.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 9, 2013

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்


காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?


nov 9 - tec corp chennai

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.



பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் தொடங்கி வைத்தார்.இனி
http://www.chennaicorporation.gov.in/Tamil/index.htm இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படைப் பதிவு செய்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே, உள்ள பிறப்பு– இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே இடம் பெறும். நேரம் இடம் பெறாது.

விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணி பாடகர் சுரேஷ் வட்கர், சமூக சேவகர் ராஜ்மால் பரக் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

அதே போல, பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் அம்ஜத் அலி, அவரது மகன்கள் அமான், அயான் மற்றும் பாடகர் கௌஷிகி சக்ரபர்தி, தபலா கலைஞர் விஜய் காடே, கலைஞர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்கிற நடராஜ கிருஷ்ணமூர்த்தி, சித்தார் கலைஞர் நிலத்ரி குமாரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

ஒரு சில பிரமுகர்கள் இதுபோல தங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் என 25 பேரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்.

விருதுகள் என்பது கலைஞர்களையும் கலைகளையும் ஊக்கு விக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த காலம் போய், அதிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துவிட்டன.

மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!


 



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.

40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளது.
 
back to top