பட்டை : பட்டையை உணவில் சேர்த்தால், கொழுப்புக்கள் அதிகம் சேராமல் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, ரத்தத்தில் உள்ள சர்க் கரையின் அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

காபி : காபியை குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, கொழுப்புக்கள் கரையும். எனவே தினமும் 2 கப் காபி குடிப்பது நல்லது. குறிப்பாக காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், உட லுக்கு கேடுதான் விளையும்.

முட்டைகோஸ் : பெரும்பாலான இந்திய சாலட்டுகளில் முட்டைகோஸா னது பச்சையாக சேர்க்கப் படும். இவ்வாறு முட்டை கோஸை பச்சையாக சாப்பி டுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் பச்சையாக முட்டை கோஸை சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத் தப்படுவதோடு, கார்போட் ஹைட்ரேட் கொழுப்புக்களாக மாறாமல் இருக்கும்.

வாழைப்பழம் : வாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைப்ப தோடு, அதிகப்படியான நார்ச்சத்தும் கிடைக்கும். மேலும் இது எடை குறைவுக்கும் வழி வகுக்கும்.

தக்காளி : தினமும் சமையலில் சேர்க்கப்படும் தக்காளியை அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் தேவையில்லாத கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.

கடுகு எண்ணெய் : சமையலில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக் கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, ஒல்லியாகவும் வைத்திருக்க உதவும்.

மோர் : இந்தியாவில் குடிக்கப்படும் ஸ்பெஷல் பானங்களில் ஒன்று தான் மோர். இந்த மோர் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, குறைவாக கலோரிகளைக் கொண்டது. அதிலும் இதில் உள்ள சிட்ரிக் எசன்ஸ், கொழுப்புக்களை கரைக்க உதவியாக இருக்கும்.

ஆப்பிள் : ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, இதனை சாப்பிட்டால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிபுரியும்.

பாசிப்பருப்பு : பாசிப் பருப்பில் கொழுப் புக்கள் குறைவாக இருப்பதால், அது கொலஸ்ட்ரால் பிரச்சினையை எதிர்த்துப் போராடும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை உடலுக்கு தரு கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அதிகம் உட்கொள் வது மிகவும் சிறந்தது.

தேன் : தேன் இந்தியாவில் மட்டு மின்றி உலகம் முழுவதும் சுவைக்காக உணவில் பயன் படுத்தும் ஒரு பொருள். ஆனால் இந்த உணவுப் பொருள் இந்தி யாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும் இருக்கக்கூடியது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில், சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

தயிர் :  குறைந்த அளவு கொழுப் புள்ள தயிரில் கலோரிகள் குறைவாகவும், சிட்ரிக் ஆசிட் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடை குறைவிற்கு வழி வகுக்கும். மேலும் தயிரும் செரிமான பிரச்சினையை சரிசெய்து, உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்கும்.

கறிவேப்பிலை : இந்தியாவில் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொதுவான மூலிகை தான் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையில் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில் சாப்பிடும் போது, உணவில் உள்ள கறி வேப்பிலையை தூக்கி எறியாமல், அதனை சாப்பிட தொடங்குங்கள்.

க்ரீன் டீ : தற்போது நிறைய மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு க்ரீன் டீயை குடித்து வருகின்றனர். ஆனால் அந்த க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. ஆகவே தினமும் 12 கப் குடித்தால் போதுமானது.

மாதுளை : மாதுளையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு மாதுளையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, பிட்டாக இருக்கலாம்.

ஏலக்காய் : சமையலில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் ஏலக்காய், உடல் எடை குறைவதற்கும் பயன்படுகிறது. உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? இதை வாங்கி ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள், ஒரே மாதத்தில் உங்களை யாரும் பார்த்து நீங்களே வியந்து போவீர்கள் என்று கூறி வெளிநாட்டு தயாரிப்புக்களை விற்கும் கூட்டம் அதிகரித்து விட்டது.

அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாம் தாய் நாட்டில் விளையும், எளிதில் கிடைக்கும் உணவு பொருட்களை தகுந்த அளவு உண்டாலே உடல் எடை தானாக குறைந்துவிடும், சோதித்து பாருங்கள், கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

தலைமுடி வளர பயனுள்ள குறிப்புகள்..!

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்

 
back to top