.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

மாணவர்களுக்கு நிதி அறிவு தேர்வு!

எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிதி தொடர்பான அறிவை சோதிக்கும் வகையில் தேசிய அளவிலான தேர்வு நடக்க உள்ளது. தேசிய நிதிக் கல்வி மையம் நடத்தும் இந்த தேர்வுகள் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது.

75 கேள்விகள் கொண்ட இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இத் தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவரவர் பயிலும் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.


பங்கேற்க விரும்புபவர்கள்  www.nism.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


பதிவு செய்ய நவம்பர் 29-ம் கடைசி நாள். ஜனவரி 23ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் 5-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினார் மேக்னஸ் கார்ல்சன்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-ம் சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.



ஐந்தரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்த போட்டியில் 58வது நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி அடைந்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 26ம் தேதி வரை 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"

 

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!! கவனமா கேளுங்க

உலக நாடுகளே ஒழிக்க நினைக்கும் ஒரு பொருள்..!

வருடாவருடம் நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்படும் ஒரு பொருள்..!! 


பள்ளிப் பருவத்திலேயே பலரின் விருப்பமான ஒரு பொருள்..!!! 

ஆயிசு முடிந்து இறப்பவர்களைவிடவும்,இதன் ஆவிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகமாம்..? 

இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அனிகிறோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அனிகிறோம்,எதற்கு...


 நம் உயிரைப் பாதுகாக்கத் தானே...!

பகைவனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏன் இந்த பாதுகாப்பு..?

என்னமோ நடக்குது... மர்மமா

இருக்குதே .


இவ்வாறு உயிரைக்குடிக்கும் ஒன்றை  சித்தரித்தால்..


சிகரட்கவி


கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!. ".

பீலி சிவம் - கவுண்டமணி!



பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:

 "நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை.

கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான்.

 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை.

நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்
 
back to top