.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை!. Show all posts

Friday, November 29, 2013

எச்சரிக்கை!, அவசியம் பகிரவும்!

 

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,

அல்லது 

அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள்.


அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும்,


அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும்


. உங்கள் வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன் மூலம் பயன் படுத்தி கொள்ளமுடியும்.


ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், 

அல்லது

 அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதிர்கள்.

வில்லங்கம் பார்த்து வீடு வாங்குங்க...

பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின் பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும்.

பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியிலோ அல்லது தனி நபரிடமோ கடன் பெற்றிருக்கலாம். இந்த சூழ்நிலையில், பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் பத்திரம் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே, ஒரிஜினல் பத்திரம் இல்லை என்று கூறினால் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், வீடு விற்பனைசெய்த பிறகு ஒரிஜினல் பத்திரம் வைத்திருப்பவர்கள் அந்த வீட்டை எளிதில் தங்களது கஸ்டடியில் எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், ஒரிஜினல் பத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும்போது நகல் பத்திரம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முந்தைய ஓனர் வீடு மீது வாங்கிய கடனையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டியதாகி விடும்.

இதேபோல பத்திரத்தில் குறிப்பிடும் நீள, அகல அளவுகளில் வீட்டுமனை உள்ளதா என்பதையும் சர்வேயர் மூலம் அளப்பது நல்லது. ஏனெனில், பத்திரத்தை பொறுத்தவரை பழைய பத்திரத்தில் என்ன அளவு உள்ளதோ அதே அளவு அடுத்தவருக்கு விற்கும்போதும் எழுதப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கலாம் அல்லது உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினால் கையகப்படுத்தி இருக்கலாம். பொதுச்சுவர் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க
வேண்டும்.

சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர்வரி உள்ளிட்ட வரிகள் அனைத்தும் தவறாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்பதை விற்பவர்களை கேட்டு தெரிந்துகொண்டு, அதற்கான ஆவணத்தை பெறவேண்டும்.

வளர்ந்து வரும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில் குன்றத்தூர்

குடிநீர் வசதி, எங்கு வேண்டுமானாலும் சென்று வர சிறந்த சாலை இணைப்பு, போக்குவரத்து வசதி, பள்ளிகள், கல்லூரிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி, தூய்மையான சுற்றுச்சூழல் இவையெல்லாம் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதியில் அதிகளவிலான மக்கள் குடியிருக்க விரும்புவார்கள். ஜிஎஸ்டி சாலைக்கு மிக அருகில் இருக்கும் புறநகர் பகுதியான குன்றத்தூர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சென்னையின் புறநகர் பகுதி என்று கூறப்பட்டாலும் இது சென்னை விமான நிலையத்திலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. குரோம்பேட்டை ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளது.

சமீபத்தில் குன்றத்தூர் சந்திப்பு பகுதியை இணைக்க புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. பல்லாவரம் அருகே ஜிஎஸ்டி சாலையிலிருந்து விரைவில் மேம்பால பணி நடைபெறவுள்ளது. கோடம்பாக்கம்,ஸ்ரீபெரும்புதூர் சாலை, குன்றத்தூர் சாலை, முருகன் கோயில் சாலை, பம்மல் முக்கிய சாலை ஆகியவை குன்றத்துரை பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளும் இங்கு நிறைந்துள்ளன. 45 ஆண்டுகள் பழமையான சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பல தனியார் பள்ளிகளும், மாதா பொறியியல் கல்லூரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற கல்லூரிகளும் மிக அருகில் உள்ளன.

இவை மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார மையம், மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் இங்கு உள்ளன. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களே இங்கு அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் கிடைப்பதும், எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் அளவுக்கு சிறந்த சாலை, போக்குவரத்து வசதிகளும் இருப்பதே இதற்கு காரணமாகும். தாம்பரம், போரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை மிக அருகில் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

2010ம் ஆண்டு முதல் இப்பகுதியில் ஏராளமான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் மக்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். அருகில் உள்ள தாம்பரம், நங்கநல்லூர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு தொடக்க விலையே சதுர அடி ரூ.5,500 இருக்கும்போது, இங்கு சதுர அடி ரூ.3,500 முதல் ரூ.5,000 விலையில் கிடைக்கிறது.

எப்போதுமே பில்டரின் ஒப்பந்தம் மீது 2வது நம்பிக்கை கொள்ளுங்கள்


பில்டர் ஒப்பந்தத்தின் வரைவு நகல் என்பது அனைத்து வீடு வாங்குபவர்களும் படிக்க வேண்டிய ஆவணத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று. ஒப்பந்தம் பில்டருக்கு சாதகமாக ஒருதலை பட்ச மாக உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டி யது அவசியம். வழக்கமாக கிளப் ஹவுஸ், உட்புற சாலைகள், மொட்டைமாடி மற்றும் திறந்தவெளிகள் மேலும் சங்கம் அமைப்பது ஆகியவற்றின் பாத்யதை உரிமை மீதான தரமான அச்சுபிரதியில் எப்போதும் ஒரு சிறு தெளிவின்மை இருக்கும். வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முடிவு என்பதால் தொழில்முறை ஆலோசனை மேற்கொள் வது உதவிகரமாக அமை யும். எந்த ஒரு விஷயமும் தவறாக இருக்கக்கூடாது மேலும் அது உங்கள் முழு வாழ்க்கையை வேத னைப்படுத்தும்.

வாங்கும் மனையின் சுற்றுப்புற சூழ்நிலையால் பெறும் பலன்கள்

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். இது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஓடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும். மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது யோகம் தரும். மனைக்கு தெற்கு அல்லது மேற்கில் ஆறு, ஓடை இருப்பது நலம் தராது. மனைக்கு தெற்கிலோ, தென்மேற்கிலோ, மேற்கிலோ மலை குன்று இருப்பது நன்மை தரும். மனைக்கு முன் அல்லது பின்புறமாக மயானம் புதைகுழி இருப்பது மன நிம்மதி தராது.

மனைக்கு எதிராக திருக்கோயில் இருந்தால் , அங்கு குடியிருப்பவர்களது வயது வளர வளர அவர்களது செல்வமும் குறைந்துகொண்டே வரும். அவ்விதமான வீட்டை பொது உபயோகத்துக்கு உபயோகிப்பது நன்மை தரும். அதாவது நூல் நிலையம், தண்ணீர் பந்தல், பயணிகள் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றை அமைப்பது நன்மை தரும்.

மனைக்கு எதிராக சிவன் கோயில் இருந்தால் , தீராத வியாதி வரும். மனைக்கு எதிராக விஷ்ணு கோயில் இருந்தால் , மன அமைதி கெடும். துர்க்கை கோயில் இருந்தால் , உடல் நலம் பாதிக்கும். திருக்கோயில் நிழல் வீட்டின் மீது விழுவதும் தீராத துன்பங்களை தரும். திருக்கோயில் வீட்டின் வலது பக்கமாகவும், பின்புறமாகவும் இருந்தால் செல்வ இழப்பும், இடது பக்கமாக இருந்தால் முன்னேற்ற தடையும் ஏற்படும். திருக்கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றிலிருந்து 100 அடி சுற்றளவுக்கு அப்பால் இருந்தால் பாதகம் தராது.

இரண்டு பெரிய வீடுகளுக்கு நடுவில் உள்ள மனையை வாங்குவது கூடாது. அதில் வீடு கட்டினால் நாளாக நாளாக செல்வ இழப்பு ஏற்படும்.
மனைக்கு தென் கிழக் கில், தென் மேற்கில், வட மேற்கில் கிணறு போர்வெல் நீச்சல் குளம் இருந்தால் பல இன்னல்களைத்தரும். ஆனால் அவை வடக்கு, வடகிழக்கில் இருப்பது நன்மை தரும்.

தாழ்வு மனப்பான்மை!

வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம்.

தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.  


தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை தோல்வி கண்டவர்கள், பிறருடன் பழக வாய்ப்பில்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையினால் இவர்களது மனம் அடிக்கடி தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உடனிருக்கும் நண்பரோ.உறவினரோ இவர்களது தயக்கத்தைத் தக்க நேரத்தில் கண்டுப்பிடித்தல் அதன் பிறகு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வாழ்வின் நிம்மதியை கெடுக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை ஒழிக்க என்ன செய்யலாம்? அதை தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கலாம்.பிறகு,பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்பதுதான். தற்ப்போது இல்லாத விஷயங்களுக்கு வருத்தபடுவதில் தவறு இல்லை. அந்த வருத்தமே வாழ்க்கை முறையாக மாறுவது தான் தவறு. அதன் தொடர்ச்சியாக என்னால் முடியாது என்று சோர்ந்து போவது தவறு. இந்த தவறுகளே வெற்றிக்கு தடைக்கற்கள்.

இது மாற,வெற்றி நம் வசமாக நாம் எடுக்க வேண்டிய முதல் பயிற்சி தாழ்வு மனப்பான்மையை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது தான். 



"விழுவது அழுவதற்கு அல்ல: மீண்டும் எழுந்து நடப்பதற்கே".

Thursday, November 28, 2013

நிம்மதி...!

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.

ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:

- தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.

- தன் சூழலை முழுமையை பார்ப்பது.

- மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.

- வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.

- திறமைகளை வளர்ப்பது.

- ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

"கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

Tuesday, November 26, 2013

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

. . . . உலகோர்க் கெல்லாம் காரமா

மூலியடா பங்கம்பாளை கொண்டு

. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

. . . . அன்றான ஆகாசகருடன் மூலி

அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது,

முன்பு நானும்

 இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்


என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்  அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது.


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்


 உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்


 இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!





இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்…


உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.




நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…


வாழ்க்கை இதுதானென்று!



நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… 



உறவுகள் இதுதானென்று!

Sunday, November 24, 2013

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,
எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???

மனித பிறப்பு மிக அறியப் பிறப்பு ..

அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே!


 சிந்தியுங்கள்!!!

 
back to top