.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, September 16, 2013

விக்கிலீக்ஸ் அஸாஞ்சே கட்சி தோல்வி!


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


sep 16 - julian-assange-wikileaks-

 


விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.
இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு. தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கும் அஸாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார்.அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அஸாஞ்சே உள்பட அவரது கட்சியை சார்ந்த அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.



Is WikiLeaks Party’s defeat an end of Assange’s political career?
**************************************** 


The whistle-blowing website WikiLeaks founder Julian Assange, who ambitiously launched his political party called “The WikiLeaks Party”, ahead of federal elections in Australia that were held on September 7, lost badly. Tony Abbott from the Liberal/National Coalition won the elections while defeating Labor party’s leader Kevin Rudd.

உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)



 
கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.


அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.


ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.


ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.


அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.


அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.


மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.


புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.


அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.


இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். 

நிமிர்ந்து நில் படத்தில் வில்லனாக ஜெயம்ரவி!




நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்திருக்கிறார்.
போராளி வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி வரும் திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதாவது 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டர்கள். 


அவருக்கு ஜோடிதான் அமலாபால். சரத்குமார் சிபிஐ அதிகாரியாக வருகிறார். இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கிறார். 


இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் நானி ஹீரோ. கிட்டதட்ட 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 


இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது: உன்னை சரிசெய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். 48 வயது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருக்கும்.  இதற்காக ரவி நிறைய உழைத்திருக்கிறார். இளம் வயது ரவியும் வில்லன் ரவியும் மோதும் சண்டைக் காட்சி அதிகப் பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்றார்.

அதிரடி மாற்றம் : மோடியை புகழ்ந்து தள்ளும் அத்வானி!




மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கொடி பிடித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


சட்டீஸ்கர் மாநிலம் கர்பாவில் நடைபெற்ற பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அத்வானி, குஜராத் மாநிலம் உள்கட்டமைப்பிலும், மின்சார வசதியிலும் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஏன் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதற்கு இதுவே உதாரணமாகும் என்று கூறிய அத்வானி, குஜராத்தின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி ஏராளமான பணிகளை செய்துள்ளார் என்று கூறினார்.

 
back to top