..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar

8:16 PM

Unknown
No comments
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
மாங்காய் - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
• வேர்க்கடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை ஒரே அளவில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
• கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை போட்டு கலக்க வேண்டும்.
• கடைசியாக எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

8:02 PM

Unknown
No comments

ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.
நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.
கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.
ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி உனக்கு உதவிட முடியும்' என்றார்.
ராமனுக்கு அப்போதுதான் தெரிந்தது...ஆண்டவனை மட்டுமே வேண்டினால் போதாது...நாமும் உழைத்து படித்திருக்க வேண்டும் என்று.
தெய்வ நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதாது ஒரு செயலில் வெற்றியடைய நம் முயற்சியும் வேண்டும்.

7:35 PM

Unknown
No comments

ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.
ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...
உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.
ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.
ராமன் வாய் மூடி மௌனியானான்.
(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்)

6:36 PM

Unknown
1 comment
காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் ரயில் பயணம் செய்யும் பயணிகள், காலி குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காலி குடி நீர் பாட்டில்களை ஒன்றாக சேகரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி 2 சப்வே ரயில் நிலையங்களில், காலி பாட்டில் சேகரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலி பாட்டிலை இயந்திரத்தில் போட்டால், 0.15 டாலர் அளவுக்கு ஒரு சிறு தொகை வாடிக்கையாளருக்கு கிடைக்கும். 15 பாட்டில் போட்டால், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு பணம் கிடைக்கும். திட்டம் வெற்றி பெற்றால் விரிவுபடுத்தப்படும் என சப்வே ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.Pay Your Bills By Plastic Bottle?
*****************************************
In Beijing, China, An owner of subway has introduced a machine which takes plastic bottles from travelers in exchange for money for tickets to ride in train. That’s right. You will not require paying money to travel in subway train, instead you just have to provide ‘installed machine’, a plastic water/juice etc bottle and you can have joyful ride to your destination. The idea and intention behind this technology is uncanny. – See more at: http://www.eproguide.com/pay-your-bills-by-plastic-bottle/#sthash.niKuAb4K.dpuf