.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 3, 2013

பொருட்களை டெலிவரி செய்ய அமேசான் தளத்தின் புதிய தொழில்நுட்பம்!

 


ஒன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவரும்


பிரபலமான  நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஆனது தற்போது புதிய



யுக்தி ஒன்றினை கையாள  முற்பட்டுள்ளது.


இதன்படி கொள்வனவு செய்யப்படும் பொருட்களை குறித்த
 

வாடிக்கையாளருக்கு டெலிவரி  செய்வதற்காக ஒக்டோ கொப்பர் (Octocopter)


எனும் சாதனத்தினை பயன்படுத்தவுள்ளது.



இச்சாதனமானது 8 விசிறிகளைக் கொண்டுள்ளதுடன்


 60 நிமிடங்களிற்கு தொடர்ச்சியாக பறக்கக்கூடியது.


இதனால் இந்த பறப்பு எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே அமேசான்


தனது புதிய  சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Note 4

 


முதற்தர மொபைல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சம்சுங்


 ஆனது Samsung Galaxy Note 4 சாதனத்தினை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.


20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்படுகின்றது.


இதேவேளை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 3


ஆனது 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும்,


எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள Samsung Galaxy S5


ஆனது 16 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ளன.

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

 

'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம்.


கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது.


ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.


'பிரியாணி' படத்தினைப் போலவே இப்படமும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை தானாம். லிங்குசாமி படத்தினை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

கேழ்வரகு தோசை - சமையல்!

 

 தேவையானவை:


 கேழ்வரகு மாவு - 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


 வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

 
back to top