.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்....?




கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?


1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
   
   
 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?



1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
   
   
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.
33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.
   
   
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
   

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?



பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
   
   
உங்கள் பங்கு என்ன?



உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது.
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு.
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு.
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்..!

உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்..!


இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க மக்கள் பணத்தையும் தூக்கத்தையும் வெகுவாக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். சமநிலையோடு விளங்கும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதே உடல் எடை பராமரிப்பின் முக்கிய அம்சமாகும். ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் இருப்பவர்களை விட இஅவ்ர்கலுக்கு தான் பிரச்சனைகள் அதிகம்.

உடல் எடையை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும். எண்ணெய் பலகாரங்கள், வெண்ணெய் கலந்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும்.

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் வேகமாக உயர்த்திட முட்டை, பால், வெண்ணெய் பழம், உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், இளைத்த சிகப்பிறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளாக மட்டுமல்லாமல் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மூலமாக இல்லாமல் புரதச் சத்து மூலமாக உடல் எடையையும் இவைகள் அதிகரிக்கச் செய்யும். புரதச் சத்து மூலமாக உங்கள் தசைகளின் திணிவு அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் திடமாக மாறி உடல் எடையும் போதுமான அளவில் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தினசரி உணவுகளை திட்டமிடுங்கள். தினமும் குறைந்த அளவில் 5-6 முறை வரை உண்ணுங்கள். அல்லது தினசரி நீங்கள் உண்ணும் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

குளிர் காலத்தில் வீட்டில் வளர்க்கும் பறவைகளை பாதுகாக்க சில டிப்ஸ்...


குளிர் காலம் என்பது உங்களுக்கும் உங்களை சார்ந்த செல்லப் பிராணிகளுக்கும் சிறிது கடினமான காலம் தான். செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் எவரும் இந்த காலத்தில் பிராணிகளை பராமரிப்பது குறித்து பல பேரிடம் பேசி மற்றும் பல விஷயங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். முக்கியமாக நீங்கள் வைத்திருக்கும் பறவைகளுக்கு இந்த பனி காலத்தில் கொஞ்சம் கூடுதலான அக்கறை தேவைப்படுகின்றது.

 உங்களை நாடி வரும் பறவையாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு கூண்டுகளில் வைத்திருக்கும் பறவையாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் பராமரிப்பு அவசியம் தேவைப்படுகின்றது. கூட்டுக்குள் இருக்கும் பறவைகளை நாம் வீட்டிற்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் தோட்டங்களில் வாழும் பறவைகளின் சூழல் சற்றே மாறுபட்டது. இவ்வாறு தோட்டத்தில் வாழும் பறவைகளை பாதுகாப்பது எப்படி? காலத்தின் மாற்றத்தை சமாளிக்க அவைகள் பெரும் அவதிப்படுகின்றன. நாம் அவற்றை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.
இத்தகைய தோட்டத்துப் பறவைகளை கூட்டிலிருக்கும் பறவைகளோடு ஒப்பிடும் போது நாம் அதிக கவனத்துடன் மற்றும் கூடுதல் அக்கறையுடனும் குளிரிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். அவற்றிற்கு தேவையான உணவு, உறைவிடம், குளிர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் அதற்கு ஏதேனும் குஞ்சுகள் இருந்தால் அவற்றையும் பார்த்துக் கொள்வது போன்றவற்றை நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.


 குளிர் காலத்தில் கூடுதல் அக்கறையுடன் செல்லமாக வளர்க்கும் பறவைகளை பாதுகாப்பதும் சிறிது கடினமான விஷயம் தான். நாம் இதற்காக ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொண்டால் இதையும் எளிதாக செய்து விட முடியும். பின்வரும் பகுதியில் இத்தகைய பறவைகளை குளிர்காலத்தில் பாதுகாப்பது எப்படி என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நாம் கூட்டிலுள்ள பறவைகளுக்கும் தோட்டத்துப் பறவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த குறிப்புகளை நாம் பின்பற்றுவதன் மூலம் நமது பறவைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் பாதுகாக்க முடியும்.


வீட்டிற்குள் இருக்கச் செய்யுங்கள்: பனி மற்றும் குளிர்ந்த காற்று வீசும் இந்த காலத்தில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பவரும் அதை வெளியே இருக்க விட மாட்டார்கள். உங்கள் வீட்டு பிராணிகளும் இதையே எதிர்பார்க்கும். பறவைகளை வீட்டிற்குள் வைப்பது தான் அவைகளுக்கு இதமூட்டும். ஒரு வேளை தோட்டத்தில் இருக்கும் பறவைகளாக இருந்தாலும் அவற்றையும் தற்காலிகமாக உள்ளே வைப்பது சிறந்ததாகும்.


அறை வெப்பநிலையை நிலைப்படுத்துங்கள்: வீட்டிலிருக்கும் பறவைகளை அறைக்குள் இருக்கும் வெப்பநிலைக்கு எப்போதும் வைத்திருப்பது அவசியமானதாகும். இதற்காக ஹீட்டரை பயன்படுத்தலாம். பறவைகள் இருக்கும் இடத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். வறண்ட காற்று பறவைகள் மேல் அதிகம் பட்டால் அவைகளின் சீத மென்படலம் பாதிக்கப்படுகின்றது.


 ஈரப்பதத்தை மேம்படுத்துங்கள்: குளிர்காலத்தில் அறையை சூடுபடுத்தும் ஹீட்டர்கள் அறையின் காற்றை வறண்ட நிலைக்கு கொண்டு செல்கின்றன. வீட்டில் இருக்கும் பறவைகளை கொஞ்சம் நீராவியை நுகரச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். நீங்கள் ஒரு சூடான குளியலை அனுபவிக்கும் போது இந்த குருவிக்கூட்டையும் குளியல் அறையின் ஓரத்தில் வைத்தால் அதற்கும் இதமாக இருக்கும்.

குடிநீரை அவ்வப்போது மாற்றுவது: குளிர் காலத்தில் நாம் பறவைகளுக்கு கொடுக்கும் தண்ணீர் குளிர்ந்து போகிறது. அவைகளுக்கும் குளிர்ந்த நீரை அருந்துவது கடினமாக இருக்கும். ஆகையால் அவ்வப்போது பறவைகள் குடிப்பதற்காக வைக்கும் நீரை மாற்றுவது அவசியமானதாகும். மாற்றும் போது கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை கொடுக்கவும்.

உணவு: தோட்டத்து பறவைகளை குளிர் காலத்தில் பராமரிக்கும் போது நாம் அதற்கு போதுமான அளவு உணவு கொடுக்க வேண்டும். குளிர் காலத்தில் தோட்டத்து பறவைகளுக்கு இயற்கை உணவு கிடைப்பது கடினமாக இருக்கும். ஆகையால் அவைகளுக்கு தேவையான சக்தி கொடுக்கும் வண்ணம் நாம் படைக்கும் உணவு இருத்தல் வேண்டும்.

 சூடான குளியல்: பொதுவாக பறவைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது பிடித்த விஷயமாக அமைகின்றது. ஒரு வேளை உங்கள் பறவைக்கும் இது பிடித்தமான செயலாக இருந்தால் அதற்கு ஒரு சிறிய சூடான குளியலை கொடுப்பது சிறந்த திட்டமாகும். ஆனால் குளித்தவுடன் உடனடியாக அதை உலர வைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். குளிப்பதால் அந்த பறவை அதற்கு தேவையான ஈரப்பதத்தை பெறுகிறது.

 அறையை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவும்: வீட்டுப் பறவைகளை நாம் கூட்டிற்குள் வைக்காவிடில் அவற்றை நாம் சற்றே கூடுதல் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிவாயு, மின் சாதன பொருட்கள் ஆகியவை பறவைக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டியது இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக அமைகின்றது.

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!



காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

 இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

 * குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.
 
back to top