.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 17, 2014

நீண்ட காலத்திற்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.

அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில் தான் இவ்விருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

"லைப் ஓ.கே" திரை விருது விழங்கும் நிகழ்ச்சியில் ரேகா பங்கேற்று அதை ரசித்து பார்த்துகொண்டிருந்தபோது, அமிதாப், ஜெயாபச்சன் மற்றும் அபிஷேக் ஆகியோர் அங்கு வந்தனர். அபிஷேக் ஊடகத்துறையினருடனும், அமிதாப் விருந்தினர் ஒருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயாபச்சன் எதேச்சையாக ரேகாவின் இருக்கைக்கு அருகே வந்தார். ரேகாவை பார்த்தவுடன் விலகிச் செல்லாமல் அவரை பார்த்து புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைத்தார்.

பின்னர் தனது இருக்கையிலிருந்து எழுந்த ரேகா ஜெயாவுடன் கைகுலுக்கியதுடன் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அமிதாப்பும் ரேகாவும் இணைந்து நடித்த பல படங்கள் ஹிந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1981 ஆம் ஆண்டு வெளியான "சில்சிலா" படமே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இப்படத்தில் ஜெயாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரெடியா...? நாசா அறிவிப்பு....



செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த விண்கலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. விண்வெளிக்கு 130 டன் எடையுள்ள பொருட்களை இது தாங்கிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.

மிகப்பெரிய கிரகங்களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உருவாகும்.

நிலவிற்கு மனிதனை ஏற்றிச்சென்ற சாதனையை முன்மாதிரியாக கொண்டு செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து இதுவரை எந்த விண்கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் முதல் விண்கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதிவ்யா தான் இப்போ செல்லப்பிள்ளை..!



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாகி விட்டார். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதர்வாவுடன், ஈட்டிஜி.வி.பிரகாஷ் குமாருடன், பென்சில் உட்பட, 4 படங்களில் நடித்து வருகிறார்.

இதில், ஈட்டி படத்தில், முதன்முறையாக காமெடி காட்சிகளிலும் நடித்து உள்ளாராம். இந்த காமெடி காட்சிகளில், ஸ்ரீதிவ்யா வெளுத்து வாங்கியுள்ளாராம்.

மேலும், கோடம்பாக்கத்தில், இயக்குனர்கள் சொல்வதை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு, எந்தவித அலட்டலும், ஆடம்பரமும் இல்லாமல், அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறார், ஸ்ரீதிவ்யா. இதனால்,இயக்குனர்களின் செல்லப் பிள்ளையாகவும், அவர் உருவெடுத்து உள்ளார்.

ரூ.90 கோடியை தாண்டியது வீரம் வசூல்..?



அஜீத் நடித்த வீரம் திரைப்படம் ரிலீஸான ஆறு நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது முந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறத்.

அஜீத், தமன்னா, விதார்த் நடித்த ‘வீரம்’ படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. ரிலீஸ் ஆன முதல் நாள் தமிழில் மட்டும் இந்த படம் ரூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொங்கல் விடுமுறை நாட்கள் என மொத்தம் நேற்று வரை உள்ள ஆறு நாட்களின் மொத்த வசூல் ரூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ற சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ரூ.17.8 கோடி வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆரம்பம் படத்தின் வசூலைக்காட்டிலும் ரூ.6கோடி அதிகம் என கூறப்படுகிறது.

வீரம் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடி ஆகும்., இதன் தற்போதைய வசூல், இன்னும் எதிர்ப்பார்க்கப்படும் வசூல், சாட்டிலைட் உரிமை வசூல், மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வசூல் என சேர்த்து மொத்தம் ரூ.,90 கோடி வசூலாகும் என கூறப்படுகிறது.

மேலும் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வீரம் படம் கூடுதலாக அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கோவை விநியோகிஸ்தர் கூறினார். ஆரம்பம், வீரம் என தொடர்ந்து இரு வெற்றிகளை கொடுத்துள்ளதால் அஜீத் மிகவும் குஷியாக இருக்கிறார்.

தனது கால் ஆபரேஷனை கூட தள்ளிவைத்துவிட்டு அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 
back to top