.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, December 18, 2013

இசைக்கு மருந்தென்றே பெயர்!




‘நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு விருப்பமான ஒலிநாடாவை வைத்துக் கேட்கிறீர்கள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு முளைத்து, மனம் ‘ரிலாக்ஸ்’ ஆகிறது. இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள் பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம், நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குணநலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏன்? பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத் அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள் உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன. வடஇந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார், இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மனநிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும் மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால் ஒன்று, நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை மனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் படேல்.

உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம் போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற குணம் உண்டு. பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்குக் குழம்பும் மனத்தை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.

இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ, மாலை அல்லது இரவிலோ செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கெடுவுக்குள் இதைப் பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது. காலியான வயிற்றுடன் இருக்கக் கூடாது. இதற்குக் கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப் படுத்திவிட வேண்டும்" என்கிறார்.

அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகியவற்றுக்கெல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு. சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை நன்றாக எதிர்கொள்கிறார்கள். ‘ஆட்டிஸம்’ - கற்கிற குறைபாடு போன்ற சிலவற்றுக்கு இது பயனானது." என்கிறார் டாக்டர்.

‘மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள் செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன. ‘அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு ஆதரவு அளிக்கின்றன.

சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா இசை - நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு, பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன என்பதை விளக்குகிறார்.

நாட்டை - ஆஸ்துமா குணமாகிறது. வாசஸ்பதி - நாசி பிரச்சினை தீரும். ஹம்சவர்த்தினி - தலைச்சுற்றல் நீங்கும். நாத நாமக்கிரியா - வயிற்றுவலி தீரும். பேகடா - ரத்த அழுத்தம் சரியாகும். ஆனந்த பைரவி, சிந்து பைரவி - உயர் ரத்த அழுத்தம் சீராகும். மத்திய மாவதி - ஒற்றைத் தலைவலி நீங்கும்.

ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு; வயிற்றுவலி சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான நாத நாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உதவியிருக்கின்றன," என்கிறார்.

இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது. பல தனிமனித அனுபவங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை இறைவனின் மகா வஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.

 (‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலில் இருந்து)

புதுக்குறள்.....?




                                            ******புதுக்குறள் *******


1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
 செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
 சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
 துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
 வாயினால் சுட்ட வடை

8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
 அரியவாம் கடலைபோ டுதல்

9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
 ஆறாதே லேடியால் கெட்ட மனம்

10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
 தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

இந்திய தொழில்நுட்பம்!




இந்தியா சைனாவைப் போல் ஒரு பெருமைமிகு செயலில் இறங்கியுள்ளது அதுதான் சூப்பர் கம்யூட்டர் ஆராய்ச்சி. இந்த தொழில்நுட்பமானது சூப்பர் கம்யூட்டர்  PARAM yuva-II, ஆகும்.



இது ஒரு புதிய 500-teraflop/s veesion ஆகும். இந்த PARAM yuva-வின் computing பவரானது 54 teraflop/s to 254 teraflop/s ஆகும்.


இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உலக நாடுகளின் மத்தியில்  இந்தியாவின் மதிப்பு உயரும்.


அமெரிக்கா முதன் முதலில் GPS ஐ(Global Positioning System) இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடித்தது. அதனை தொடர்ந்து சைன, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடித்தன.





தற்பொழுது வளர்ந்து வரும் நாடுகள் தரவரிசையில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் இந்தியா 2014- ஆம் ஆண்டு Satellite Based Navigation System 'GAGAN' என்ற GPS தொழில்நுட்ப்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் புகழ் உலக அராங்கில் பதிவுசெய்யப்படும்.
 
back to top