.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி



என்னென்ன தேவை?

பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 6,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - 1,

கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி,

இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.



எப்படிச் செய்வது?


பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.


பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஓட்ஸ் பருப்புக் கலவையை இதில் சேர்க்கவும்.


சூப்பர் ஓட்ஸ் கஞ்சி ரெடி!   ஃபிட்டான உடலுக்குப் பொலிவூட்டும் சருமத்துக்கு ஏற்றது. இது ஒரு சத்தான உணவு... சரிவிகித உணவு.

முதுமையின் வலிகள்...



முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படறாங்க. அவங்களோட வலிகள், மத்தவங்களோடவலிகள் லேர்ந்து முற்றிலும்  மாறுபட்டது. அதுக்கான அணுகுமுறை, சிகிச்சைனு எல்லாமே வேறு என்கிற வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் வயோகத்தால வரக்கூடிய வலி  திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம்,  வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான  காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.

இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி,  மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி  மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி,  தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை.. எல்லா மருந்துகளும்  அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு  மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி  செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.  சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம்  காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை  அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும் என்கிறார். 

‘ஒன்பதுல குரு’ இயக்குனருடன் விஜய்..?




‘ஒன்பதுல குரு’ இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்,

அதனைத் தொடர்ந்து பி.டி செல்வக்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்து தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்கிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

கராத்தே கற்கிறார் நயன்...



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான விளங்கும் நயன்தாரா கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார்.

தனது குடும்பப் பாங்கான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா, பின்னர் தனுஷின் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனுக்கு மாறியுள்ளார்.

அண்மையில் வெளியான, 'ராஜாராணி', 'ஆரம்பம்' திரைப்படங்களில், அசத்தலாக நடித்த அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, 'கஹானி' திரைப்படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் நடிக்கவிருக்கிறார்.

'அனாமிகா' முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக அவதரித்துள்ளார் நயன்தாரா. 'அனாமிகா'வை தொடர்ந்து, 'ஜெயம்' ரவியுடன் ஜோடி சேரவுள்ளார், அந்த திரைப்படத்திலும் ஆக்சன் ரோல் தானாம்.

அதாவது, கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம். இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா.

மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.

 
back to top