.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 19, 2013

பேஸ்புக் & தமிழன்? ஒப்பீடு!

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
 செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
 முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
 முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
 வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

 6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
 "Block this person"

 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
 வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

புத்தகம் வாசிப்பது பற்றி புகழ் பெற்ற மேதைகள் சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!


► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.


► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.


► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

'தூம் 4'ல் நடிப்பாரா அஜித்?

  
பாலிவுட்டில் 'தூம்1', 'தூம்2'  படங்கள் மாஸ் ஹிட் ஆனதால், 'தூம்3' படம் உருவானது.

'தூம் 3' படம் ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது. அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித் நடித்தால் நடிப்பார்  என்று சொல்லப்படுகிறது.

'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அஜித்.

கார், பைக் ரேஸில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளில்லை  என்பதால் 'தூம்4' படத்தில் நடிக்க அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் .

மேலும், 'ஆரம்பம்' பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் பாலிவுட்டில் நடிப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள்.

அஜித் பாலிவுட்டில் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!

கணவனுக்கும்
மனைவிக்கும்
குழந்தைக்கு பேர்
வைப்பதில் தகராறு,
அவங்க அவங்க
அப்பா பேரை தான்
வைக்கணும் என்று.

எதிர்த்த வீட்டுக்காரர்
வந்து யோசனை சொன்னார்,

உங்க அப்பா பேர்
சீனுவாசன்
உங்க கணவர்
அப்பா பேரு கிருஷ்ணன்
ரெண்டையும்
சேர்த்து சீனிவாச
கோபால கிருஷ்ணன்
ன்னு வையுங்க என்றார்.

அதிர்ந்த மனைவி கேட்டார்,
அது சீனிவாசகிருஷ்ணன் தானே?
சரி இடையிலே கோபால்
எங்கிருந்து வந்தார் ??

எதிர் வீட்டுக்காரர்
சொன்னார்
ஹி ஹி அது எங்க
அப்பாவோட பெயர்
சும்மா இருக்கட்டுமே என்றார்..

கணவன்
மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால்
இப்படி தான் ஆட்கள்
பூந்துதுடுவாங்க ...

 
back to top