.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 14, 2013

தனது பயனர்களுக்காக Gmail வழங்கும் மற்றுமொரு புதிய வசதி!



 முதற்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் Gmail ஆனது தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.



அதாவது மின்னஞ்சல்களில் இணைக்கப்படும் கோப்புக்களை கணனியில் தரவிறக்கம் செய்துகொள்ளும் அதேவேளை, நேரடியாகவே கூகுள் ட்ரைவினுள் சேமிக்கும் வசதியையும் தற்போது வழங்குகின்றது.




இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் புகைப்படங்கள், வீடியோக்கள், எக்ஸெல் கோப்புக்கள் மற்றும் PDF கோப்புக்களை இவ்வாறு கூகுள் ட்ரைவினுள் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

தூக்கமின்மை சரியாக!


 
 
*தூக்கமின்மை சரியாக

சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

*மனநலக் கோளாறு விலக

கீழாநெல்லினதும் மஞ்சகாமலைக்கு மருந்தெனத் தோன்றும். ஆனால், மனநலக்கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்கு என்பது ஆச்சர்யம் தானே! கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்கநிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில், காலை நேரத்தில் இதைப் பூசணும்.
 
 
 இரண்டரை மணியில் இருந்து மூணு மணி நேரம் கழித்து, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ச்எய்தால், நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு இல்லனா மூணு தடவை செய்தாலே போதும். இதே மாதிரி ‘நல்லவேளை இலை’யை கல் உரலில் போட்டு மையாக அரைத்து தலையில் பூசி, இரண்டரை மணியில் இருந்து மூணூ மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்து வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.

*நினைவாற்றல் பெருக

திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும். வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். 
 
 
 அமுக்கிராங்கிழங்கு சூரணம் இரண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடடுத்து, 200 மில்லி பசும்பாலில் போட்டுக் காய்த்து, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
 
 
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வைத்துவிட வேண்டும். இதில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து காலை-மாலை என சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூடும். இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டால் சிலநாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று
: கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு
: எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு... மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!


நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!

1. சாலையில் எச்சில் துப்புதல் :


இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3. குப்பைகளை கொட்டுவது :

நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4. வரிசையை முந்தியடித்தல் :


இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5. விட்டுகொடுக்காத பழக்கம் :

அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

8. ஜாதி வெறி- மத வெறி - இன வெறி:


நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்
 
back to top