.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

குளிர்காலம் வரப்போகிறது. இக்காலத்தில் தோட்டத்தில் குளிர்காலத்தில் வளரக்கூடிய பல்வேறு செடிகளை விதைத்தால், தோட்டம் அழகாக பச்சை பசேலென்று இருப்பதோடு, சமைப்பதற்கு காய்கறிகளையும் தோட்டத்திலேயே பெறலாம். இதனால் காய்கறிகளுக்காக செய்யும் பணச்செலவு குறைவதோடு, நம் கண்முன்பே ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளைப் பெறலாம்.

அதுமட்டுமல்லாமல் இக்காலத்தில் வளரக்கூடிய காய்கறிகளுக்கு அதிகமான கவனிப்பு வேண்டும் என்பதில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை குளிர்காலத்தில் வளரக்கூடிய சில காய்கறிகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து, பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

தக்காளி
அன்றாட சமையலில் சேர்க்கப்படும் தக்காளியின் விலை தற்போது அதிகமாக இருப்பதால், அத்தகைய தக்காளியை வீட்டிலேயே இக்காலத்தில் பயிரிட்டால், தக்காளியானது நன்கு வளரும். ஏனெனில் நவம்பர் மாதம் தக்காளி சீசன். ஆகவே இந்த தக்காளியை பயிரிட்டு, தக்காளியைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுங்கள்.

பசலைக்கீரை
இந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக்கீரை குளிர்காலத்தில் நன்கு வளரக்கூடியது. ஆகவே இந்த கீரையின் விதையை வாங்கி பயிரிட்டுங்கள். இதற்கு அளவான பராமரிப்பு இருந்தால், இது நன்கு வளரும்.

வின்டர் ஸ்குவாஷ்

வின்டர் ஸ்குவாஷ் கூட குளிர்கால காய்கறி தான். இத்தகைய காய்கறியை தோட்டத்தில் விதைத்தால், இது விரைவில் வளரும்.
 
முட்டைக்கோஸ்

சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படும் முட்டைக்கோஸின் சீசன் நவம்பர் மாதம் தான். எனவே இந்த காய்கறியை தோட்டத்தில் வளர்த்து, சமையலில் அதிகம் சேர்த்து, அதன் பல்வேறு நன்மையைப் பெறுங்கள்.

அஸ்பாரகஸ்


அஸ்பாரகஸை அதிகம் சாப்பிட்டால், காதலுணர்ச்சியானது அதிகரிக்கும். எனவே நவம்பர் மாதத்தில் இதனை தோட்டத்தில் பயிரிட்டு, காதலுணர்வை அதிகரித்து, துணையுடன் காதலை பரிமாறிக் கொள்ளுங்கள். அதற்கு அந்த செடியின் ஒரு சிறு பகுதியை வைத்து வளர்க்க வேண்டும்.

வெங்காயத்தாள்


சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கூட குளிர்காலத்தில் வளரக்கூடிய காய்கறியாகும். இந்த காய்கறியை விதைத்தப் பின், வெங்காயமானது வருவதற்கு முன் பறிக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

பட்டாணி


என்ன இந்த மாதம் பட்டாணியின் விலை குறைவாக உள்ளதா? அதற்கு காரணம் நவம்பர் மாதம் தான் பட்டாணியின் சீசன். எனவே இந்த பட்டாணியின் விதையை ஒரு ஈரமான துணியில் கட்டி, முளைக்க ஆரம்பிக்கும் போது, அதனை விதைக்க வேண்டும்.

லெட்யூஸ்


லெட்யூஸ் கூட குளிர்கால காய்கறியாகும். எனவே இதனை இப்போது தோட்டத்தில் வைத்தால் நன்கு வளரும். 

ஸ்மார்ட் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்!

 http _www.mobileswall.com_ 

டெஸ்க்டாப்பில் கூட பழைய வால்பேப்பரை புதிப்பிக்காமல் அப்படியே வைத்திருக்கலாம் தப்பில்லை! ஆனால் கையிலேயே வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் ஒரே வால் பேப்பரை வைத்திருந்தால் போரடித்து விடாது. அது தான் ஸ்மார்ட் போனில் விரும்பிய போதெல்லாம் வால் பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறது மொபைல்ஸ் வால் இணையதளம்.

ஏதோ புகைப்பட கண்காட்சியை பார்ப்பது போல இந்த தளம் அழகான புகைப்படங்களாக காட்சி அளிக்கிறது. எல்லாமே செல் போனில் வால் பேப்பராக டவுண் லோடு செய்வதற்கானவை. வரிசையாக ப‌டங்களை பார்த்து விட்டு தேவையான படத்தை கிளிக் செய்து ஸ்மார்ட் போன் திரைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஆப்பிலா, ஆன்ட்ராய்டா, வின்டோசா இவற்றில் எந்த மாதிரி என நம்மிடல் உள்ள போனுக்கு ஏற்ற வடிவில் தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். 640-Smiley-Face-lஅவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய் வசதியாக படங்களை இயற்கை காட்சிகள், இசை, சினிமா, விலங்குகள் என பலவிதமான தலைப்புகளின் கீழ் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

எல்லா படங்களுமே ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. இந்த ரசனையை கருத்தாக தெரிவிக்கலாம். அப்படியே டிவிட்டர் ,பேஸ்புக் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.

இணையய‌தள முகவரி:  http://www.mobileswall.com/

முதல் நாள் அனுபவம் : வில்லா (பீட்சா - II)

                   

அப்பா (நாசர்) இறந்தவுடன், அவருக்கு பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு வில்லாவைப் பற்றி தெரிய வருகிறது. உடனே மகன் (அசோக் செல்வன்) அந்த வில்லாவிற்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.


1 மணி நேரம் 42 நிமிடங்கள் தான் படம் என்பதால், சொல்ல வந்த கதையை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குநர் தீபன். லியோ ஜான்பால் எடிட்டிங்கும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படம் பார்ப்பவர்களை, படத்தோடு ஒன்ற வைக்கிறது.

டைப் ரைட்டரில் சாதாரணமாக டைப் செய்து கொண்டிருக்கும் காட்சிக்கு கூட, தீபக்குமார்பதியின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

வரைந்த ஓவியத்தில் இருப்பது எல்லாம் நிஜமாக நடைபெறுவது போல ஒரு குறும்படம் வெளியானது. அதனை வைத்து தான் இப்படத்திற்கு இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கிறார் போலும்.

பீட்சா படத்தைப் போல இப்படத்தில் சுவாரசிய காட்சிகள் இல்லாதது பெரிய குறை. பீட்சா படத்தின் தீம் மியூசிக்கை உபயோகித்தவர்கள், அப்படத்தினைப் போலவே சில சுவாரசியமான காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்கலாம். படம் முடிந்தவுடன், க்ளைமாக்ஸ் காட்சியை பற்றி நீண்ட நேரம் யோசித்த பிறகே புரிகிறது.

பீட்சா படத்தினைப் பார்த்தவுடன் இருந்த ஒரு இனம் புரியாத உணர்வு, ஏனோ இரண்டாம் பாகமான வில்லாவில் இல்லை. மற்றபடி இந்த வில்லாவிற்கு போய் வரலாம்.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இரண்டு டயனோசர்களின் படிமங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன!



அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும், மிகவும் அரிதான, சண்டையிட்டதில் உயிரிழந்ததாக கருதப்படும் இரண்டு டயனோசர்களின் படிமங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.


தென் அமெரிக்காவில் 680 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை டயனோசர்களின் உடல் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. மிகவும் அரிதான, சண்டையிட்ட நிலையில், உயிரிழந்ததாக கருதப்படும் இந்த டயனோசர்களின் படிமங்கள் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவை ஏலம் விடப்படுகின்றன.


இவற்றில் 26 அடி நீளம் கொண்ட டயனோசர் மட்டுமின்றி, 36 அடி நீளம் கொண்ட மற்றொரு டயனோசரும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பலகோடி அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
back to top