.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 11, 2013

செவ்வாயில் நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிந்த க்யூரியாசிட்டி!




 செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய அளவிலான நன்னீர் ஏரி இருந்ததற்கான ஆதாரத்தை நாசா (NASA)-வின் க்யூரியாசிட்டி (CURIOSITY) உலவு வாகனம் கண்டறிந்துள்ளது.



இந்த ஏரி சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் நிறைந்ததாக இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி (CURIOSITY) தரையிறங்கிய இடத்தில் உள்ள இந்த ஏரி சுமார் 150 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஏரி வற்றிப் போயிருக்கக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



உயிர் வாழ்க்கைக்குத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற பல தனிமங்கள் இந்த ஏரியில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் உள்ள ஏரிகளைப் போன்றே இந்த ஏரியிலும் பல்வேறு அம்சங்கள் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏரியில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மைல்கல் கலரிலும் விஷயமிருக்கு, தெரிந்து கொள்வோம்..



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல...



இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.



மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.



 இதோ தெரிஞ்சுக்கோங்க...


 * மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை


* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை


* நீலம் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை


* பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

கோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி!



புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது:


பக்தி படம் என்பது இப்போது அரிதாகிவிட்டது. மேற்கு முகப்பேர் கனக துர்கை அம்மன் கோயிலில் நடந்த 2 உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜாதகப்படி ஒரு பக்தர் விபத்தில் இறக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்தி செய்வதாக வேண்டிக் கொண்டார்.


அவர் விபத்தில் சிக்கியபோது கை எலும்பு மட்டும் முறிந்து உயிர் பிழைத்தார். மற்றொரு சம்பவத்தில் பெண்ணின் காதலனை பேய் ஒன்று அழிக்க முயல்கிறது. அதிலிருந்து காதலன் தப்புகிறானா என்பது கிளைமாக்ஸ். இப்படத்துக்காக திவ்யா, ஜான்விகா தீச்சட்டி ஏந்தி ஆடிய பாம்பு நடனம் அம்மன் கோயிலில் படமாக்கப்பட்டது. வழக்கமாக கோயிலில் ஷூட்டிங் நடத்த உடனடியாக அனுமதி கிடைப்பது அரிது.


எங்களுக்கு அனுமதி கிடைத்தது இன்ப அதிர்ச¢சியாக அமைந்தது. இதன் ஆடியோ விழாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அம்மன் பிரசாதம் வழங்குவதற்காக ஆயிரம் தேங்காய் வாங்கப்பட்டதுடன். குங்குமம், பழம், வெற்றிலை பாக்குடன் பிரசாதம் தரப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி!


புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது


குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது


நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது


நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது


இயற்கையை ரசிப்பது


மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது


ஓர் ஆரோக்யமான குழந்தை


ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது


சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது


உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது


இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே

 
back to top