.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 14, 2013

முன்கூட்டியே வெளியாகும் ரம்மி!!




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரம்மி.


இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இனிகோ, சூரி ஆகியோரும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யாவும், இனிகோ ஜோடியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.


படத்தில் இனிகோவுக்கு விஜயசேதுபதியை விட முக்கியமான வேடம் என்கிறார்கள். சமீபத்தில் ரம்மி படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த விஜய் சேதுபதி மிகவும் திருப்தியடைந்தாராம். என்னுடன் நடித்துள்ள இனிகோ, சூரி ஆகிய இருவருமே நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.


அதனால், எங்கள் மூவர் கூட்டணிக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மேலும் படம் கிறிஸ்துமஸுக்கு முன்பாகவே அதாவது வரும் 2௦-ஆம் தேதி வெளியாகிறது என்கிறார்கள். படத்தை JSK பிலிம்ஸ் சார்பில் சதிஷ்குமார் வெளியிடுகிறார்.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???



1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன்
 குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

உண்மையான ஆணழகன்..


கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது. உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம். அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன்..

ஜி மெயில் தரும் வசதிகள்...!




நாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.


நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும். எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது. இதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www.gmail-backup.com/download  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம்.


இன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.


அனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம். பேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம். மேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmail-backup.com/என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

மனம் மாறிய ஹீரோ!



சொந்த படம் தயாரிக்க பயந்த ஹீரோ, சினிமா அனுபவம் இல்லாதவர் படம் தயாரிப்பதை பார்த்து மனம் மாறினார். ராமன் அப்துல்லா, சூரி, வாணி மஹால், ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். தற்போது புவனக்காடு படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் ரீ என்ட்ரிக்காக காத்திருந்தேன். அப்போது வி.எம்.மோகன் என்பவர் என்னை சந்தித்து புவனக்காடு படத்தில் நடிக்க கேட்டார். கதை கேட்டேன் பிடித்திருந்தது. யாரிடம் உதவி இயக்குனராக இருந்தீர்கள் என்றேன். யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை, சினிமாவுக்கு நான் புதியவன் என்றார்.


முன்னதாக சொந்த படம் தயாரிக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது பயமாக இருந்தது. சினிமாவில் சம்பாதித்ததை அதிலேயே விட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பிறகு, சினிமா பற்றியே தெரியாதவர் சினிமா தயாரிக்க முன்வந்திருக்கிறாரே என்று எண்ணியபோது நானும் மாறினேன். பூனை புலியாகிறது என்ற சொந்த படத்தை தயாரித்து முடித்துவிட்டேன்.


சினிமா அனுபவமே இல்லாமல் படம் தயாரித்து இயக்கிய மோகனுக்கு தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. புவனக்காடு படத்தை பொறுத்தவரை அடர்ந்த காடுகளில் படமானது. திவ்யா நாகேஷ் ஹீரோயின். சரத்பிரியதேவ் இசை அமைக்க ரவிஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு விக்னேஷ் கூறினார்.

 
back to top