.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, September 14, 2013

15-ல் அக்னி ஏவுகணை சோதனை!



கண்டம் விட்டு கண்டம் பாயும் "அக்னி-5' ஏவுகணை, இம்மாதம் 15-ம் தேதி ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் கூறியது:


2012 ஏப்ரல் 19-ம் தேதி அக்னி-5 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக அமைந்தது. 


அதைத் தொடர்ந்து, 5000 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த இரண்டாவது ஏவுகணை, 1000 கிலோ அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது. 


இந்த ஏவுகணை, 15-ம் தேதி வீலர் தீவில் இருந்து 2-ம் கட்டமாக சோதனை செய்யப்பட உள்ளது. 


வானிலை சீராக இருக்கும்பட்சத்தில் 15-ம் தேதி ஏவுகணை சோதிக்கப்பட்டுவிடும். 


முதல்கட்ட சோதனையில் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. 2-வது கட்ட ஏவுகணை சோதனையும் வெற்றி பெறும் என்றனர்.

அழகை தரும் இயற்கை பொடிகள்!

A natural beauty powders

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை  வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர்  பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி  கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன  பொருட்களை.  எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்

கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்


இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சுத்தமான பன்னீர் சேர்த்து அடித்து சிறிய உருண்டைகளாக சேகரித்து நிழலில் உலர்த்தி  வைத்துக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பால் கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த  தண்ணீரால் முகத்தை கழுவலாம். கழுவிய பின் சோப்பு எதுவும் போடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் முகத்திற்கு மென்மையும் பளபளப்பும்  கூடும். 

இன்றைய காலத்தில் அழகுக்காக மக்களை கவர்ந்திருக்கும் பல விதமான சோப்புகள், பவுடர்கள் வாசனை திரவியங்கள் போன்றவற்றை  பயன்படுத்துவதால் முகம், கை, கால்களில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிப்படையும்.. மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் போதிய அளவு  சத்துகள் இல்லாததாலும் தேவையான அளவு தண்ணீர் பருகாததாலும் மிகசிறிய வயதில் முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. பல வித சோப்புகளை  பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலே இயற்கை குளியல் பொடிகளை தயார் செய்து பயன்படுத்தினால் பாதுகாப்பும் அழகும் நம் வசமே இருக்கும்.  

சோம்பு-100கிராம்
கஸ்தூரி மஞ்சள்-100கிராம்
வெட்டி வேர்-200கிராம்
அகில் கட்டை-200கிராம்
சந்தனத்தூள்-300கிராம்
கார்போக அரிசி-200கிராம்
தும்மராஷ்டம்-200கிராம்
விலாமிச்சை-200கிராம்
கோரைக்கிழங்கு-200கிராம்
கோஷ்டம்-200கிராம்
ஏலரிசி-200கிராம்
பாசிபயறு-500கிராம்


இவை அனைத்தையும் தனி தனியாக காயவைத்து அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்து தினமும் குளிக்கும் போது உங்களுக்கு தேவையான  அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து பால் அல்லது தண்ணீர் சேர்த்து குழைத்து உடல் முழுவதும் பூசி 15 நிமிடத்திற்கு பின் குளித்தால் உடல்  தூற்நாற்றம் நீங்கி உடல் நறுமணம் வீசும். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் தேமல், படர்தாமரை,சொறி, சிரங்கு, கரும்புள்ளி, முதலியவை  மறையும். இதை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

இதுவரை விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது!



விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மற்ற விலங்கினங்களிலும் 3,25,000 வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் கண்டுக்கொண்டு சரி செய்தால் எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய ரூ-.600 கோடி டாலர்கள் செலவாகும் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடம் பரவிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் நடத்திய இந்த ஆராய்ச்சியில், உலகில் மனிதர்களும் விலங்குகளும் சேர்ந்து வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உன்னோடு ஒருநாள் - திரை விமர்சனம்!



தனியார் எப்.எம். ஒன்றில் அர்ஜுனும், ஜிப்ரானும் நண்பர்களாக பணிபுரிகின்றனர். அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகி நீலம். ஜிப்ரான் பெண்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இருப்பினும் நாயகி மீது தனி பிரியம் கொள்கிறார். அதேவேளையில், அர்ஜுனுடனும், ஜிப்ரானுடனும் நாயகி நெருங்கி பழகுகிறார்.

ஜிப்ரான் ஒரு கட்டத்தில் நாயகியிடம் தன் காதலை சொல்ல, அவள் மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஒருநாள் ஜிப்ரான் எதார்த்தமாக ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட நாயகி, அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன், நாயகியிடம் தன் காதலை கூறுகிறான். காதலில் தோல்வியடைந்த நாயகிக்கு, அர்ஜுனின் ஆறுதல் வார்த்தைகள் பிடித்துப் போய்விட, அவனை காதலித்து, திருமணமும் செய்து கொள்கிறாள்.

இதனால் மனவேதனையடைந்த ஜிப்ரான் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விடுகிறான். நீலம் மீதான காதலை மறக்கமுடியாத ஜிப்ரான் மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்புகிறான். நீலமை சந்தித்து தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். இதனை புரிந்துகொண்ட நாயகி அவனிடம் நெருக்கம் காட்டுகிறாள். தான் திருமணமானவள் என்று அறிந்திருந்தும், அவனுடன் கள்ள உறவிலும் ஈடுபடுகிறாள்.

இது ஒருநாள் அர்ஜுனுக்கு தெரிந்துவிடுகிறது. இதன்பிறகு அர்ஜூன் என்ன முடிவெடுத்தான்? ஜிப்ரான்-நீலம் ஆகியோருக்கு என்ன முடிவு கிடைத்தது? என்பதை சஸ்பென்ஸ்-திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகர்களாக அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அர்ஜுனின் கண்கள்தான் அவருக்கு பிளஸ். இவருக்கு நண்பனாக வரும் ஜிப்ரான் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்துள்ள நீலம் மும்பை மாடல் அழகி. தமிழ், தெலுங்கில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார். இந்த படத்தில் இவர் அழகாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பும் நேர்த்தியாக உள்ளது.

இயக்குனர் துரை காத்திகேயன், ரொமாண்டிக், சஸ்பென்ஸ், திரில்லர் படமாக எடுத்துள்ளார். படத்தில் அடுத்து என்ன  நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் விபத்து ஒன்றில் இவர் இறந்துவிட்டாராம். நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.

அறிமுக இசையமைப்பாளர் சிவப்பிரகாசம் இசையில் பாடல்கள் கேட்கலாம் என்ற ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜயராஜ் ஒளிப்பதிவில் பாடல்களும், காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘உன்னோடு ஒருநாள்’ ஜாலியான பயணம்.
 
back to top