.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, August 30, 2013

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி இளம்பெண்!


:உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெவர்லி சிங் (29). தென் ஆப்ரிக்காவில் தயாராகும் ப்ளட்ஹான்ட் சூப்பர்சானிக் கார் எனப்படும் உலகிலேயே அதிவேக கார் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிஸ்டல் அருகில் உலகின் மிகச் சிறந்த சுமார் 30 பொறியியல் வல்லுநர்கள் அடங்கிய குழு, சூப்பர்சானிக் கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மணிக்கு 1,220 கி.மீ என்ற வேகத்தில் செல்லும் கார்தான் இதுவரை உலக சாதனையாக உள்ளது. தற்போது ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சானிக் கார் இந்த சாதனையை முறியடிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

30 - lady car eng

விரைவில் வெள்ளோட்டத்துக்கு தயாராக உள்ள இந்த சூப்பர்சானிக் கார் குறித்து வல்லுநர்கள்,”ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் ப்ளட்ஹான்ட் சூப்பர்சானிக் கார் எனப்படும் உலகிலேயே அதிவேக கார் தயாரிப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த புதிய கார் 2016ம் ஆண்டு மணிக்கு 1609 கி.மீ வேகத்தில் செல்லும் என்கின்றனர். கார் தயாரிப்பு குழுவில் போயிங், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட உலகில் உள்ள பிரபல நிறுவனங்களின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் இந்திய வம்சாவளி பெண் பெவர்லி இடம்பெற்றுள்ளார்.

பெவர்லி சிங் (29) போர்ட் எலிசபெத்தில் உள்ள வெஸ்ட் ஆப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். அடுத்த மாத இறுதியில் ஹைடெக் கார் தயாரிப்பு குழுவில் இணைய உள்ளார். இதுகுறித்து பெவர்லி கூறுகையில், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த குழுவில் இணைவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னால் முடிந்த அளவு பங்களிப்பு அளிப்பேன் என்றார்.

Indian-origin woman to help build world’s fastest car
 

*********************************************************************
A 29-year-old Indian-origin woman from South Africa is set to join the team of specialist engineers building the world’s fastest car in the UK.Beverly Singh, a mechanical engineer from Port Elizabeth, will help design the Bloodhound supersonic car, currently being built by a team of about 30 engineers in a high-tech centre near Bristol.


கண்ணாடியின் கதை!


 
 
 
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான்.

அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.

கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள்.

பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது.

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து!


130507153130_grey_hair304 
 
 
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது.

பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை முடிகளில் இருந்து நீக்குவதன் மூலம் முடியின் இயற்கை வண்ணத்தை அதற்கு மீண்டும் அளிக்கமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதி, அந்த வேதிப்பொருளை நீக்கும் மருந்தை உருவாக்கினார்கள். அதை பரிசோதனை முயற்சியாக சிலரிடம் கொடுத்தபோது அவர்களின் உடல் முடி தனது பழைய நிறத்திற்கு மாறியதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை.

இந்த குறிப்பிட்ட மருந்தை இவர்கள் கண்டுபிடித்த விதமே சுவாரஸ்யமானது.
விடிலிகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பின் ஒரு பகுதியாக இந்த ஆய்வாளர்கள் இந்த மருந்தை வடிவமைத்தார்கள். இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன.

இந்த தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது அதுவும் சாத்தியம் என்பதை தாங்கள் கண்டறிந்ததாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ சஞ்சிகையான பேசப் ஜர்னலின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் இவர்.
 

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

twittertape

   டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று ஒரு விஷயமே இல்லை. டிவி,டெஸ்க்டாப்,ஸ்மார்ட் போன் என எதன் மூலம் வேண்டுமானாலும் பங்குகள் விலையை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் 1800 களின் பிற்பகுதி மற்றும் 1900 களின் பாதி வரை பங்குசந்தை போக்கை அறிய உடனடி வழி தந்தி சேவை தான். இப்படி தந்தி வழியே பெறப்படும் பங்குகள் விலையை அச்சிட்டு தரும் இயந்திரமாக டிக்கர் டேப் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் செல்வந்தர்களும் வர்த்தக பெரும் புள்ளிகளும் இதை பயன்படுத்தினர்.
twittertape 

twtape

ஆனால் டிவி அறிமுகமான போதே இந்த இயந்திரங்களின் முக்கியத்துவம் குறையத்துவங்கி விட்டது. கம்ப்யூட்டர் யுகத்தில் இவை முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டன.
ஆனால் டிக்கர் டேப்பை காலாவதியான தொழில்நுட்பம் தானே என்று அலட்சியம் செய்வதற்கில்லை. ஏனெனில் இந்த டிக்கர் டேப்பை உலகின் முதல் டிஜிட்டல் தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லலாம்.விக்கிபீடியா கட்டுரை இப்படி தான் அறிமுகம் செய்கிறது.

எல்லாம் சரி 2013 ல் டிக்கர் டேப் பற்றி பிளேஷ்பேக்? காரணம் இருக்கிறது! பிரிட்டனை சேர்ந்த இணைய வடிவமைப்பாளர் ஆடம் வாகன் டிவிட்டர் யுகத்தில் இந்த இயந்திரத்தை புது விதமாக மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்.அதாவது பங்குகளை அச்சிட உதவிய டிக்கர் டேப் இய‌ந்திரத்தை டிவிட்டர் குறும்பதிவுகளை அச்சிட வைத்திருக்கிறார். தர்மல் பிரின்டர் மற்றும் ஈதர்நெட் இணைப்பு வாயிலாக 30 நொடிகளுக்கு ஒரு முறை குறும்பதிவுகளை இந்த இயந்திரம் அச்சிட்டு தள்ளும்.

பழைய திரைப்படங்களில் பார்த்த இந்த இயந்திரம் தனது மேஜை மீது இருந்தால் எப்படி இருக்கும் என்ற விருப்பம் ஏற்பட்டதை அடுத்து டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப இதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். பழைய உதிரிபாகங்களை இணையம் மூலம் தேடிப்பிடித்து தானே இந்த டிவிட்டர் டேப் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். 

இந்த இயந்திரத்துக்கு என்று இணைய வீடு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். டிவிட்டர் டேப் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் அடங்கிய அந்த தளத்தில் எந்த கலைப்பொருளையும் சேதப்படுத்தாமல் இந்த இயந்திரத்தை பழைய உதிரிபாகங்கள் கொண்டே உருவாக்கியிருப்பதாகவும் அவர் கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
டிவிட்டர் டேப் இணைய இல்லம்:http://twittertape.co.uk/

 
back to top