.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 14, 2013

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்!

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.

13 - womb

 


குறிப்பிட்ட தேதியைத் தாண்டி மூன்று நாட்கள் சென்றபின்னரும் அவருக்கு பிரசவத்திற்கான அறிகுறி எதுவும் தோன்றவில்லை. மேலும், குழந்தையின் அசைவும் அவருக்குப் புலப்படவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தம்பதியர் உடனடியாக வடக்கு லண்டனில் உள்ள பார்னெட் அண்ட் சேஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள். 


அங்கிருந்த இடைநிலை மருத்துவப் பணியாளர் அவரைப் பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார். 12 மணி நேரம் சென்றபின் மீண்டும் குழந்தையின் நிலை குறித்த சந்தேகத்தைத் தெரிவித்தபோதும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. 


முதல்நாள் நிரஞ்சனாவிற்கு ஏற்பட்டிருந்த காய்ச்சலால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்கவில்லை என்றும், பின்னர் மருத்துவமனையில் இருந்த இதயத்துடிப்பு அறியும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்றும் ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு அவர் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். 


இரண்டு நாட்களுக்கு மேல் இறந்த குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு மிக்க வலியுடனும், வேதனையுடனும் எந்தவிதமான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் அதனை அவர் பிரசவித்துள்ளார். இறந்த குழந்தையின் தலை நசுங்கியிருந்ததற்கும் மருத்துவமனை சரியான விளக்கம் அளிக்கவில்லை.
அதைவிட வேதனை தரும் விஷயமாக அந்தக் குழந்தையின் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடிய பொறுப்பாளரை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறிய நிர்வாகம் நான்கு நாட்கள் கழித்துதான் அதனையும் செய்துள்ளது. 


இதன்பின்னர் சென்ற மாதம் 24 ஆம் தேதி மருத்துவமனையின் அலட்சியப் போக்கு குறித்த புகார் மனு ஒன்றினை இந்தத் தம்பதியினர் அந்நாட்டு தேசிய சுகாதார மையத்தில் அளித்துள்ளனர். 


மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், தேசிய சுகாதார மையத்தின் விசாரணைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Indian woman in UK forced to carry dead fetus in womb for two days

***************************************


An Indian woman in the UK was forced to carry a dead fetus in her womb for two days after doctors at the hospital ignored signs of its death and sent her back home.

ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 80% உயர்த்தியுள்ளது. அதேப்போல, ஐடியா நிறுவனம் தனது சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன.


14 - tec phone rate high
 


இந்த மாதம் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது சர்வதேச அழைப்புக்களின் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி விட்டது.


அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செய்யப்படும் அழைப்பிற்கு நிமிடத்திற்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நிமிடத்திற்கு ரூ.6.40 ஆக இருந்தது நினைவு கூறத தக்கது.


Airtel raises ISD rates up to 80%, Idea Cellular by 25%

*************************************


I: Telecom major Airtel has increased international call rates by up to 80 per cent this month mainly due to the impact of depreciation in rupee. Another leading operator Idea has also hiked international call rates by up to 25 per cent, according to the company’s website.

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்தது. சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.


14 - odisa

 


இதன் காரணமாக பாய்லின் புயல் தாக்குதலில் இருந்து மாபெரும் உயிரிழப்பை ஒடிசா மாநில அரசு வெற்றிகரமாக தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்கள் பாய்லின் கோரத் தாண்டவத்தால் பலத்த சேதத்தை சந்தித்து நிலை குலைந்து போய் உள்ளன.


பாய்லின் புயல் தாக்குதலில் சிக்கி 23 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாய்லின் புயல் நேற்று காலை ஒடிசாவில் இருந்து பீகாருக்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


மக்களின் உயிரைக் காப்பாற்றவே மீட்புப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்படும் என்று ஒடிசா முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அதற்கு ஏற்ப ராணுவ வீரர்களும், தேசிய மேலாண்மை பேரிடர் மீட்புக் குழுவினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள்.


பாய்லின் புயலால் ஒடிசாவில் மட்டும் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்ட மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.


பாய்லின் நடத்திய கோரத்தாண்டவத்தில் சுமார் 2½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக அழிந்து விட்டன.


பாய்லின் சீற்றத்துக்கும், மழை வெள்ளத்துக்கும் 14,500 கிராமங்களில் மக்களின் சொத்துக்களுக்கு கடும் நாசம் ஏற்பட்டுள்ளது. 15 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புயல் வேகத்தால் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டன. மீனவர்களின் வாழ்வா தாரங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2400 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவு, உடைக்கு ஏங்கியபடி உள்ளனர். ஒடிசா மாநில அரசு இத்தகைய சேதத்தை எதிர்பார்த்து 5 டன் உணவு தானியங்களை கை இருப்பு வைத்திருந்தது.


அந்த உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒடிசா மாநில அரசு மிகத் திறமையாக எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருந்ததால், மாபெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


அதோடு நிவாரண பணிகளும் திட்டமிட்டப்படி தொடங்கி நடந்த வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொடுத்து விடுவோம் என்று ஒடிசா மாநில அரசு அறி வித்துள்ளது.

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய பிறந்தநாள் அன்று நடக்க இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்து கூட்டத்தை நடத்தவிடாமல் அதிமுக ஆட்சியும் கடந்த ஆட்சி போல தொந்தரவு செய்தது.



 தலைவா படத்துக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்துவந்து படத்தை சிறிதுகாலம் முடக்கி வைத்தது என ஆட்சியாளர்களிடம் படாதபாடு பட்டுவந்தார் விஜய்.இதற்கிடையில் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் என்ன பேசப போகிறார் என்பதை முன்னரே எழுதி வாங்கி படித்துப் பார்த்துதான் அனுமதித்தார்களாம்.


14 - vijay

 


இதையெல்லாம் எண்ணிப்பார்த்த விஜய், இனிமேல் அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தால்தான் தன்னுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று முடிவு செய்துள்ளார் என்றும் எந்த ஆட்சி வந்தாலும் நம்மை வளரவிட மாட்டார்கள். எனவே இப்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன..


எனவே ரசிகர் மன்ற தலைவர்களுடன் ஒரு ரகசிய மிட்டிங் நடத்த திட்டமிட்டார். தமிழ்நாட்டில் எங்கு மீட்டிங் நடந்தாலும் சிக்கல் என்பதை அறிந்து, ஜில்லா பட ஷூட்டிங் நடக்கும் கேரளாவிற்கு ரசிகர் மன்ற தலைவர்களை மட்டும் ரகசியமாக வரவழைத்து கேரள தலைநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிகிறது.அபபோது “நாம் யார் என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய சக்தியை வெளிக்காட்டினால்தான் தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நம்மை பார்த்து பயப்படும். அதற்கு இப்போதிருந்தே நம்மை நாம் தயார் செய்ய வேண்டும்” என ரசிகர்களிடையே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளாராம்.


இந்த ரகசிய மீட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில். இப்போதுதான் கோலிவுட்டில் சிறிதுசிறிதாக ரகசியம் கசிந்து வருகிறது என்பது அடிசினல் தக்வல்.

 
back to top