.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, September 17, 2013

அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்



 
 
மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார்.

 
ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிரம் வந்து விடுவேன் 'என்று சொல்லிச் சென்றாள்.


பின் மதனும் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்து ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான்.
ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை...


கையில் இருக்கும் பாதாம் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு புலம்பி அழுதான்...


அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டார்...அவர்..'மதன் உன் கையில் வைத்திருக்கும் பாதாம் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..மீதி கொஞ்சம் பாதாம் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடும்' என்றார்.


எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாக அடைய முயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.
 
 

நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்



அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.


கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.


அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.


அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.


உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.


அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....

அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.


மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.


உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

தேப்லா!

தேப்லா


தேவையான பொருட்கள் :

 

கோதுமை மாவு - 2 கப்
 

நெய் - 1 ஸ்பூன்
 

உப்பு -தேவையான அளவு 



செய்முறை :


 

• கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து மெத்தென்று பிசைந்து கொள்ளவும்.

 

• மெல்லி சப்பத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.

 

• பூரியை விட சற்று பெரிய சப்பாத்திகளாக மெல்லியதாக திரட்டுங்கள்.

 

• தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு அது உப்பும்போது சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள்.

 

• அதனுள் இருக்கும் காற்று, மற்ற இடங்களுக்கு பரவி பூரி போல எழுப்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து சிறிதளவு நெய் தடவி வையுங்கள்.

 

• மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி. 

முள்ளங்கி தயிர் பச்சடி!


முள்ளங்கி தயிர் பச்சடி


தேவையானவை:

முள்ளங்கி - 3
தயிர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது),
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


 

• முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

• தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• துருவிய முள்ளங்கியுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும் (காரல் நீங்குவதற்கு).

• பிறகு அதைப் பிழிந்து, தயிருடன் சேர்க்கவும் .

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்.

• இந்த முள்ளங்கி தயில் பச்சடி சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் உடல் குளிர்ச்சிக்கு இந்த பச்சடி சிறந்தது. 


 
back to top