.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, October 29, 2013

மசாஜ ஏன்? யார்?எப்போ?எப்படி?பண்ணலாம்!

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும்.

ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு சில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும்.



29 - massage health




அதிலும் இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போமா?.


மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும். மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.


ரத்த ஓட்டம்:

மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்:

வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.

இதயம்:

முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது.

பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
 
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி - சுற்றுலாத்தலங்கள்!

      பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி

பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி
 புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில் இது அமைந்துள்ளது.

 ரித்திரத்தின் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் சாஞ்சி ஸ்தூபியின் பின்னணியில் பக்தியும் உண்டு. காதலும் உண்டு. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், பேரரசர் அசோகர். இவரை விதிஷா நகரத்து வியாபாரிகள் சிலர் அணுகி, புத்த மையம் ஒன்று அமைக்க இடம்தருமாறு கேட்டுள்ளனர். உடனே சம்மதம் தெரிவித்த அசோகர், புத்த மையம் அமைக்கும் பணிகளில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

 ப்போது அந்த வியாபாரிகளில் ஒருவரது மகள்மீது காதல் கொண்ட அசோகர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, தலைநகர் பாடலிபுத்திரத்துக்கு நாம் கண்டிப்பாக செல்ல வேண்டுமா? இங்கேயே இருந்து இல்லற வாழ்வில் ஈடுபட-முடியாதா.... என காதல்மனைவி கேட்டுவிட, மறுப்புச் சொல்ல முடியவில்லை மன்னருக்கு. சாஞ்சி பகுதியிலேயே தங்கி விட்டார். வீட்டையும், நாட்டையும் இங்கிருந்தே கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அரச தம்பதிக்கு மகேந்திரா, சங்கமித்ரா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளும் புத்தமதத்தின்மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பின்னாளில் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் புத்தமதத்தைப் பரப்பியுள்ளனர்.
 சாஞ்சியில் பல ஸ்தூபிகள், சிறு கோவில்கள் உள்ளன. இவை கி.மு.3 - கி.பி.13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டவை என கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரைவட்ட கோள வடிவத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் பிரதான ஸ்தூபிதான், 3ம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டதாம். செங்கல் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் கற்களால் அழகுற அமைக்கப்பட்டு இன்றளவும் வடிவமைப்பால் அசத்திக்கொண்டிருக்கிறது இந்த ஸ்தூபி.

 தை தியான அரங்கம் என்று கூட கூறலாம். இதன் கட்டிடங்களில், சுவர்களில் புத்தரைப்பற்றி நேரிடையாக குறிப்பிடாமல், அவரைப் பற்றி மறைமுகமாக சில குறிப்புகள் உணர்த்தப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. தாமரை வடிவம்-புத்தரின் பிறப்பையும், மரம் - புத்தர் ஞானம் அடைந்ததையும், சக்கரம்- புத்தரின் சொற்பொழிவையும், ஸ்தூபி- முக்தியையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. சாஞ்சி ஸ்தூபிக்கு நான்கு முக்கிய வாசல்களும் உள்ளன. இந்த வாசல்களிலும் கலைத்திறன் பளிச்சிடுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள புத்தமதத்தினரையும் கவர்ந்துள்ள சாஞ்சி ஸ்தூபி 1989ம் ஆண்டில் யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.
எப்படிப் போகலாம்?
சாலை மார்க்கமாக போபாலில் இருந்து 46 கி.மீ, விதிஷாவில் இருந்து 10 கி.மீ, இந்தூரில் இருந்து 232 கி.மீ தொலைவில் சாஞ்சி உள்ளது. ரயிலில் செல்வதென்றால் போபாலில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லலாம். போபாலில் விமான நிலையமும் உள்ளது. சாஞ்சி ஸ்தூபியை பார்வையிட கட்டணம் உண்டு. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு உள்ளது.

கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)


ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.

அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு  ஓநாய்  வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.

ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது  இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை சுமத்துகின்றனவே' என்றது.

அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன் .... ஆகவே எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் என் நினைவு வருகிறது' என்றது.

நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது.அப்படி செய்தால் நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மை வந்துசேரும்.

கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)



ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.

அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.

மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.

ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.

ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை வேருடன் பிடுங்கினான்.
பின் வளர்ந்த மரத்தை பிடுங்கச் சொன்னார்.ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

ஆசிரியர் சொன்னார். ';கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்..ஆரம்பத்திலேயே முயன்றால் திருத்திவிடலாம்.இல்லாவிட்டால் அவை மனதில் நன்கு வேரூன்றி விடும்.
பின்னர் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் சமூகத்தில் அவன் கெட்டவன் என்ற பெயரிலேயே வாழ நேரிடும்' என்றார்.

புரிந்து கொண்ட ரமேஷ்...'அன்று முதல் நல்ல பையனாக நடந்து கொள்வதாக ஆசிரியருக்கு வாக்கு அளித்தான்.அதன்படியே நல்லவனாக மாறினான்.

கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலே அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.
 
back to top