எங்களுக்காக எங்கும் கல்விக்
கூடங்கள் திறந்தாய்...
சீருடைத் திட்டத்தினால்
பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
பிள்ளைகள் என்கிற
பாகுபாடுகள் நீக்கினாய்...
இலவச மதிய உணவுத் தந்தாய்...
அரசு செலவிலேயே ஆசிரியர்
பயிற்சிகள் அளித்தாய்...
எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
பாடசாலைகள் திறந்தாய்...
இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் அதில்
எதிலாவது உனக்கான
முத்திரையோ,
அடையாளமோ உண்டோ...?
எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
படமாவது உண்டா...?
உன்னால் படித்த எங்களை தவிர
உனக்கு வேறு அடையாளம்
உண்டா...?
எம் "பச்சை தமிழரே"
பார்த்தீரா இன்றைய
தலைவர்களை,
இவர்கள் அறிமுகம் படுத்தும்
ஒவ்வொன்றிலும்
இவர்களது அடையாளங்களை...



9:53 AM
Unknown

Posted in:
1 comments:
விளம்பரத்தினாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்திரம் ஆகாது.
Post a Comment