.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 10, 2013

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...




 நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.


வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.


வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.


வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.


தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"




 மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.


மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.


மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.


ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.


மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..


ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!




உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்


10). மெக்ஸிக்கோ:


பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும்.

9). ஸ்பெயின்

 இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 1.223.988.000.000 மற்றும் GNI அளவு சதவீதம் 2% ஆகும்.

8). கனடா:


கனடாவின் GNI தொகை $ 628.000.000.000 உள்ளது மற்றும் GNI தொகை $ 1.251.463.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் 2.3% ஆகும்.

7). இத்தாலி:

இந்த நாட்டின் $ 1.120.000.000.000 GNI அளவு மற்றும் 3.7% என்ற GNI தொகை சதவீத $ 1.844.749.000.000 கொண்டிருக்கிறது.

6). சீனா:

GNI தொகை $ 1.130.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI அளவு விகிதம் சதவீதம் 3.8% ஆக $ 2.668.071.000.000 உள்ளது.

5). பிரான்ஸ்:

பிரான்ஸ் GNI தொகை $ 1.380.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4.6% ஆக GNI தொகை சதவீத $ 2.230.721.000.000 உள்ளது.

4). ஐக்கிய ராஜ்யம்


 நான்காவது பணக்கார நாடு $ 1.480.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 2.345.015.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பிரிட்டன் உள்ளது மற்றும் GNI தொகை சதவீதம் 4.9% ஆகும்.

3). ஜெர்மனி:


GNI தொகை வீதம் $ 1.940.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு விகிதம் ஜெர்மனி $ 2.906.681.000.000 மற்றும் GNI சதவீதத்தில் 6.5% ஆகும்.

2). ஜப்பான்:

இந்த $ 4.520.000.000.000 என்ற GNI தொகை மற்றும் $ 4.340.133.000.000 அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு இரண்டாவது பணக்கார நாடு உள்ளது மற்றும் GNI சதவீதம் 15.1% ஆகும்

1). ஐக்கிய அமெரிக்கா


GNI தொகை $ 9.780.000.000.000 மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு $ 13.201.820.000.000 மற்றும் GNI தொகை சதவீதம் கூட மற்ற நாடுகளில், அதாவது, 32,7% ஆகும் அனைத்து பிற நாடுகளில் பணக்கார நாடாக உள்ளது.

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது ஆண்மையே அதிகரிக்கும் பொருள்கள் !!




வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

உணவே மருந்து


 பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.

விவரம் அறிந்தவர்களைக் கேட்டால் அவற் றில் உள்ள பல விஷயங்கள் புரியவரும். அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப் போம்.

பெருங்காயம்

 ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.

ஏலக்காய்


 ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.

ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.

மிளகு

 மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம்

 லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.

பூண்டு


 பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி

 இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் – மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.

சாதிக்காய்


 சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.

ஓமம்

 உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.

வெங்காயம் , முருங்கை , பாதாம்

 இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.

 
back to top