.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 31, 2013

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

பீர் பிராண்ட்டுகள்

உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.


பீர் ஃபோபியா


உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர்

பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.


சளிக்கு சிறந்தது

சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.


அழகு

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.


ஸ்மார்ட்டாக்கும்


எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.


ஆற்றல் பானம்

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.


விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும், வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

31 - cine tax

கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது.


 இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் 1950-ம் ஆண்டு எடுக்கப்பட்ட “ரத்தக்கண்ணீர்”, “மனோகரா” உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் “மன்மதன்”, “போக்கிரி” ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.


அரசு உத்தரவு எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ., எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக “சில்லுன்னு ஒரு காதல்”, “கற்றது தமிழ்”, “எம்மகன்” என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கை பெற்று விட்டனர். இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.


இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004-ல் மட்டும் ரூ.75 கோடியே 7 ஆயிரம் கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006-ம் ஆண்டு இது 16 கோடியே 35 ஆயிரமாக குறைந்து விட்டது. தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். “எந்த படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றும், இதில் கோர்ட்டு தலையிட முடியாது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் இது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது என்றும் தீர்ப்பில் கூறியிருந்தனர்.


இந்நிலையில் மற்றொரு வழக்கறிஞர் மோட்சம் இப்போது தாக்கல் செய்துள்ள இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை.


31 - criket

இந்திய அணி வீரர்கள் வருமாறு :


 தோனி,

புஜாரா,

சச்சின்,

தவான்,

 கோஹ்லி,

அஷ்வின்,

ரகானே,

ரோகித் சர்மா,

இஷாந்த் சர்மா,

முரளி விஜய்,

ஓஜா,

உமேஷ் யாதவ்,

 முகமது சமி,

புவனேஷ்வர் குமார்,

அமித் மிஸ்ரா.

தனது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நட்சத்திர ஆட்டகாரர் சச்சினுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Ishant Sharma, Shikhar Dhawan return for Sachin Tendulkar’s farewell Test series against West Indies

இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்!


இன்போஸிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு ரூ.215 கோடி (35 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபாரதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதாக அமெரிக்க தரப்பில் இருந்து இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
back to top