.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 8, 2013

ஒவ்வொரு நாட்டினருடன் எப்படிப் பேசுவது?

இங்கிலாந்து- நாட்டினருடன் பேசும்போது நெருக்கமாக நிற்காதீர்கள். எவரையும் திருவாளர், திருமதி, டாக்டர் என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும். முறையாக உடை அணிய வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள். குடும்ப விஷயத்திலிருந்து பேச்சைத் தொடங்காதீர்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை.

சீன- நாட்டினருடன் எடுத்த எடுப்பில் வியாபார சமாச்சாரங்களைப் பேச வேண்டாம். உடலோடு ஒட்டி நிற்காதீர்கள். தொட்டுப் பேசாதீர்கள். தேநீரை ரசித்துக் குடியுங்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளின்போது அடிக்கடி தேநீர் தரப்படும். மரபு வழியிலான உடையை அணியுங்கள். வெள்ளை உடை அணிந்து பொது விழாக்களுக்குச் செல்லாதீர்கள். அங்கே வெள்ளை துக்கத்திற்கு அடையாளம்.

அரபு- நாட்டினருடன் உரையாடும்பொழுது உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாக நிற்பார்கள். அது அவர்கள் பழக்கம். அதைத் தவிர்க்க நீங்கள் பின்னே தள்ளி நிற்க முயற்சி செய்யாதீர்கள். அது அங்கே மரியாதைக் குறைவாகக் கருதப்படும். அராபியர்களிடம் அவர்களது குடும்பம் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள். அவர்கள் அதை விரும்புவதில்லை.

பிரான்ஸில் விருந்தினர் உள்ளே நுழையும்போதும் விடை பெற்று வெளியே செல்லும்போதும் கை குலுக்குங்கள். பேச்சு வார்த்தைக்கு

பிரெஞ்சு மொழியில் முன்னதாகவே கடிதம் எழுதுங்கள்.

சில பழைய வார்த்தைகளும், அதற்கான புதிய அர்த்தங்களும்!

பொதுவாக சொல் அகராதி எனப்படும் டிக்ஸ்னரியில், வார்த்தைகளும், அதற்கு ஏற்ற அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கும் அதுபோன்ற ஒரு அகராதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை கொடுத்துள்ளது.

என்னவென்று பார்ப்போம்.

சமரசம் – ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.

கருத்தரங்கு – ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து அதிகமாக்குவது.

கருத்தருங்கு அறை – இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள், சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே நிராகரிக்கும் இடம்.

மருத்துவர் – எவர் ஒருவர் மாத்திரையால் உங்களது நோயைக் கொன்று, மருத்துவக் கட்டணத்தால் உங்களைக் கொல்பவரோ அவரே.

புன்னகை – பல சொல்ல முடியாத வார்த்தைகளின் மறைமுக சமிக்ஞை.

கண்ணீர் – ஆண்களின் சக்தியை வெல்லும் பெண்களின் சக்தி.

மேலதிகாரி – நீ தாமதமாக அலுவலகம் வரும் போது, சீக்கிரம் வந்து, நீ சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது காலம் தாழ்த்தி கிளம்புபவர்.

சம்பளம் – இது காற்று போன்றது. வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. உணர மட்டுமே முடியும்.

அலுவல விடுப்பு – வீட்டில் இருந்தே பணியாற்றுவது

விரிவுரை – மாணவர்களுக்கு எந்த வகையில் சொன்னாலும் புரியாமலேயே இருப்பது

சற்று ஓய்வு – கோடைக் காலங்களில் இலையை உதிர்த்துவிட்டு இருக்கும் மரங்கள்.

வழுக்கை – மனிதனால் மாற்ற முடியாத கடவுள் செய்யும் ஹேர் ஸ்டைல்.

ரகசியம் – யாரிடமும் கூற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்.

படிப்பது – புத்தகத்தை திறந்து மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்ப்பது.

பெற்றோர் – உங்களது சிறு வயது சுட்டித் தனங்களை நினைத்துக் கொண்டே வாழ்பவர்கள்.

விவாகரத்து – திருமணத்தின் எதிர்காலம்

ஆங்கில அகராதி – இதில்தான் முதலில் விவகாரத்தும், பிறகு திருமணமும் வரும்.

கொட்டாவி – திருமணமான ஆண்கள் வாயைத் திறக்க உள்ள ஒரே வழி

அனுபவம் – மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் வைக்கும் பெயர்

அணு குண்டு – புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அழிக்க மனிதன் கண்டுபிடித்தது.

வாய்ப்பு – நதியில் தவறி விழுந்தவன் குளித்துக் கொள்வது.

வேட்பாளர் – வாக்குறுதிகளை விற்றுவிட்டு வாக்குகளை வாங்குபவர்.

இன்னும் இதுபோல ஏராளமாக உள்ளன.. இவை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!


கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை 8 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டார்.

வழக்கமான உயரம் வளர்ந்த இந்த செடிகளில் எப்போதும் போல் கத்திரிக்காய் காய்த்தது. பின்னர், இந்த செடிகள் மரம் போல் வளர்ந்தன. தற்போது, இந்த செடிகள் 16 அடிக்குமேல் வளர்ந்து மரமாக காட்சி அளிக்கின்றன. செடியாக இருந்து காய்க்க வேண்டிய கத்திரி செடிகள், மரமாக மாறியிருப்பது முண்டகூடா கிராமத்தில் உள்ள மக்களை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.
பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.

செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.

செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முடி உதிர்தலை தடுத்தல்

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது.

அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

தேநீர்

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

சரும பாதுகாப்பு

அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது.

சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீரை பருகுவது தொடர்பான ஆய்வுகளின் முடிவில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்ப்பட்டிருந்து பல நபர்களின் இரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது.

காயங்களை குணப்படுத்துதல்

திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது.

புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

கொழுப்பை குறைத்தல்

செம்பருத்தி இலை தேநீர் LDL கொழுப்பின் அளவை குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்த மருந்தாக உள்ளது. தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவை குறைக்கின்றன.

இருமல் மற்றும் ஜலதோஷம்

செம்பருத்தி இலைகளில் பெருமளவு குவிந்து கிடக்கும் வைட்டமின் சி-யை தேநீராகவும், சாறாகவும் பிழிந்து குடிக்கும் போது அது சாதாரண ஜலதோஷம் மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

உங்களுடைய ஜலதோஷத்தை வெகு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப செம்பருத்தி உதவுகிறது.

எடையை குறைத்தல் மற்றும் ஜீரணம்

இயற்கையாகவே பசியை குறைக்கும் குணத்தை கொண்டிருக்கும் செம்பருத்தியை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை குறைக்க முடியும்.

செம்பருத்தி இலை தேநீரை குடிப்பதன் மூலம் நீங்கள் மிகவும் குறைவாக உணவு உண்ணவும் மற்றும் உண்ட உணவை வேகமாக ஜீரணம் செய்ய வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் முடியும்.

மாதவிடாயை முறைப்படுத்துதல்

குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் செம்பருத்தி இலை தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் உடலின் ஹார்மோன் அளவு சமச்சீராகவும், மாதவிடாய் சீராகவும் இருக்க உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல்

செம்பருத்தி இலைகளில் ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன.

இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

 
back to top