.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 10, 2013

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது!




வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். 2013ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது.


போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வரும் 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!


-
“நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்
 சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”
-
அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு
 கேலி பண்ணுவாங்கடா…!!
-



-
“தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா
“யாரு   இவர்?”
-
டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!
-


-
நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம
 விட்டு வெச்சிருக்கே?”
-
“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”
-


-
“நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு
 பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி
 கேட்டாங்க?”
-
“ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!





” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா
 போச்சா…ஏண்டி?
-
” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்
 செஞ்சு தொலைச்சிட்டேன்…!!

முஸ்லிம் இளவரசியாக அனுஷ்கா!





அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' படங்களில் நடித்து வருகிறார்.


இந்தப் படங்களுக்காக பழங்கால சண்டைப் பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திரக் கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


அப்படி சில கதைகளை கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா, ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும 'பாகுபாலி'யை முடித்ததும், 16ம் நூற்றாண்டு கதை ஒன்றில் நடிக்கிறார்.


கோல்கொண்டா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த முகமது ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லிம் மன்னனின் மனைவியைப்பற்றிய கதையில் அப்படம் உருவாகிறது.


'பாஹ்மதி' என்று பெயர் வைத்திருக்கும் அப்படத்துக்காக முஸ்லிம் இளவரசியாக மாறுகிறார் அனுஷ்கா.

அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!




அஜித்தின் 'வீரம்' படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின்  தயாரிப்பாளர்கள்.


எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது? இதுதான் அவர்கள் கேட்கிற கேள்வி.


படத்தை வெளியிடுவதும், எத்தனை தியேட்டர்களில் வெளியிடுகிறோம் என்பதும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இதில் நமக்கென்ன பிரச்சனை என்று அமைதிகாக்க ஆரம்பித்துவிட்டார் அஜித்.


'வீரம்' படத்திற்கு 1800 தியேட்டர்கள் என்றால் ஜில்லாவுக்கு? விஜய்க்கு நெருக்கமானவர்கள்.இப்படியொரு கேள்வியை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .


ஒரு நாளுக்கு மட்டும்தான் இந்த 1800. ஒரு நாள் தள்ளி வெளியிடப்படும் 'ஜில்லா'வுக்கு அதில் பாதியை ஒதுக்கித் தந்துவிடுவார்களாம். கேட்டால் இதுவும் பெரிய பட்ஜெட் படமாச்சே என்கிறார்கள்.

 
back to top