.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, December 26, 2013

தாய்மார்களுக்கான பயண டிப்ஸ்...?




பொதுவாக பயணங்கள் என்றாலே முறையான திட்டமிடல் இருந்தால்தான் இனிமையானதாக அமையும். அதுவும் சிறு குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் அவசியம். எல்லா விஷயங்களிலும் சிறப்பாக திட்டமிடும் ஆற்றலுடைய பெண்களுக்கு சில சிறிய முன்னெற்பாடுகளை செய்து கொண்டால் குழந்தைகளுடன் மேற்கொள்ளும் பயணமும் குதூகலமானதாக அமையும்.

அதற்கு சில ஆலோசனைகள்…


1. நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின் காலநிலைக்கு ஏற்றாற்போல், குழந்தைகளுக்கு ஆடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பமான பகுதி என்றால் பருத்தி ஆடைகளையும், குளிர் பகுதி என்றால் அதற்கு ஏற்ற உடைகளும் அவசியம்.

2. கோடை விடுமுறைப் பயணம் என்றால், முன்னதாகவே டாக்டருடன் ஆலோசித்து குழந்தைகளுக்கான தடுப்பு ஊசிகளை போட வேண்டும்.

3. டிராவல் ஏஜென்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பயணம் என்றால் குழந்தைகளை அழைத்துச் செல்வது குறித்து அவர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது. இப்போது குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை பல ஏஜென்சிகள் செய்து தருகின்றன.

4. பயணத்தின்போது, குழந்தைகளின் ஆடைகளை எளிதில் எடுக்க வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பொம்மைகள், சிறிய விளையாட்டுப் பொருள்களை எடுத்துச் செல்வதும் அவசியம்.

5. எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் திரவ உணவுப் பொருள்களையே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். கூடுதலாக உணவுப் பொருள்களையும், தண்ணீரையும் எப்போதும் வைத்துக் கொள்வது அவசியம். அசைவ உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

6. பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும்போது, ஹோட்டல் அறைகளை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் அறை கிடைக்காமல் அலைவதைத் தவிர்க்கலாம்.

7. சிறிய குழந்தைகளை எப்போதும் தோளிலேயே தூக்கிச் செல்லுங்கள். உங்கள் உடலுடன் குழந்தையின் உடல் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தையின் உடல்நிலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

8. கார்களில் பயணிக்கும்போது, குழந்தைகளை காரிலேயே வைத்துவிட்டு இறங்கிச் செல்லக்கூடாது. முக்கியமாக ஏ.சி.யை ஆன் செய்துவைத்து விட்டுச் செல்லக்கூடாது.

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....




உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?




ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!

இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு?




இனி இந்தியாவில் பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ் செய்தியையே ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த “மொபைல் சேவா” திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், 90 ஆயிரம் மொபைல் சந்தாதாரர்கள் உள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தை போன்று பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


ஆறு மாதங்களுக்குள் அரசின் அனைத்து துறைகளிலும் எச்.டி.எம்.எல் 5 என்ற பயன்பாடு நிலைநிறுத்தப்படும். அப்போது அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய வழி ஏற்படும் என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 
back to top