.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 15, 2013

இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை!

சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது.


இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.இந்நிலையில் அரசுத்துறைகள் மற்றும் தனியார் அமைப்புக்கள் இணைந்து தமிழகம் முழுவதும் புதிய கலைநிகழ்ச்சிகளை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்..தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் அழிந்து விடா வண்ணம், இளைஞர் சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும அவர் அறிவித்துள்ளார்.



15 - chennai sangam.MINI


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”கடந்த 1991ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கலை பண்பாட்டுத் துறை சார்பாகவும்,பிற அரசுத்துறைகள் மற்றும் தனியார் அமைப்புக்கள் சார்பாகவும்,தமிழகம் முழுவதும் நடத்தப்படும் அந்த கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு” செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் மூலம் அயல் நாடுகளுக்கு இடையிலான கலை பறிமாற்ற திட்டத்தின்கீழ், ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களுக்கு இடையிலான கலை பறிமாற்ற திட்டத்தின்கீழ் ஐந்து அல்லது ஆறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இதன்மூலம் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் உலகறியச் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இத்தனைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் முயற்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியை புது வடிவில் நடத்திக் காட்டவே இது போன்ற கலைநிகழ்ச்சிகளை அம்மையார்அரசே நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.ஆக -கனிமொழியின் சென்னை சங்கமத்துக்கு – ஜெயலலிதா செக் வழங்கினார் – இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்க்கும்.

டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான Rubber Board நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Assistant Account Office, Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator & Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15 - vazhikaqtti rubber-board.
 
மொத்த காலியிடங்கள்: 63

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:


1. Director (P&PD) – 01

2. Assistant Account Officer – 02

3. Statistical Assistant – 01

4. Scientific Assistant – 03

5. Farm Assistant -14

6. Rubber Tapping Demonstrator -14

7. Junior Assistant – 28


வயதுவரம்பு:
27 – 55-க்குள் இருத்தல் வேண்டும்.

பணி வாரியான கல்வித்தகுதி விவரம்:

Director (P&PD) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் – BE/B.Tech/Master Degree in Chemistry முடித்திருக்க வேண்டும்.

Assistant Account Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் – CA முடித்திருக்க வேண்டும்.

Statistical Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Scientific Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Botany/Chemistry/ Zoology
போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Farm Assistant மற்றும் Rubber Tapping Demonstrator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் SSLC முடித்து Diploma in Agriculture முடித்திருக்க வேண்டும்.

Junior Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 முடித்து நிமிடத்திற்கு 30 வார்த்தைக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


பணி வாரியான சம்பளம் விவரம்:



Director (P&PD) பணிக்கு ரூ.15600-39100+கிரேடு சம்பளம் ரூ.7600 வழங்கப்படும்.
Assistant Account Officer பணிக்கு ரூ.9300-34800+கிரேடு சம்பளம் ரூ.4600 வழங்கப்படும்.


Statistical Assistant பணிக்கு ரூ.9300-34800+கிரேடு சம்பளம் ரூ.4200 வழங்கப்படும்.
Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator, Junior Assistant பணிகளுக்கு மாதம் ரூ..5200-20200+கிரேடு சம்பளம் ரூ.2800/.2400/.2400/1900 வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
:


 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
: 12.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rubberboard.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இரவு நேரத்தில் நடந்த சோகம்! 52 பேர் பலி!




 பெரு நாட்டில் மலை சரிவிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தென் அமெரிக்க நாடான பெருவின் சான்டா தெரசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது.


அப்போது எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழி விடுவதற்காக, ஒதுங்கிய போது மலை சரிவில் உருண்டு சவுபிமாயோ நதியில் விழுந்தது.


நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பேருந்தில் இருந்த பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.


இந்த விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால், யாரையும் மீட்க முடியவில்லை.



Peru 'bus' crash kills 51, including 14 children, on way home from party

A cargo truck being used as a makeshift bus has fallen off a cliff in an accident in Peru, killing all 51 people on board including 14 children.

The incident on Friday night came as a l
arge group of Quechua Indians, a people indigenous to the Andean highlands, made their way home from a party in the provincial capital of Santa Teresa.

The red-and-yellow truck came off the road and fell from a cliff, plunging about 650 feet (200 metres) into the Chaupimayo river below.

Rescuers searched with flashlights throughout the night, finding bodies as far as 330 feet (100 metres) away from the crash site – suggesting, officials said, that they had been thrown from the truck as it fell.

“We haven't found a single survivor,” said firefighter Captain David Taboada, who was leading the rescue operation.
Initial reports said 52 bodies had been pulled from the waters around the twisted metal remains of the vehicle, but a press release from the Santa Rita police yesterday confirmed an official toll of 51.

The cause of the accident hasn't been determined, Taboada said, adding that the vehicle was “coming from a party in Santa Teresa at which a lot of alcohol was consumed.”

Firefighters were placing the recovered bodies on a soccer field above where the crash took place.

Throughout the morning and day, relatives of the victims arrived to identify their loved ones.

Fedia Castro, mayor of the district where Santa Teresa is located, told Canal N television that rural farmers must rely on informal forms of transport, such as this cargo truck, because no public buses exist in the area.

The high-altitude roads of the Peruvian Andes are notorious for bus plunges, with poor farmers comprising many of the victims. Last year, more than 4,000 people were killed in such accidents.

ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம்!

ஆரோக்கியத்தை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் அன்றாட சந்தோஷத்தை சாட்டிலைட் சானல்களிலும் அடகு வைத்துவிட்ட இன்றைய சமூகம் நிழலைத் தொடரும் நிஜமாக இருக்கிறது.பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தாலும் குழந்தைப் பிறப்பில் எப்போதும் ஏற்றத்துடன்தான் இருக்கிறது. விஞ்ஞானம் இன்று ஒவ்வொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து விட்டுதான் குழந்தையை வெளியில் எடுக்கிறது.


15 - health preganand

 


ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலை விடவும் மருந்துகளே அதிகம் புகட்டப்படுகின்றன என்பது புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு புற்றுநோயாக சமூகத்தில் ஆகிக் கொண்டிருக்கிறது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைப்படத்திற்காக தற்கொலை செய்து கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறோம்.


பகட்டுப் படிப்பு, 12 மணி நேர அலுவல், கைபேசிக் காதல், கணிப்பொறி ஜாதகம் பார்த்து கல்யாணம் என இன்றைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.பணம் சம்பாதிக்கப் போய் நோய் பெற்று, நோயைத் தீர்க்கப் பணம் கொடுத்து என இன்றைய மனிதன் வேலைகளின் விளைவால் இறுதியில் கடன்பட்டே நிற்கிறான். 


இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் நிலைமை கண்ணீரைத் தாண்டிய கொடுமை. 20 வருடங்கள் முன்பு வரை என் அம்மா, என் நண்பனின் அம்மா எல்லோரும் பல குழந்தைகளைப் பெற்று எடுத்தவர்கள். அத்தனையும் சுகப் பிரசவம். இன்று என் சகோதரியின் தோழிகளுக்காட்டும், நண்பர்களின் சகோதரிகளுக்காகட்டும் எனக்குத் தெரிந்த வரையில் சுகப் பிரசவம் என்பதே இல்லை.


ஏவுகணைகளைச் செவ்வாய்க்கு அனுப்பத் தெரிந்த இன்றைய விஞ்ஞானத்திற்கு ஒரு சிசுவை கர்ப்பத்திலிருந்து சுக முறையில் எடுக்கத் தெரியவில்லை. நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது என்பது அடுத்தடுத்த நோய்களுக்கு நாம் எடுத்து வைக்கும் படிக்கட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.


துரித உணவுகள் தமிழனின் சரிதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. நோய்களுக்குத் தீர்வு மருந்தல்ல. நோயாளியின் நடத்தை. குழந்தையின் பிறப்புக்கு தாய் கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய, குழந்தையின் பிறப்புக்கு தாய்க்கே கருவி தேவைப்படக் கூடாது. கர்ப்பத்தில் அவளுக்கு வேண்டிய முக்கிய மருத்துவம் ஆரோக்கியம் மட்டுமே. உடலுழைப்பு, தியானம், சக்தியிழக்காத காய்கறிகள், பழங்கள், கீரை இவையே வயிற்றிலிருக்கும் சிசுவை வலிமையானதாக்கும். எதையும் சுலபமாக அணுகும் மனம், சிரித்துப் பேசும் குணம் இவையிருந்தாலே நிச்சயமாக ஒரு பெண்ணால் சுகப் பிரசவம் என்னும் சிகரத்தை அடைய முடியும்.



இதையும் மீறி கர்ப்பிணிப் பெண்களின் உடம்பில் சுகப் பிரசவம் நிகழ வாய்ப்பில்லாத பல சிக்கல் நிலைகள் இருக்கலாம். அது வேறு. ஆனால், நம்மேல் நமக்கில்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும்?
உடற்பயிற்சிக் கூடம் சென்று உடம்பைக் குறைக்க நாம் மாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயார். ஆனால் ஒரு காசு செலவில்லாமல் ஒரு மணி நேரம் மைதானத்தில் தொடர்ந்து ஓடினால் சில மாதங்களில் உடம்பின் அத்தனைக் கொழுப்பும் இறங்கி அது நாம் இட்டக் கட்டளையை செய்யும். ஆனால், பகட்டாய் வாழ விரும்பும் மனிதன் அதை விரும்புவதில்லை.


பெண்களே! மாற்றுங்கள். நம்பிக்கை ஊசியை உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் ஏற்றுங்கள். உங்கள் உடற்பயிற்சியை துவங்குங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது அது இருக்கட்டும்.நீரால் குளிக்கும் முன் வேர்வையால் உடல் கசடுகளைக் கழுவுங்கள். சிரித்து பேசுங்கள். ஓய்வு நேரத்தில் சோம்பேறியாக இருக்காமல் விளையாடியே பொழுதைப் பொன்னாக்குங்கள்.


கீரை, கேழ்வரகு, கம்பு, சோளம் – நம் உடல் நல வரலாறு. கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் இருந்து ஒதுக்காதீர்கள்.அது உங்கள் கேச நிறத்தையும், பற்களையும் உங்களிலிருந்து ஒதுக்கி விடும். யோகம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வாழும் முறையை கற்றுக் கொண்டு நடக்காதீர்கள். நடந்து நடந்து கற்றுக் கொள்ளுங்கள்.
 
back to top