.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 29, 2013

தாழ்வு மனப்பான்மை!

வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம்.

தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.  


தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை தோல்வி கண்டவர்கள், பிறருடன் பழக வாய்ப்பில்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையினால் இவர்களது மனம் அடிக்கடி தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உடனிருக்கும் நண்பரோ.உறவினரோ இவர்களது தயக்கத்தைத் தக்க நேரத்தில் கண்டுப்பிடித்தல் அதன் பிறகு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வாழ்வின் நிம்மதியை கெடுக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை ஒழிக்க என்ன செய்யலாம்? அதை தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கலாம்.பிறகு,பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்பதுதான். தற்ப்போது இல்லாத விஷயங்களுக்கு வருத்தபடுவதில் தவறு இல்லை. அந்த வருத்தமே வாழ்க்கை முறையாக மாறுவது தான் தவறு. அதன் தொடர்ச்சியாக என்னால் முடியாது என்று சோர்ந்து போவது தவறு. இந்த தவறுகளே வெற்றிக்கு தடைக்கற்கள்.

இது மாற,வெற்றி நம் வசமாக நாம் எடுக்க வேண்டிய முதல் பயிற்சி தாழ்வு மனப்பான்மையை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது தான். 



"விழுவது அழுவதற்கு அல்ல: மீண்டும் எழுந்து நடப்பதற்கே".

நம்மை போல், டால்பின்களும் பெயர்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைக்கின்றன!

 

உலகின் மிக அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாகும் -டால்பின்களுக்கு பெயர்கள் உள்ளன, அவைகளுக்கு பெயர்கள்  மனிதர்களால் கொடுக்கப்பட்டது இல்லை.

முதன் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் டால்பின்கள் எப்படி 'தனிப்பட்ட பெயர்கள்'  கொண்டு பதிலளிக்கின்றன என்று சோதித்து பார்த்தனர்.

 கடல் பாலூட்டிகள் தனிப்பட்ட விசில் பயன்படுத்தி இதன் மூலம்  ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்ளும் மற்றும் அவர்களது சொந்த அழைப்பை கேட்கும் போது பதிலளிக்கும் என்று  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடல் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஸ்டீபன் கிங் மற்றும் வின்சென்ட் ஜனிக் பாட்டில்நோஸ் டால்பின்கள் ஒலி  பின்னணி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் விசில் பிரதிகளை கொண்டு விலங்குகள் உண்மையில்  அவர்களுக்கு எதிர்செயலாற்றும் என்பதை சோதனை செய்து பார்த்தனர்.

 அணி குழுக்கள் தொடர்ந்து காட்டு டால்ஃபின் வகை  மீன்கள் பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட 'பிரதிகள்' விசில்களையும் பற்றி பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் அதே  மக்களிடம் இருந்து வேறு ஒரு மக்கள் அல்லது அறிமுகமில்லாத விலங்குகளின் விசில் பிரதிகளை அல்லது கணினி பதிப்பு  வகித்த விலங்கு பிரதிகள்  விசில்களையும் ஆராய்ந்து பார்த்தனர்.

ஒவ்வொரு டால்பின்களும் அதன் சொந்த விசில் பிரதிகளை  கேட்டு தான் பதிலளிக்கும், மற்ற விசில் பிரதிகளுக்கு பதிலளிக்காது என்று கண்டுபிடித்தனர்.

மம்முட்டி படத்தில் விஜய்?

 

மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி, ரீமா கல்லிங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’. இந்தப் படத்தை ஆஷிக் அபு இயக்குகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலுக்கு  ஆடவைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் ஆஷிக் அபு ஆசைபடுகிறாராம். அதற்கான தீவிர முயற்சியில் இப்போதே இருங்கிவிட்டாராம்.

மலையாளத்தில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பது ஊரறிந்த விஷயம். அதனால் மம்முட்டியின் படத்தில் விஜய் டான்ஸ் ஆடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே விஜய், இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

 

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.

அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத் தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.” என்று,நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 
back to top