.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

விஜய்சேதுபதி– விஷ்ணு, யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து....



பையா, வழக்கு எண் 18/9,வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் N.லிங்குசாமி, N.சுபாஷ் சந்திபோஸ் தயாரிப்பில், தென்மேற்குப்பருவக்காற்று,நீர்ப்பறவை ஆகியவெற்றிப்படங்களை இயக்கிய,தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் இடம் பொருள் ஏவல்’.

விஜய்சேதுபதி– விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் முதன்முறையாக இணைகின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் , இயக்குனர் லிங்குசாமி இருவரின் விருப்பத்தினை ஏற்று, யுவன்சங்கர் ராஜா, வைரமுத்து கூட்டணி இடம் பொருள் ஏவல் படத்திற்காக முதன்முறையாக இணைகிறது.

இப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இப்படத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் கொடைக்கானலில் தொடங்குகிறது.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் எண்ட்ரி..!!!



மோகன்லால் அளித்த விருந்துக்கு திடீர் எண்ட்ரி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

1980ம் ஆண்டுகளில் நடித்து அப்போது டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி விருந்துண்டு மகிழ்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் சுஹாசினி, லிஸி, குஷ்பு, ஸ்ரீப்ரியா ஆகியோர் இந்த விருந்தை நடத்தினர். ஆந்திராவில் சிரஞ்சீவியும், கன்னடத்தில் அம்ரிஷூம் நடத்தினர்.

இந்த ஆண்டு மோகன்லால் நடத்தினார். 80களில் பிரபலமாக இருந்த அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ரஜினியையும் அழைத்தனர்.

அவர் நான் கோச்சடையான் பணியில் பிசியாக இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மோகன்லால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த டின்னருக்கு 80களில் டாப்பில் இருந்த நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அந்த விருந்திற்கு யாரும் எதிர்பாராத வகையில் வந்தார் ரஜினி. விருந்து முடியும் வரை அவர்களோடு இருந்து ஜாலியாக சிரித்து பேசிவிட்டு கிளம்பி விட்டாராம்.

இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!



இந்தியாவின் அதிகமாக பணி வாய்ப்புகளை வழங்கி வரும் இந்திய ரயில்வே, ரயில்வே போலீஸ் போர்ஸ் பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 659
துறைவாரியான காலியிடங்கள்: ஆர்.பி.எப்.,பில் வாட்டர் கேரியரில் 406, சபாய்வாலாவில் 117, வாஷர்மேனில் 53, பார்பரில் 61, மாலியில் 7, டெய்லரில் 9, காப்ளரில் 6

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின் அடிப்படையில் 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிசிகல் மெஷர்மெண்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை போஸ்டல் ஆர்டர் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுகள் குறித்த விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!



கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும்.

இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.

இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.

 இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.

 
back to top