.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!



கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.


இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.


பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
   
   
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.
   
   
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
   
   
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
   
நெப்போலியன் குள்ளமானவர்



நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்


வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
   
   
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்


உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

   
நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு



மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா?

   
ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது



20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

ஆளுமை தரும் அடையாளம்!




ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை... நாம் நம்மிடையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். இந்தச் சொல் ‘பெர்சனா’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதாகும்.

பெர்சனாலிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின் மொழியாக்கம்தான் ‘ஆளுமை’ என்ற இந்தச்சொல். ஆளுமை என்பது ஒருவரது மனப்பான்மையைப் பொறுத்து அமையும். ஒரு தனிமனிதனின் அகம், புறம் ஆகியவற்றின் வெளிப்பாடே ஆளுமையாகும்.

அகத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமை என்பது உள்ளத்து அக உயர்வு எண்ணங்கள், ஆசை, மனதின் எழுச்சி, சிந்தனை, கற்பனைத்திறன், அன்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், கனவு, இரக்கம், ஏக்கம், பொறாமை போன்றவையாகும். புறத்தின் வெளிப்பாடாக உணரப்படும் ஆளுமையாவது பிறருடன் பழகும் முறை, அன்பு செலுத்துதல், உண்ணுதல், ஆடை அணிதல், பிறருக்கு உதவும் மனப்பான்மை போன் றவையாகும்.

இவ்வாளுமைப் பண்புகளே ஒருவரின் தனித் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஆளுமை என்பது ஒருவருடைய சிறப்பு, மேன்மை, மதிப்பு, புகழ், வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பாகும். சிறப்பு என்பது ஒருவருடைய நற்பண்பாகும். மேன்மை என்பது இந்த நற்பண்புகளால் கிடைக்கும் உயர்வாகும்.

மதிப்பு என்பது இவ்வுயர்வால் சமூகத்தில் கிடைக்கப் பெறும் அங்கீகாரமாகும். அங்கீகாரத்தில் கிடைக்கப் பெறுவது வெற்றியாகும். இத்தகைய கூறுகள் அனைத்தும் ஆளுமையின் வெளிப்பாட்டுக் கூறுகளாகும். ஆற்றல் மிக்க இளைஞர்களே ! இப்படி உங்களது ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பண்புகள்தான் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். ஆளுமை பற்றிய அடையாளங்கள் இன்னும் நிரம்ப இருக்கின்றன. உடல் தோற்றம், முகத்தோற்றம், நடை, உடை, பாவனை இவை போன்ற ஒட்டு மொத்த வடிவமாகும். ஆளுமை ஒருவர் மற்றொருவருக்கு எப்படித் தோற்றமளிக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

ஆளுமை என்பது ஒரு செயல். சமூகக் காரணிகளாலும் உருவாகிறது. பழக்க வழக்கங்கள், அறநெறிப் பண்புகள் மற்றும் சமூக நிறுவனத்திடம் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு, பங்களிப்பிற்கேற்ப ஆளுமை அமையும். இனிய இளைஞர்களே ! உங்களுக்குள் இருக்கும் படைப்பின் ஆளுமை வெளிப்படுகின்ற பருவம் இந்தப் பருவம்.

எந்த ஓர் உழைப்புக்கும் ஒரு கருவி தேவைப்படுகிறது. கரும்பை வெட்ட ஒரு கத்தி, களையெடுக்க ஒரு களைக் குச்சி, கதிர் அறுக்க ஒரு பண்ணரிவாள், அப்படித்தான், எழுத ஒரு பேனா. சொற்களை கருவியாகக் கொண்டு உழைக்கிற உழைப்பு படைப்பு.

சொல்லின் ததும்பல் நேயத்தை வளர்க்கும். நேயம் பிறரது நெஞ்சை நெகிழச்செய்யும். நந்தவனத்தில் மெல்ல நடக்கும் போது நம் மீது பரவும் பூமணமும் புன்னகைக்கும் பூக்களும் தரும் நலனை நல்ல படைப்புகள் தருகின்றன. உங்கள் மனதை இதில் உலவ விடுங்கள்.

இப்படி எந்தக் கருவியை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில் தான் ஆளுமை அடங்கியிருக்கின்றது. உங்களிடம் வெளிப்படும் சிந்தனை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான் உங்களுடைய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படுத்தும்!

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே...?



உண்மை



உண்மை தங்க ஒரு வீடின்றி ஒரு இதயத்தை தேடி அலைகிறது

உண்மை அதிட்டம் என்பது புனிதங்களின் புனிதத்திலிருந்தே துவங்குகிறது

உண்மை அன்பு ஒரு போதும் சந்தேகப்படாது பழிவாங்காது

உண்மை அன்பு துயரப்படுமே தவிர துரோகத்துக்கு பழி வாங்காது

உண்மை அனைத்தும் பேசப்பட்டு இருக்க வேண்டியதில்லை

உண்மை உண்மையானது என்ன சொன்னோம் என்பதை மற்ந்துவிடும்

உண்மை உணர வேண்டும் உள்ளம் தெளிய வேண்டும்

உண்மை உணர்ந்ததும் உற்சாகமாய் இருப்பவன் ஞானி

உண்மை உணர்ந்து வருந்துபவன் உத்தம வெற்றியடைவான்

உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை

உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை

உண்மை என்பது ஒளி போலக் கூசும்

உண்மை என்பது திரையிடப்பட்டுள்ளது சத்யத்தை நேசிப்பவரே காண முடியும்

உண்மை என்பது வினோதமானது கற்பனைக் கதையை விட

உண்மை என்பதும் ஒரு அழகே,அழகென்பதும் ஒரு உண்மை

உண்மை என்ற தத்துவம் உலகை விட்டு மறைந்து வருகிறது

உண்மை ஒரு அடி நடப்பதற்குள் பொய் உலகை ஒரு சுற்று சுற்றி விடும்

உண்மை ஒரு போதும் அனாதையில்லை ஊர் கூடி தேரிழக்கும்

உண்மை ஒருநாள் ஒளிரும்

உண்மை ஓரடி வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றிவருகிறது

உண்மை தெரிந்தும் ஊமையாய் இருப்பவன் கோழை

உண்மை தெரியும் உலகம் புரியும் படிப்பாலே

உண்மை தேடுவோர் வாழ்வில் ஓய்தல் என்பது இல்லையே

உண்மை நடந்து போய் சேர்வதற்குள் கயமை பறந்து சென்று கடைவிரிக்கிறது

உண்மை பயின்று கயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம் ‍

உண்மை பயின்று தூயவனாய் ஆசையிலிருந்து விடுபடுவதே பேரின்பம்

உண்மை பரிசோதிகப்படலாம்

உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள் கயமை வானத்தை சென்று விடும்

உண்மை பேசியதால் உருவான எதிரிகள் அதிகம்

உண்மை போல பொய் பேசுவதே அரசியல் விவேகம்

உண்மை மட்டுமே தெய்வம் என்றால் நாத்திகரும் மறுப்பதில்லை

உண்மை மருந்தை விடக்கும் ஆனால் நோய்தீர்க்கும்

உண்மை முதலில் கேலி செய்யப்படுகிறது/ எதிர்க்கப்படுகிறது இறுதியில் ஏற்கப்படுகிறது

உண்மை, நேர்மை , தூய்மை,நீதி, அன்பு மற்றும் நன்மை என பல உருவங்கள் வாய்மைக்கு

உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது

உண்மைக்கு தொண்டு செய்யும் உத்தமாக்கு என்னும் சாவு இல்லை

உண்மைக்கு பயப்படுப‌வன் வேறு யாருக்கும் பயப்பட மாட்டான்

உண்மைக்குத் தக்க ஊக்கம் இல்லாவிட்டால் உலகெல்லாம் கயமை

உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது

உண்மைகள் புறக்கணிக்கப்பட்டாலும் ஒரு போது மங்குவதில்லை

உண்மைகளை சொல்ல கோள் பார்த்து மயங்காதே

உண்மைப் பொருளும் உலோகாயுதன் உணர்வே

உண்மையாக காதலிப்பதைத் தவிர‌

உண்மையாக துணிச்சலாக உயர்ந்த லட்சியத்துக்காக பாடுபடவேண்டும்

உண்மையாய் உழைத்த ஊழியருக்கு உதவாதது நயவஞ்சகம்

உண்மையான மாற்று கருத்து நமது சிந்தனைக்கு வேலை தரும்

உண்மையான அன்பும் சந்தேகமும் ஒரு இடத்தில் வாழ முடியாது

உண்மையான சிறப்பான திறமை என்பது செயல்படும் போது ஆனந்தமடைகிறது

உண்மையான நல்ல மனிதன் எவர் ஒருவரையும் வெறுக்க மாட்டான்

உண்மையான நல்ல மனிதன் யார் ஒருவரையும் துவேசம் செய்வதில்லை

உண்மையான படைப்பாளிகளை காலம் என்றும் தலை வணங்கும்

உண்மையான மதீப்பீடுகளை சரியாககணிப்பதே தத்துவத்தின் கடமை

உண்மையான மன மாற்றம் கற்பனையில் துவங்குகிறது

உண்மையான முழுமனமாற்றமும் முழுபுரட்சியுமே இன்றைய தேவை

உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது

உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்

உண்மையிலே உணர்வினிலே உயர் நோக்கத்திலே உய்ர்வோம் நாம்

உண்மையின் ஆழத்திலிருந்து சொல் வர வேண்டும்

உண்மையின் உருவம் மிகவும் எளிமை நிறைந்தது

உண்மையும் உயிர்த்தூய்மையுமே ஒழுக்கத்தின் உயிர்நாடி

உண்மையும் நன்மையும் நம்பப்படுவதில்லை மோரை விட கள்விரும்பப்படுகிறது

உண்மையென்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

உண்மையே தெய்வம் கவலையற்றிருத்தலே வீடு

உண்மையே பொய் போலவும் பொய் உண்மை போலவும் விளங்குவதுமாளல

உண்மையே வெல்லும் பாதகம் படு தோல்வி அடையும்‍‍

உண்மையை அறியாதீர் அது உங்களை பித்தராக்கும்

உண்மையை உண்மைக்காக பற்றிக் கொள்வதே நற்பண்புகளின் வித்து

உண்மையை துணிச்சலாக பேச முடியாதவனால் உறங்க முடியாது

உண்மையை நேசியுங்கள் தவறுகளை மன்னியுங்கள்

உண்மையை முட்டாள் கூட பொய் சொல்ல முடியும் பொய் சொல்ல புத்தி வேண்டும்

உண்மையை விட இன்பமானது உலகில் வேறு எதுவுமில்லை

உண்மையை வெல்லும் பாதகம் படுதோல்வியடையும்

உண்மையைக் காண்பதற்கு மிகக் கொடிய எதிரி வாதமே

உண்மையைச் சிலரே விரும்புவர்

உண்மையைச் சொல்பவன் பின் ஒரு கூட்டமே வரும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தார் உத்தம தலைவர்கள்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

உண்மையைத் தழுவு நன்மையை நாடு

உண்மையைத் தைர்யமாக பேச முடியாதவன் உறங்க முடியாது

உண்மையைப் போற்றுதலே உயர்ந்த பக்தியாகும்.

மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்



மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்

மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியலாளர், சார்லஸ் ஹோலஹன், தலைமையிலான அணி ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்று 'தி இன்டிபென்டன்ட்' தகவல் அளித்துள்ளது.

ஆய்வில் மது அருந்துபவர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக அனைத்து சமயத்தின் இறப்புக்கும் இடையே தொடர்பு ஆய்வு ஒன்று அமைக்கப்பட்டது. ஆய்வில், மிதமான மது அருந்தும் மக்களுடன் ஒப்பிடும்போது மதுவில் இருந்து விலகியவர்களுக்கு 2 மடங்கு இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்றும், அதிகமாக மது அருந்துபவர்களின் இறப்பு ஆபத்து 70% அதிகரித்துள்ளது, மற்றும் லேசாக மது அருந்துபவர்களுக்கு 23% இறப்பு ஆபத்து அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டது.

குடிப்பழக்கத்தில் இருந்து விலகியவர்கள் மற்றும் அதிக குடிப்பழக்கம் கொண்ட மக்கள் தங்களை மாற்றிக் கொண்ட பின், மிதமான மது அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் இறப்பு அபாயங்கள் 51% மற்றும் 45% அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
back to top