.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும் செல்போன் வழி பரிமாற்றம் !


சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் நாளை அறிமுகம் செய்கிறது.

 தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வருகிறது. தபால் துறையின் தென் மண்டலத்தில் 95 தபால் நிலையங்களிலும், அதில் மதுரை கோட்டத்தில் 32 தபால் நிலையங்களிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 செல்போன் வழி பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், இச் சேவை வழங்கும் தபால் நிலையத்தில் பணத்துடன் தங்களது செல்போன் எண்ணையும், பணம் அனுப்ப வேண்டியவரின் முழு முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

 பணம் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் விவரம் பணம் அனுப்புவருக்கும், பணம் பெற வேண்டியவருக்கும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். மேற்படி எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட நபர், அருகில் உள்ள தபால் நிலையத்தில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் கூடிய குறுந்தகவலைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம். பணம் பெற வேண்டிய நபர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் அடையாள அட்டையுடன் சென்று தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் வந்துள்ள குறுந்தகவலைக் கொண்டு வருவது அவசியம்.  இப்போது நடைமுறையில் இருக்கும் மணியார்டரில் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணம் கொடுப்பார். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பணத்தைப் பெற முடியும். தபால்காரருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

புதிய சேவையில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பணம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.  மணியார்டர் அனுப்பும்போது ரூ.100-க்கு ரூ.5 கமிஷன் தொகையாகப் பெறப்படுகிறது. செல்போன் வழி பண பரிமாற்றத்தில் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை ரூ.40, ரூ.1501 இல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை ரூ.70, ரூ.5,001 இல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை ரூ.100 மற்றும் சேவை வரி சேர்த்து கமிஷன் தொகையாக பெறப்படும். இது மணியார்டருக்கான கமிஷன் தொகையைக் காட்டிலும் குறைவாகும்.

 அனுப்பிய தொகையை இரு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் 15 ஆவது நாள், அனுப்பப்பட்ட தபால் நிலையத்திற்கே பணம் திரும்பச்சென்றுவிடும். பணம் அனுப்பிய நபர் அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

 தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இச்சேவையை, மதுரையில் அரசரடி, மதுரை, தல்லாகுளம் ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும், சில குறிப்பிட்ட துணை தபால் நிலையங்களிலும் பெறலாம். இச் சேவை வழங்கப்படும் தபால் நிலையங்களின் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ம்ர்க்ஷண்ப்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்றில் ஆனந்துக்கு சவால்


 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுவரை நடந்த சுற்றுக்கள் டிராவில் முடிந்த நிலையில், 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ள ஆனந்துக்கு 5-வது சுற்றில் சவால் காத்திருக்கிறது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்ùஸன் மோதுகின்றனர். இதுவரை நடந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளனர்.

முதல் சுற்றில் ஆனந்த் சுதாரித்தார். இரண்டாவது சுற்றில் கார்ல்ùஸன் எழுச்சி பெற்றார். 3-வது சுற்றில் ஆனந்த், கார்ல்ùஸனுக்கு நெருக்கடி கொடுத்தார். 4-வது சுற்றில் மீண்டும் கார்ல்ùஸன் சுதாரித்துக் கொண்டார்.

வியாழக்கிழமை ஓய்வுக்குப் பின்,5-வது சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் ஆனந்த் கறுப்பு நிறக் காய்களுடனும், கார்ல்ùஸன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளனர். விதிப்படி, 6-வது மற்றும் 7-வது சுற்றுக்களில் ஆனந்த் வெள்ளை நிறக்காய்களுடன் ஆட உள்ளார்.

வெள்ளை நிறுக் காய்களுடன் விளையாடியபோது இருவரும் திறமையாக செயல்பட்டனர். எனவே, 5-வது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடும் ஆனந்துக்கு நெருக்கடி ஏற்படும். 2-வது சுற்றில் காரோ கான் முறையில் அசத்திய கார்ல்ùஸன் அடுத்தடுத்த சுற்றுகளில் பெர்லின், சிசிலியன் மற்றும் ஃபிரெஞ்ச் முறைகளின் மூலம் ஆனந்துக்கு சவால் அளிக்க காத்திருக்கிறார்.

Thursday, November 14, 2013

மனோஜ் குமார் - வாழ்க்கை வரலாறு (Biography)




மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து விளங்கும் மனோஜ் குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 24,  1937

இடம்: அபோதாபாத், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில் உள்ளது)

பணி: நடிகர், இயக்குனர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற இயற்பெயர் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 1937  ஆம் ஆண்டு ஜூலை 24  ஆம் நாள், அப்போதைய இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அபோதாபாத் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


தன்னுடைய பத்து வயதில், புது தில்லிக்கு இடம் பெயர்ந்த அவர், புது தில்லியிலுள்ள “இந்து கல்லூரியில்” (தில்லி பல்கலைக்கழகம்) சேர்ந்து கல்விக் கற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார். பிறகு, திரைப்படத்துறையில் ஏற்பட்ட அதிக ஈடுபாடு காரணமாக தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்கு பிறகு திரைப்படத்துறையில் நுழைய முடிவு செய்தார்.

திரைப்பட வாழ்க்கை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலிப் குமாரால், ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற அவருடைய பெயரை ‘மனோஜ் குமார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “ஃபேஷன்” திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மனோஜ் குமார் அவர்கள், 1960 ஆம் ஆண்டு வெளியான “காஞ்ச் கி குடியா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து “பஞ்சாயத்” (1958), “ஹனிமூன்” (1960),  “பியா மிலன் கி ஆஸ்” மற்றும் “ரேஷ்மி ருமால் (1961)” “ஹரியாலி அவுர் ராஸ்தா (1962), வோ கோன் தி (1964), ஹிமாலய கி கோத் மெய்ன் (1965) போன்ற மறக்கமுடியாத திரைப்படங்களை வழங்கினார்.

நாட்டுப்பற்று மிக்க நாயகனாக

பாரத தேசத்தின் மீது அதிக பற்று கொண்டவராக விளங்கிய அவர், தேசப்பற்று கதாபத்திரங்களில், மிகவும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1965 ஆம் ஆண்டு பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஷாகித்” என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டுப்பற்று மிக்க நாயகனாக அவர் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த இயக்கத்தில் வெளியான “உப்கார்” என்ற திரைப்படம் இவரின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையமைப்பில் மகேந்திர கபூரால் பாடிய “மேரேதேஷ் கி தர்த்தி” என்ற பாடல் பாடல் மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான “தேசிய விருதையும்” மற்றும் சிறந்த இயக்குனருக்கான “ஃபிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது.

1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள்

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல வெற்றி படங்களை தந்த அவருக்கு, 1975 ல் வெளிவந்த “ரோட்டி கப்டா அவுர் மக்கான்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனருக்காண இரண்டாவது “பிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது. பிறகு, அதே ஆண்டில் வெளிவந்த “சன்யாசி” திரைப்படம், ஒரு மத பின்னணியிலான திரைக்கதையை கொண்டு அமைந்தது. ‘கிளார்க்’ (1989) மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ போன்ற திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும், 1998 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.

பிற திரைப்படங்கள்

இதனை தொடர்ந்து, ‘பூரப் ஔர் பஷ்சிம்’ (1970),  ‘யாத்கர்’ (1970),  ‘பெஹ்சான்’ (1970), ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970), ‘பலிதான்’ (1971) , ‘ஷோர்’ (1972), ‘பே-இமான்’ (1972), ‘ரோட்டி கப்டா ஔர் மக்கான்’ (1974), ‘சன்யாசி’ (1975), ‘தஸ் நம்பரி’ (1976), ‘ஷீரடி கே சாய் பாபா’ (1977), ‘அமானத்’ (1977), ‘க்ரான்த்தி’ (1981), ‘கல்யுக் ஔர் இராமாயண்’ (1987), ‘சந்தோஷ்’ (1989), ‘கிளெர்க்’ (1989), ‘மைதான்-ஏ-ஜங்’ (1995)

அரசியல் வாழ்க்கை

மற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் போல இவரும் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு’ நடைபெற்ற பொது தேர்தலில் “பாரதிய ஜனதா கட்சியுடன்” இணைந்து செயல்பட்டார்.

விருதுகளும் மரியாதைகளும்

•1968 ஆம் ஆண்டு “உப்கார்” என்ற திரைப்படத்திற்காக “இந்திய தேசிய விருதும்” நான்கு “ஃபிலிம்பேர் விருதும்” வழங்கப்பட்டது.

•1972 ஆம் ஆண்டு “பே-இமான்”, மற்றும் 1975 ஆம் ஆண்டு “ரோட்டி கபடா ஔர் மக்கான்” போன்ற திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

•1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

•1999 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

•2008 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில அரசால் “தேசிய கிஷோர்குமார் விருது” வழங்கப்பட்டது.

•2009 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே அகாடமியிடம் இருந்து ‘பால்கே ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

•2010 ஆம் ஆண்டு மகராஷ்டிர மாநில அரசால் “தேசிய ராஜ்கபூர் விருது” வழங்கப்பட்டது.

மேலும் 1968ல் பி.எஃப்.ஜெ.ஏ விருதும், 2001ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கலாக்கார் விருதும், 2008ல் ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2012ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அப்சரா விருதும், 2012ல் நாசிக் சர்வதேச திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது என மேலும் பல விருதுகளை பெற்ற மனோஜ் குமார் அவர்கள் இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்.

Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய!


 ஆம் சகோதர்களே இன்று நாம் பார்க்கப் போவது Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்வது எவ்வாறு? என்று.


 அநேகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் தான்.

Microsoft நிறுவனம் தனது  பயனாளர்களுக்கு புதியதை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கு.

அந்த வகையில் நாமும் Windows 8.1பதிப்பை Crack உடன் இலவசமாக Download செய்துகொள்வோம்.

Windows இனை பணம் கொடுத்து வாங்குவது என்றால்  $119 கொடுத்து வாங்க வேண்டும். 


இவ்வளவும் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு எம்மைப்போன்ற சாதரனமானவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான்.


இருந்தாலும் நாம் இம்மென்பொருளை crack உடன் இலவசமாக தரவிறக்குவதால் இதனை இலகுவாக பயன்படுத்தலாம்.


நான் கீழே கொடுத்துள்ள Crack ஐ active செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.


இது கீழேயுள்ள link இல் உங்களுக்கு விருப்பமானதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.






Download: 
 
 கீழேயுள்ள link இல் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
 
 


இதோ கீழே Crack உள்ளது அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
 
 
 
 
 
back to top