.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்? நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது. நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம். எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிறபோதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம். அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம். வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.

நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்...!

குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி தட்டி

எழுப்பி உங்கள் பெயரென்ன என்று வினவினார் மருத்துவர். “என் பெயரை ஒரு வார்த்தையில் சொல்லவா? ஒரு வரியில் சொல்லவா? அல்லது ஒன்பது வரிகளில் சொல்லவா” என்று கேட்டு மருத்துவர்களையே அசரவைத்த நம்பிக்கை மனிதர் திரு. செங்குட்டுவன்.

பல தடைகள் தாண்டி வெற்றி பெற்ற செங்குட்டுவன் அவர் குரலை இழந்தது எவ்வாறு?
பல வருடங்களாக தன்னை ஆசிரியர் பணியில் கரைத்துக்கொண்ட செங்குட்டுவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தொலைபேசியில் யாருடனாவது பேசும்போது, திடீரென்று ஒலிக்கும் பெண் குரல் யாருடையது என்று எதிர்முனையில் இருப்பவர்கள் வினவுவார் களாம். பிறகுதான் இவர் குரல் பெண்களின் குரல் போல் மென்மையடைந்து வருவதை உணர்ந்திருக்கிறார். சிறிதும் மனம் தளராமல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட செங்குட்டு வனுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுத்தமாக குரலை இழந்து பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். வேதியியல், இயற்பியல், கணிதம் என அனைத்து பாடங்களையும் சிறப்புற நடத்துபவர் செங்குட்டுவன். அவருக்கு அவர் குரலை இழந்ததுகூட வாழ்க்கைப் பாடமாகத்தான் தோன்றியது. இவர் சில காலம் சென்னையில் தங்க நேர்ந்தது. எந்த இடத்தில் இருந்தாலும் இவருக்கு கற்றுக்கொள்ளும் தாகம் மட்டும் குறையவே இல்லை. கன்னிமாரா நூலகத்தில் பல பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என அறிந்து பயிற்சிகளில் பங்கேற்றார். பட்டியலிடப்பட்ட பல பயிற்சிகளில் மாயாஜாலம் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார்.

மாயாஜாலக் கலையை கற்று முடித்தபின், இவர் செய்த வித்தையில் அசந்துபோன பலரில் குறிப்பிடத்தக்கவர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மோகன் காமேஸ்வரன் அவர்கள். நிலையறிந்து இவருக்கு உதவ முன்வந்தார். செங்குட்டுவனை முழுவதும் பரிசோதித்துப் பின் மருத்துவருக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே எழுந்த உரையாடல்தான் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட சம்பவம். பொதுவாகவே அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சைக்குப் பின் என சில விளம்பரங்களை கண்டிருக்கிறோம். ஆனால் செங்குட்டுவனைப் பொறுத்த வரையில் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நம்பிக்கை நிறைந்த அசாத்திய மனிதராகவே இருந்துவருகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த செங்குட்டுவன், 21 வயதில் ஆசிரியராகப் பொறுப் பேற்று பின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். அமைதியாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியர் பணியை அதிரடியும் அன்பும் கலந்து மேற்கொள்வது செங்குட்டுவன் ஸ்டைல். ஆசிரியர் பணியில் இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை “டியூஷன்”.

“பெற்றோர்கள் சத்தான உணவை கொடுத்தால் பிள்ளைகள் அடுத்த வீட்டில் கை ஏந்துமா என்ன? அப்படித்தான் டியூஷனும்.” என்று ஆசிரியருக்கே உரித்தான கோபம் அவர் வார்த்தைகளில்.

குடும்பத்தில் ஆண் படித்தவராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பெண் படித்தவராக இருக்கும்போது எத்தனை நன்மைகள் விளையும் என்பதற்கு என் தாயார் சிறந்த உதாரணம். கண்டிப்பான தந்தை. தந்தையிடம் கற்றுக் கொண்ட ஒழுக்கமும், நேரம் தவறாமை, தாயின் பரிவும், அனைத்தையும் தாண்டி ஆசிரியர் பணியில் அடைந்த அளவற்ற மகிழ்ச்சி. இவையே, பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று என்னை வெற்றியாளன் ஆக்கியிருக்கிறது” என்கிறார் செங்குட்டுவன்.

குரலை இழந்து மீண்டும் பெற்றவர் மட்டுமல்ல, வாழ்வை இழந்து மீண்டும் பெற்றவர், வெற்றியும் பெற்றவர் திரு. செங்குட்டுவன்.

இந்திய இணைய இணைப்பு வேகம்..!



இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய இணைப்பின் வேகம், உலகத்தின் சராசரி அதிவேக இணைப்பினைக் காட்டிலும் 78 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தர இருக்கும் 4ஜி இணைப்பினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த இணைப்பில் சராசரியாக விநாடிக்கு 49 மெகா பிட்ஸ் வேகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 3ஜி வேகத்தைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாகும். ரிலையன்ஸ் 4ஜி அதிகபட்சமாக நொடிக்கு 112 மெகா பிட்ஸ் வேகம் தரும்.

இந்தியாவில், 49Mbps வேகத்தில் டவுண்லோட் செய்திட முடியும் என்பதே ஆச்சரியமான ஒரு தகவலாகும். இருந்தாலும், உலக அளவில், அதன் சராசரியான வேகத்துடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவான ஒன்றாகும்.

ரிலையன்ஸ் 4ஜி அதன் உறுதிமொழிக்கேற்ப வேகமான இணைய இணைப்பினைத் தந்தாலும், அது பிரிட்டனில் கிடைக்கும் இணைய இணைப்பினைக் காட்டிலும் 30% குறைவாகவே இருக்கும். பிரிட்டனில் சில இடங்களில் 60Mbps வேக இணைப்பு கிடைக்கிறது.

இணைய இணைப்பு வேகத்தினைக் கண்காணிக்கும் Speedtest.net என்ற இணைய தளம் இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்களைத் தந்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 85.54Mbps வேகம் கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவின் சராசரி இணைய வேகம் 18.5Mbps மட்டுமே. மொபைல் நெட்வொர்க் இணைப்பில், அமெரிக்க சராசரி வேகம் 58.25Mbps ஆக உள்ளது.

கூகுள் நிறுவனம், Google Fiber என்ற திட்டத்தின் கீழ் நொடிக்கு 1Gbps (gigabits per second; 1gigabit = 1024megabits) வேக இணைப்பு தருவதாக அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் கான்சஸ் நகரத்தில் அதிக பட்ச வேகம் 49.86Mbps ஆக உள்ளது. இது, அமெரிக்காவில் இரண்டாவது அதிக வேகமாகும்.

உலகிலேயே மிக அதிகமாக இணையத்துடன் இணைப்பில் இருக்கும் நாடாக தென் கொரியா பெயர் பெற்றுள்ளது. இதன் அதிக பட்ச பிராண்ட்பேட் வேகம் 53.3Mbps. சராசரி வேகம் 13.3Mbps. மொபைல் நெட்வொர்க்கில், இந்நாட்டில் இயங்கும் SK Telecom நிறுவனம், தான் அதிக பட்ச வேகமாக 225Mbps அளவினை எட்டியதாக அறிவித்துள்ளது. இதன் LTEA தொழில் நுட்பம், மொபைல் நெட்வொர்க்கில் 50% கூடுதலான வேகத்தில் டேட்டா டவுண்லோடினை அனுமதித்ததாக அறிவித்துள்ளது.

ஹாங்காங் நாட்டில், உலகிலேயே அதிக வேகமான இணைய இணைப்பு (65.1Mbps) வேகம் உள்ளது. இங்கு இணைய இணைப்புகளின் சராசரி வேகம் 10.8Mbps. இங்கு கிடைக்கும் 4ஜி மொபைல் ஸ்பீட் 20Mbps ஆக உள்ளது. இந்தியாவில் 4ஜி இணைப்பினை, பார்தி ஏர்டெல் நிறுவனமும் வழங்க இருக்கிறது. தற்போது புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் இதன் நெட்வொர்க்குகள் இயங்குகின்றன.

இங்கும் மொபைல் போன்களில் இது கிடைக்கவில்லை. இந்நிறுவனத்தின் யு.எஸ்.பி. டேட்டா கார்ட் மூலம் சராசரி டேட்டா டவுண்லோட் 40Mbps கிடைக்கிறது. ஆனால், இது 100Mbps வேகம் அடைய முயற்சிக்கிறது.

மேற்கண்ட தகவல்களிலிருந்து, இந்தியாவின் இணைய இணைப்பு வேகம், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவாகவே உள்ளது என்பதனை அறியலாம்.
3ஜி இணைய இணைப்பிற்கான கட்டணம் இந்தியாவில் இதன் பரவலுக்கு ஒரு தடையாகவே உள்ளது. நிறுவனங்கள் இதனால், வலுவான கட்டமைப்பினை அமைக்கத் தயங்குகின்றனர்.

அதிகமான எண்ணிக்கையில் மக்களை 3ஜி அல்லது 4ஜிக்குக் கொண்டுவர, கட்டமைப்பிற்கான செலவு அதிகமாகும். அதற்கேற்ற வகையில், இணைய இணைப்பிற்கான கட்டணத்தை விதிக்க முடியவில்லை. இதனால், இருபக்க இழுபறியாக இணைய வேகம் உள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாகப் பரவி வருவதால், இதன் பயனர்கள், அதிவேக மொபைல் இன்டர்நெட்டினை எதிர்பார்க்கலாம். பெரும் அளவில் மக்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் வீடியோ காண முயற்சிப் பார்கள் என்பதனால், இந்த வகையில் மொபைல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும்.

அதனால், குறைந்த கட்டணத்தில் இணைப்பு வழங்கி, இணைய நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப கட்டமைப்பினை வலுப்படுத்த முடியும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி





ஆஸ்கர் பரிந்துரைகள் அறிவிப்பு : 'கிராவிட்டி', 'அமெரிக்கன் ஹஸல்' - 10 பிரிவுகளில் போட்டி:-
           
 ஹாலிவுட் சினிமாவின் உயரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. மார்ச் 2-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இதில் 'கிராவிட்டி' மற்றும் 'அமெரிக்கன் ஹஸல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகப்படியாக, தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 '12 இயர்ஸ் எ ஸ்லேவ்' திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறந்த திரைப்பட பிரிவில் 9 திரைப்படங்கள் போட்டியிடுவதால் எந்தத் திரைப்படம் விருதைப் பெரும் என இப்போதே ரசிகர்கள் இடையே விவாதம் ஆரம்பித்துவிட்டது. முழு பரிந்துரை பட்டியல் பின்வருமாறு:

 
சிறந்த திரைப்படம்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

ஹெர்

நெப்ராஸ்கா

ஃபிலோமினா

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த இயக்குனர்


ஸ்டீவ் மெக்குயின் (12 இயர்ஸ் எ ஸ்லேவ்)

டேவிட் ஓ ரஸல் (அமெரிக்கன் ஹஸல்)

அல்ஃபோன்ஸோ காரன் (கிராவிட்டி)

அலெக்ஸாண்டர் பெய்ன் (நெப்ராஸ்கா)

மார்டின் ஸ்கார்சஸே (தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்)



சிறந்த நடிகர்

ச்விடெல் எஜியோஃபோர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

கிறிஸ்டியன் பேல் - அமெரிக்கன் ஹஸல்

மாத்யூ மெக்கானஹே - டாலஸ் பையர்ஸ் கிளப்

ப்ரூஸ் டெர்ன் - நெப்ராஸ்கா

ஃலியார்னடோ டிகாப்ரியோ - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த நடிகை

ஏமி ஆடம்ஸ் - அமெரிக்கன் ஹஸல்

கேட் ப்ளான்செட் - ப்ளூ ஜாஸ்மின்

சாண்ட்ரா புல்லக் - கிராவிட்டி

ஜுடி டென்ச் - ஃபிலோமெனா

மெரில் ஸ்ட்ரீப் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி



சிறந்த திரைக்கதை 

அமெரிக்கன் ஹஸல்

ப்ளூ ஜாஸ்மின்

ஹெர்

நெப்ராஸ்கா

டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த தழுவல் திரைக்கதை 

பிஃபோர் மிட்நைட்

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஃபிலோமினா

கேப்டன் ஃபிலிப்ஸ்

தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்



சிறந்த உறுதுணை நடிகை

லுபிடா நையோங் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜெனிஃபர் லாரன்ஸ் - மெரிக்கன் ஹஸல்

ஜூலியா ராபர்ட்ஸ் - ஆகஸ்ட்: ஒஸாஜ் கவுன்டி

சாலி ஹாக்கின்ஸ் - ப்ளூ ஜாஸ்மின்



சிறந்த உறுதுணை நடிகர்

பர்காத் அப்தி - கேப்டன் ஃபிலிப்ஸ்

ப்ராட்லி கூப்பர் - அமெரிக்கன் ஹஸல்

மைக்கெல் ஃபாஸ்பென்டர் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்

ஜோனா ஹில் - தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்

ஜாரெட் லெடோ - டாலஸ் பையர்ஸ் கிளப்



சிறந்த அனிமேஷன் திரைப்படம்


தி க்ரூட்ஸ்

டெஸ்பிகபில் மீ - 2

ஃப்ரோஸன்

தி விண்ட் ரைசஸ்



சிறந்த ஒளிப்பதிவு

தி கிராண்ட் மாஸ்டர்

தி கிராவிட்டி

இன்சைட் லெய்ன் டேவிஸ்

நெப்ராஸ்கா

ப்ரிஸனர்ஸ்



சிறந்த ஆடை வடிவமைப்பு

மைக்கல் வில்கின்சன் - அமெரிக்கன் ஹஸல்

வில்லியம் சாங் - தி கிராண்ட் மாஸ்டர்

கேதரின் மார்டின் - தி கிரேட் காட்ஸ்பி

மைக்கெல் ஓ கானர் - தி இன்விஸிபில் வுமன்

பாட்ரிசியா நாரிஸ் - 12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த படத்தொகுப்பு 

அமெரிக்கன் ஹஸல்

கேப்டன் ஃபிலிப்ஸ்

டாலஸ் பையர்ஸ் கிளப்

கிராவிட்டி

12 இயர்ஸ் எ ஸ்லேவ்



சிறந்த அயல் மொழித் திரைப்படம்

தி ப்ரோகன் சர்கிள் ப்ரேக்டவுன் - பெல்ஜியம்

தி கிரேட் பியூட்டி - இத்தாலி

தி ஹண்ட் - டென்மார்க்

தி மிஸ்ஸிங் பிக்சட் - கம்போடியா

ஓமர் - பாலஸ்தீன்



சிறந்த ஒப்பனை, சிகையலங்காரம்

டாலஸ் பையர்ஸ் கிளப்

பேட் கிராண்ட்பா

தி லோன் ரேஞ்சர்



சிறந்த கிராஃபிக்ஸ்

கிராவிட்டி

தி ஹாபிட்: தி டீசொலேஷன் ஆஃப் ஸ்மாக்

அயர்ன் மேன் 3

தி லோன் ரேஞ்சர்

ஸ்டார் ட்ரெக் இன்டு டார்க்னெஸ்

 
back to top