.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 27, 2013

எந்திரனை விஞ்சிய அஜீத்தின் ஆரம்பம் டீசர்!

27 - arrmbam-movie-
    
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது என்றாலும் சமீபகாலமாக அங்கும் மார்க்கெட் கொஞ்சம் எகிறிக் கொண்டுதான் வருகிறது.ஆனாலும் அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20 முதல் 30 ஆகத்தான் இருக்கும். அதுவும் டாப் ஹீரோகக்ளின் படம் மட்டுமே ரிலீஸாகும். மேலும் தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்துதான் ரிலீஸ் செய்வார்கள்.இந்நிலையில் தீபாவளியையொட்டி ரிலீஸாகவிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டில் இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படம் தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.அதை எல்லாம் தாண்டி இப்போது ஆரம்பம் தமிழில் மடடும் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது என்பதை சிலாகித்து பேசுகிறார்கள்.

BMW 2 Series Coupe கார்கள் விற்பனைக்கு தயாராகின!

கார் பாவனையாளர்களின் மனங்களை வென்ற BMW நிறுவனத்தின் புதிய அறிமுகமாக BMW 2 Series Coupe கார்கள் சந்தைக்கு வரவுள்ளன.
அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கார்கள் 228i, M235i மொடல்களை கொண்டுள்ளன.


இதில் BMW 228i கார் ஆனது 240 குதிரை வலு உடையதாகவும் 5.4 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை BMW M235i கார் 322 குதிரை வலு உடையதாகக் காணப்படுவதுடன் 4.8 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


BMW 228i காரின் விலையானது 33,025 டொலர்கள் எனவும், BMW M235i காரின் விலையானது 44,025 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்!


ஆண்டு புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பிரிவு
2012 தோல் டி. செல்வராஜ் நாவல்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் நாவல்
2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
2009 கையொப்பம் புவியரசு கவிதை
2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்
2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் நாவல்
2006 ஆகாயத்திற்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை
2005 கல்மரம் திலகவதி நாவல்
2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து நாவல்
2002 ஒரு கிராமத்து நதி சிற்பி கவிதை
2001 சுதந்திர தாகம் சி.சு.செல்லப்பா நாவல்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி.க.சிவசங்கரன் விமர்சனம்
1999 ஆலாபனை அப்துல் ரகுமான் கவிதை
1998 விசாரணைக் கமிஷன் சா.கந்தசாமி நாவல்
1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்
1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்
1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் நாவல்
1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் நாவல்
1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் நாவல்
1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் நாவல்
1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் நாவல்
1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் நாவல்
1989 சிந்தாநதி லா.ச.ராமாமிர்தம் சுயசரிதை
1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்
1987 முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்
1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்
1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்
1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) நாவல்
1983 பாரதி : காலமும் கருத்தும் தொ. மு. சி. இரகுநாதன் இலக்கிய விமர்சனம்
1982 மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை மா. இராமலிங்கம் விமர்சனம்
1980 சேரமான் காதலி கண்ணதாசன் நாவல்
1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்
1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி நாவல்
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்
1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்
1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் நாவல்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்
1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி நாவல்
1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச இராகவன் கவிதை
1967 வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் நாவல்
1962 அக்கரைச் சீமையிலே மீ.ப.சோமு பயண நூல்
1961 அகல் விளக்கு மு. வரதராசன் நாவல்
1958 சக்கரவர்த்தித் திருமகன் கி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை
1956 அலைஓசை கல்கி நாவல்
1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை

முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!

   முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
 
த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.
 
back to top