.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 6, 2013

நடுவே நதி!

காகிதப் பூவில்
வாசனை…
காதல் கடிதங்கள்!


மழைக்குத்தான் ஒதுங்கினேன்…
ஆனாலும்
மழையைத் தான் ரசித்தேன்!


பூக்கள்
சிரிக்கின்றன…
மலர்வளையத்திலும்!


கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!
கூரையில் கரைகிறது
காகம்…
அடுபபில் உறங்குகிறது பூனை!

அக்கரையில் நான்
இக்கரையில் நீ
நடுவே நதி காதலாய்…


கரையில் கால்களை
கழுவச் சொன்னது யார்?
அலைகளே…


நிலாவையே குழந்தைக்கு
சோறாய் ஊட்டினாள்….
வாழ்க்கை அமாவாசை?


ஒருவேளை
சம்மதித்திருப்பாயோ?
சொல்லியிருந்தால்…


எனக்கு விசிறியதில்
உனக்கு வியர்க்கும்
அம்மா…

விஜய் படத்தில் சம்பளம் வாங்காத மோகன்லால்!




நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து தற்போது பிற வேலைகள் நடைபெற்று வருகின்றன.


'ஜில்லா' படத்தில் நடித்தற்காக நடிகர் மோகன்லாலுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம். ஆனால்,  இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டாராம்.கேரளா விநியோக உரிமை ரூ.4 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அப்படிப் பார்த்தால் 'ஜில்லா' படத்திற்காக மோகன்லால் வாங்குகிற சம்பளம் ரூ.4 கோடி என தெரிகிறது. கேரளாவில் விஜய்க்கு தனி மவுசு இருக்கிறது. மோகன்லாலும் படத்தில் இருப்பதால் பல கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

தந்தை பெரியார் - பொன்மொழிகள்!

                                           தந்தை பெரியார் - பொன்மொழிகள்


 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


 மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


 விதியை நம்பி மதியை இழக்காதே.


மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.



மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

 
back to top