.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜயசேதுபதி..?



2013 இல் சூதுகவ்வும், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் விஜயசேதுபதியின் சந்தைமதிப்பும் சம்பளமும் பெருமளவில் உயர்ந்துவிட்டது. சூதுகவ்வும் படத்துக்கு அவர் அவர் வாங்கிய சம்பளம் ஐம்பதுஇலட்சத்துக்கும் குறைவு என்கிறார்கள். இப்போது சூதுகவ்வும் படஇயக்குநர் நலன்குமாரசாமியையும் விஜயசேதுபதியையும் சேர்த்து ஒரு படத்தை எடுக்கவிரும்பினாராம் சூதுகவ்வும் படத்தின் தயாரிப்பாளர் குமார். இயக்குநர் எழுதியிருந்த ஒரு கதை, விஜயசேதுபதிக்கும் பிடித்துப்போய்விட்டது. சரி, வரிசையாக இருக்கும் படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முடிவும் செய்துவிட்டார்கள்.

 இந்நிலையில் சம்பளம் பற்றிப் பேச்சு வந்திருக்கிறது. தயாரிப்பாளர் குமார் அந்தப்படத்துக்கு ஐம்பதுஇலட்சத்துக்கும் குறைவாகத்தான் சம்பளம் கொடுத்தோம் இந்தப்படத்துக்கு ஒருகோடி சம்பளம் என்று பெருமையாகச் சொல்லநினைத்தாராம். ஆனால் விஜயசேதுபதியின் இப்போதைய சம்பளம் சுமார் ஐந்துகோடி. இந்தவிசயம் தெரியாமல் அவர் வழக்கம்போல சம்பளம் பேசியிருக்கிறார். விஜயசேதுபதிக்கு அதிர்ச்சி, இவர் இப்போதைய நிலவரம் பற்றித் தெரிந்து பேசுகிறாரா தெரியாமல்பேசுகிறாரா என்று குழம்பிவிட்டாராம். அதன்பின் நண்பர்கள் மூலம் இப்போது என்னுடைய சம்பளம் ஐந்துகோடி இவருக்காக ஒரு கோடி குறைத்து நான்கு கோடி வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

 அதற்கு தயாரிப்பாளர் குமார் தயாராக இல்லையாம். நான் எடுக்கும் படங்களின் மொத்த பட்ஜெட்டே நான்குகோடி வராது, அப்படி இருக்கும்போது இவருக்கு மட்டும் எப்படி நான்கு கோடி கொடுப்பது? என்று கேட்டு மறுத்துவிட்டாராம். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, என்னிடம் இந்த பட்ஜெட்டில் ஒரு படம் இருக்கிறது வேறு யாராவது தயாரிக்க முன்வந்தால் விட்டுக்கொடுக்கிறேன் என்று ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறாராம். இந்த விசயம் தெரிந்து கடுப்பானாலும் அவரிடம் நேரடியாகச் சண்டை போடமுடியாமல் தாமசங்கடத்தில் விஜயசேதுபதி இருப்பதாகச் சொல்கிறார்கள்.   -

சூரியின் பெயரில் போலி முகவரி..?



நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.

பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்
பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் அதிக பாலோவர்களைப் பெறலாம் என்ற ஆசையே இந்த போலி அக்கவுண்ட் தொடங்குபவர்களின் நோக்கமா இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சூரியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள @im_actor_soori என்ற டிவிட்டர் ஐடியும் போலி என்று சமீபமாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து சூரி விளக்கமளித்தால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!





வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!



1.வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களது உறவுப் பாலத்தை எப்படி காப்பாற்றி வைக்கலாம் ?நாம் நமது பிறப்பிடத்தை விட்டு வெளிநாடு சென்று வாழ்ந்தாலும் நமது வாழ்க்கை என்னவோ நமது சொந்த ஊரில் உறவுகளை தொடர்ச்சியாக வைத்திருப்பதில் தான் சந்தோசம் இருக்கின்றது.
                                                                        
                    
2.பொதுவாக நாம் பிறந்த ஊரில் நாம் ஒரு சில வருடங்கள் இல்லையென்றால் அந்த சமூகம் நம்மை மறக்க ஆரம்பித்துவிடும் .நம்மால் ஏதாவது நண்மை ஏற்படும் என்றால் நம்மை தொடரும் ,இல்லையென்றால் நாம் அந்த ஊரில் இருந்திருந்ததையே மறந்து விடும்.ஒரு சொற்ப எண்ணிக்கையில் தான் நமது தொடர்பு இருக்கும்,ஒரு சில உறவுகள் ஒரு சில நண்பர்கள் என்று அந்த வட்டம் குறுகி விடும்.
                             
    
 3. இவர்களையெல்லாம் நாம் முழுவதுமாக ஒதுக்கி விட்டு வாழ முடியாது ,பிறப்பு,இறப்பு,திருமணம் போன்ற தருணங்களில் உறவுகளும் ,நண்பர்களும் இல்லாவிட்டால் நமது வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும்.
                    
                         
4. முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கியமான உறவுகள் ,நண்பர்கள் எவரையும் கால ஓட்டத்தில் நாம் இழந்து விடாது,அவர்களது வாழ்க்கை நிலையை நாம் தொடர்ச்சியாக அறிந்து கொள்ள வேண்டும் முடிந்த அளவிற்கு தொலை பேசி மூலமாக அவர்களது வாழ்க்கை நிலைகளை ,நல்லது ,கெட்டதுகளை தெரிந்து கொண்டே வரவேண்டும் .


5.அவர்களது வாழ்க்கையில் ,கல்வியில்,தொழிலிள் ,வேறு ஏதேனும் ஒன்றில் அவர்களுக்கு நம்மால் முடிந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்,உதவிகள் செய்யலாம்.இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நபர்கள் தான் நமது வாழ்க்கை என்பதை உணர வேண்டும் .நாம் எங்கு சென்று எவ்வளவு சம்பாதித்து பேரும் புகழும் அடைந்தாலும் சொந்த ஊரில் தான்  நமது வாழ்க்கை நீண்டகாலம் பேசப்படும் .மற்றைய ஊர்களில் நாம் பெறும் பேரும் செல்வமும் நீண்ட காலங்கள் பேசப்படாது.


6. ஆகவே இன்று முதல் முதலில் நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட முக்கிய உறவுகளும்,நண்பர்களும் மறந்து விடாமல் இருக்க அவர்களது தொடர்பை பாதுகாத்திடுவோம்.வெளிநாட்டிலும் சொந்த ஊரிலும் புகழடைவோம்.

மரணத்தின் மறுபக்கம்...!




எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.

  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத கடமைகள் இருப்பின், மரணத்தின் பின்பும் நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம் அல்லது மீண்டும் பிறப்பெடுப்போம்.  எமது பிறப்புகளில் நாம் செய்யும் நன்மை, தீமைகள் எமது கடைசிப் பிறப்புவரை தொடரும்.   நாம் பிரபஞ்சத்தின் Cycleஐ முடிக்கும்வரை எமது பிறப்புகளும் தொடரும்.

இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலும் இயக்கப்படுகிறது.  பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதங்களும் எமது உடலுக்குள்ளும் உள்ளது.  இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறதோ அதைப்போலவே எமது உடலும் ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறது.  இவ் ஐம்பூதங்களை எம்மாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

 இவ் ஐம்பூதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான் சித்தர்களும் முனிவர்களும்.  சித்தர்கள், முனிவர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள்.  ஆனால், அதனை ஏற்க மறுத்த, விளங்கிக் கொள்ள முடியாத மேற்கத்தேயர்கள் இவர்களின் சித்தாந்தங்களை வேண்டுமென்றே மறைத்தனர், மறுத்தனர்.  எமது சித்தாத்தங்களில் சொல்லாத விடயமே இல்லை என்று சொல்லலாம்.

நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம்.  ஆகவே, இறப்பு என்பதும் அதன் பின்னான நிகழ்வுகளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே.  எமது வாழ்விற்கு எவ்வாறு நிகழ்வு நிலைகள் இருக்கின்றனவோ அதேபோல்தான் மரணத்திற்கும் அதற்குப் பின்னரும் உண்டு.

  சுனாமியின்போதும், இயற்கையாக நடைபெறும் அனர்த்தங்களின்போதும் விலங்குகள் தப்பி விடுகின்றன.  மனிதன்தான் அதிகம் இழப்புகளைச் சந்திக்கின்றான்.  இதற்குக் காரணம் நாம் உள்ளுணர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.  இவ்வாற்றல்கள் எமக்கு இருப்பதாகவே நாம் நினைப்பதில்லை.  (We don’t sense them). முயற்சி செய்தால் இச்சக்திகளை நாம் மீண்டும் பெறலாம்.
 
back to top