.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, November 6, 2013

எச்சரிக்கை! பெண்களுக்காக…



56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையா ….என தெரியவில்லை….
காரணம், அதிகபட்சமான பெண்கள் இதையே உபயோக படுத்துகிறார்கள்...

எனினும் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோகிக்கப் படுவதாகவும், இது வெளிவரும் திரவத்தை gel நிலைக்கு மாற்றுவதாகவும், இதனால் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Ultra pad கள் பயன்படுத்துபாவர்கள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன்படுத்துமாறும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கிறது…

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவதுடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறுகின்றது எனவும்… செய்திகள் பரவலாக வருகிறது.

எனவே மக்கள் நலன் கருதி இதை பகிர்கிறேன்…

இந்த செய்தியை பகிர வெட்கப்படத்தேவையில்லை ..

இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது சகோதரிகளுக்கு உதவிடுவோம் …

வயிற்றின் நண்பன் தேன்!

இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள் உடலில் உள்ள ஜீரண பாதையில் சுலபமாக கிரகிக்கும். தேன...் ஏழு வகைப்படும். ஆனால் ஒரு தேனீ எந்த செடியில் இருந்து தேனை சேகரிக்கிறதோ, அதன் மருத்துவ குணத்தை பெற்றுவிடுகிறது. கொம்பு தேன், மலைத்தேன், மரப்பொந்து தேன், மலைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழு வகை உள்ளன.

ஆனால், இவற்றில் மலையில் உள்ள மரம் செடிகளில் இருந்து சேரிக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு. பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் வெகு விரைவில் மருந்து உறிஞ்சப்பட்டு விடும். ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல்படும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம். இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம் பழம் இரண்டையும் ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் குறையும். ஒரே டம்ளர் வெந்நீர் அல்லது சூடுபடுத்தப்பட்ட பாலில் மூன்று டீஸ் பூன் தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தினால் தூக்கம் நன்றாக வரும். நோய் எதிர்ப்பு தன்மை பெருகி, உடல் ஆரோக்கியம் ஏற்படும். நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருகினால், ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

தொடர்ந்து ஆறு வாரம் அருந்தினால் ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை முற்றிலும் நீங்கி விடும். உடல் அழகையும், குரல் இனிமையையும் ஏற்படுத்தி தரும் குணம் தேனுக்கு உண்டு. வயிற் றுக்கு சிறந்த நன்பன் என்றால் அது தேன் தான். தினமும், 3 டீஸ்பூன் தேனை 100 மில்லி லிட்டர் வெந்நீரில் காலை அல்லது இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றுப்புண், இரைப்பை அலர்ஜி, ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். குறிப்பாக அமிலத் தன்மையை கட்டுப்படுத்தி அல்சர் நோயை குணப்படுத்தும்.

சுத்தமான தேனை தேர்வு செய்வது எப்படி


சுத்தமான தேனில் மகரந்தம் கலந்திருக்கும். இடத்திற்கு இடம் இது மாறுபடும். இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறிவிடும். ஆறு மாதத்திற்கு தேனை வைத்திருந்து சாப்பிடலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோகச்சத்து உடலுக்கு ஏற்றது. சில சமயங்களில் தேனில் கலந்துள்ள மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

தேன் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தேனில், தீக்குச்சியை சில விநாடிகள் ஊற வைத்து துடைத்து தீப்பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரை கலப்படம் இல்லை என்பதை அறியலாம். அல்லது மை உறிஞ்சும் காகிதத்தில், செய்திதாளில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பேப்பர் தேனை உறிஞ்சாமல் இருந்தால் அது நல்ல தேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட்

                                  


மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
                                              
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

                                               

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 5, 2013

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு!


anand-1 

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 


5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.


43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை துடிப்புக்குமான மோதலாக கருதப்படுகிறது. செஸ் உலகில் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் இந்த மோதல் வர்ணிக்கப்படுகிறது.
கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை கடவுளாகவும் கொண்டாடும் தேசம் இது. செஸ் விளையாட்டில் இந்தியாவை தலைநிமிற வைத்த ஆனந்தை நாம் உரிய முறையில் கொண்டாடியிருக்கிறோமா ? என்பதை எல்லாம் விட்டு விடுவோம். தனது சொந்த மண்ணில் களமிறங்கும் சாம்பியனை கைத்தட்டி ஊக்குவிக்கும் நேரமிது. 


சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு பதிவு:


chess 

ஆனந்துக்கு வாழ்த்து!

கார்ல்சன் சவாலை ஆனந்த் சமாளிப்பாரா என்று செஸ் உலகமே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. ஆனந்தோ அமைதியாக இந்த போட்டிக்கு தயாராகி இருக்கிறார். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன ? வெல்லுங்கள் என்று வாழ்த்துவது தானே. இதற்காக என்றே பிரத்யேக இணையதளம் விஷ்4விஷி எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்தின் நீண்ட கால ஸ்பான்சரான என்.ஐ.ஐ.டி இந்த தளத்தை அமைத்துள்ளது.உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் முக்கியம் என அழைக்கும் இந்த தளம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக ஆதரவு குரல் கொடுங்கள் என்கிறது. 


வாழ்த்து செல்வதற்காக என்று உள்ள கட்டத்தில் உங்கள் பெயர், இமெயில் முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை சமர்பித்து சாம்பியனுக்கான வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். வாழ்த்துக்களை டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் வழியேவும் பகிர்ந்து கொள்ளலாம்.மிகச்சிறந்த வாழ்த்து செய்தி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பரிசாக உலக சாம்பியன்ஷிப் போட்டியை காண்பதற்கான டிக்கெட் காத்திருக்கிறது.


போட்டி நடைபெறும் இடம் , போட்டி அட்டவணை ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. ஆனந்தை வாழ்த்துவோம்.


போட்டியை நேரில் காண !


சென்னை ஹயத் ஹோட்டலில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியை இணையத்தில் நேரில் காணலாம். அதற்கான வாய்ப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டிகான அதிகார பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.


எனும் முகவரியிலான இந்த தளத்தில் போட்டி தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இரு வீரர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்கள் ஆட்ட முறை பற்றிய விவரங்களையும் காணலாம். புகைப்படங்கள் ,டிவிட்டர் குறும்பதிவுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. போட்டியின் முடிவுகளை ஒவ்வொரு சுற்றுக்கும் தெரிந்து கொள்ளலாம். போட்டி இடம் அட்டவணை, அதிகாரிகள் பற்றிய விவரங்களும் உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவும் செய்யலாம்.


ஆனந்த மொழிகள்.


( பாபி) பிஷர் மற்றும் கார்ல்சன் இருவருக்குமே செஸ் விளையாட்டை மிகவும் எளிமையாக்கும் ஆற்றல் இருப்பதாக நினைக்கிறேன்.
இது செஸ் கடவுள் என்று போற்றப்படும் பாபி பிஷர் மற்றும் தற்போதைய இளம் செஸ் மேதையான கார்லசன் இருவரின் அபார திறமையை அங்கீகரித்து ஆனந்த் தெரிவித்த கருத்து. இது போல் ஆனந்த் பல்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துக்கள் மேற்கோள்களாக செஸ்கோட்ஸ் தளத்தில் இடம் பெற்றுள்ளன. 


செஸ் என்பது ஒரு மொழி போல ,முன்னணி வீரர்கள் அதில் சரளமாக உள்ளனர். திறமையை வளர்த்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்களுக்கு எதில் திறமை அதிகம் என கண்டறிய வேண்டும். இதுவும் ஆனந்த் சொன்ன மொழி தான். 


ஆனந்த் பற்றி மற்ற செஸ் சாம்பியன்களின் மேற்கோள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. 



டிவிட்டர் பேட்டி.


உலகமே எதிர்பார்க்கும் இந்த மோதலுக்காக ஆனந்த் எப்படி தயாராகி இருக்கிறார் என்று அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. அதிவேக செஸ் பாணியில் ஆனந்திடமே இருந்து இதற்கு பதில் வருவதைவிட விறுவிறுப்பானது எது ? போர்ப்ஸ் இதழ் ஆனந்துடன் டிவிட்டர் மூலம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. 




anannc 

டிவிட்டரில் ஆனந்த்.


விஸ்வநாதன் ஆனந்தை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் பின் தொடரலாம். இது ஆனந்தின் டிவிட்டர் முகவரி: 



 பிரபல் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் வரைந்த தனது ஓவியத்தை தான் ஆனந்த் டிவிட்டர் படமாக வைத்திருக்கிறார். தி கிங் என்கிறது அவரது சுயசரிதை குறிப்பு.


உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரசிகர்கள் அனுப்பிய ஒவ்வொரு வாழ்த்துமே விஷேசமானது என சதுரங்க ராஜா ஒரு குறுபதிவு மூலம் நன்றி தெரிவுத்துள்ளார்.



 இது ஆனந்தின் பேஸ்புக் பக்கம். 

சதுரங்க போட்டிகள்.

ஆனந்த் ரசிகர்களுக்கு அவரது முக்கியமான செஸ் ஆட்டங்கள் பற்றியும் அதில் மேற்கொள்ளப்பட்ட காய் நகர்வுகள் பற்றியும் தெரிந்து கொள்வதை விட மகிழ்ச்சி அளிக்க கூடியது வேறு என்ன? ஆனந்தின் செஸ் கேம்களை இந்த இணையதளங்களில் பார்க்கலாம்:






தேசமே உங்கள் பின்னால் இருக்கிறது ஆனந்த், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
 
back to top