.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.


தப்பிக்க வழிகள்!!


இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.


பில்களை நேரடியாக செலுத்துங்கள்


உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.


ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை


எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.


எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்


எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.



வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்


கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.


போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.


புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.

அஞ்சலியை ‘ஹீரோயின்’ ஆக்கியது நான்தான்: சித்தி பாரதிதேவி பேட்டி

 

நடிகை அஞ்சலி தனது சித்தி பாரதிதேவிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், வெற்று காசோலையில் கையெழுத்து வாங்கி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.57 லட்சத்து 30 ஆயிரம் தொகை மற்றும் 50 பவுன் நகை உள்ளிட்ட உடமைகளை எடுத்துக் கொண்டதாகவும், அடுக்கடுக்கான புகார் கூறியுள்ளார்.


எனது அக்காள் பார்வதி தேவி மகள்தான் அஞ்சலி. கணவர் இல்லாமல் சிறு வயதில் அஞ்சலியை வளர்க்க கஷ்டப்பட்டார். இதனால் 2001–ல் என்னுடன் அஞ்சலியை அழைத்து வந்து விட்டேன்.

எனது கணவர் அரிபாபு பில்டர் ஆக இருக்கிறார். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அஞ்சலியை நாங்கள் மகளாக வளர்த்தோம். நடிகையாக்க டான்ஸ் கற்றுக் கொடுத்தேன். மேக்கப்புக்கும் பணம் கொடுத்தேன். எங்கள் தகுதிக்கு மீறி செலவு செய்து அஞ்சலியை கதாநாயகி ஆக்கினேன். நான் இல்லாமல் அஞ்சலி நடிகையாகி இருக்க முடியாது.

2006–ல் தெலுங்கு படமொன்றில் அறிமுகமானார். சரியாக ஓடவில்லை. மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடித்தார். அது ரிலீசே ஆகவில்லை. தமிழில் ‘கற்றது தமிழ்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ‘அங்காடி தெரு’ படம் வந்தது. ‘எங்கேயும் எப்போதும்’ படம் வந்த பிறகு அஞ்சலி பேசப்பட்டார். அதன்பிறகு பெரிய படங்கள் குவிந்தன.

என்மேல் அஞ்சலி இப்போது குற்றச்சாட்டு கூறுகிறார். அஞ்சலியை முறைப்படி நான் தத்து எடுத்து உள்ளேன். எங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்தோம். நாங்கள் குடியிருக்கும் வளசரவாக்கம் வீட்டை எனது கணவர்தான் கட்டினார். அதை அஞ்சலி பெயரில் எழுதி வைத்தோம். ரேசன்கார்டு, பாஸ்போர்ட்டுகளில் அஞ்சலியின் அம்மா, அப்பா பெயரில் எங்கள் பெயர்கள்தான் உள்ளன. அஞ்சலியை மகள் மாதிரிதான் வளர்த்தேன். என்மேல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

இவ்வாறு பாரதிதேவி கூறினார்.

அஞ்சலி உங்களை விட்டு பிரிந்து போக காரணம் என்ன என்று கேட்டபோது சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. இப்போதும் அஞ்சலியை மகளாகத்தான் நினைக்கிறேன். நான் இல்லை என்றால் அஞ்சலி இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன். டைரக்டர் களஞ்சியம் மீது புகார் சொல்லி இருப்பது தேவையற்றது. அஞ்சலியை வைத்து சில படங்களை அவர் எடுத்தார். சில காரணங்களால் அது வரவில்லை. அவரும் அஞ்சலியை நடிகையாக்க உதவினார் என்றார்.

கூகுள் புரொஜெக்ட் லூன் தொடர்பில் மற்றுமொரு தகவல்!




எந்தவொரு தருணத்திலும் தடங்கலற்ற இணைய சேவையை வழங்கும் முகமாக கூகுள் நிறுவனம் புரொஜெக்ட் லூன் எனும் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

பறக்கும் பலூன்கள் மூலம் Wi-Fi தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்குதலே இச்சேவையின் நோக்கமாகும்.

இதேவேளை இச்சேவையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு பலூனும் 100 நாட்களில் பூமியை 3 தடவைகள் சுற்றிவரும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த பலூன்கள் எந்தவொரு காலநிலையையும் தாங்கும் வகையில் பொருத்தமான ஊடகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி ரெக்ஸ் டைனசோரின் மூதாதை விலங்கு கண்டுபிடிப்பு

 

சுமார் 70 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொடூரமான விலங்கான, திரன்னோசோரஸ் ரெக்ஸ் (டி.ரெக்ஸ்) என்ற டைனசோரின் முன்பு வந்த , அதன் உறவு என்று கருதப்படும் மற்றொரு விலங்கை , அமெரிக்காவின் யுட்டா மாகாண விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யுட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் , டைனசோர் ஆராய்ச்சியாளர்கள் , இந்த ஜந்து, பரிணாம வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால், டி-ரெக்ஸின் மாமா-கொள்ளுத்தாத்தாவாக இருக்கவேண்டும் என்றும் அது , பிரபலமாக அறியப்படும் டி.ரெக்ஸ் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 10 அல்லது 12 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது என்று கூறுகிறார்கள்.

லித்ரொனக்ஸ் ஆர்கெஸ்டெஸ் அல்லது கோர் அரசன் என்று அறியப்படும் இந்த விலங்கு, இரண்டு கால்களில் நின்று, பெரும் வாட்களைப் போன்ற பற்களைக் கொண்டிருந்தது என்றும், வேட்டைக்காக நேரடியாக முன்னோக்குப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் ஏழரை மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்கு அது வாழ்ந்த சூழலில், மிகவும் சக்தி வாய்ந்த ,வேட்டை மிருகமாக இருந்திருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சிக்குழு கூறுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால சுற்றுச்சூழல்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


 
back to top