.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 3, 2013

QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!






 



சில இரகசியத் தரவுகள் உட்பட இணையத்தளங்களை மொபைல் சாதனங்கள் மூலம் விரைவாக பயன்படுத்துவதற்கு QR கோட் உதவிபுரிகின்றது.


இந்த QR கோட்டினை உருவாக்குவதற்கு விசேட மென்பொருட்கள், ஒன்லைன் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.



அதேபோன்று கூகுளின் பிரபல சேவைகளுள் ஒன்றான Google Docs இலும் QR கோட்டினை சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.


இதனை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதனை இங்கே காணலாம்.

ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்!!

Viswaroopam choice for Oscar Award competition betrayal? Kamal answer


விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை.



இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுவரை என்னுடைய படங்கள் 7 முறை ஆஸ்கர் போட்டிக்கு சென்றுள்ளது. விருது கிடைக்கிறதா என்பதைவிட இந்திய படவுலகின் திறமை அமெரிக்க படங்களின் போட்டி விழாவில் பங்கேற்பதே ஒருவிதத்தில் சிறப்பு. இந்த பாணியில்தான் சத்யஜித்ரே இந்திய படங்களை உலக அளவுக்கு கொண்டு சென்றார். அமெரிக்காவை பொறுத்தவரை நாம் இப்போது வெறும் பார்வையாளர்களாகவும், டூரிஸ்ட்டுகளாகவும் மட்டுமே இருக்கிறோம் என்றார்.

நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!


பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.
அதுமட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.

இஞ்சி

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால் இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

செம்பருத்தி

வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

ஹென்னா/மருதாணி பொடி

விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும்.

அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

கறிவேப்பிலை

நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர்.
அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.


தயிர்

தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும்.

வெங்காயம்

வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

மிளகு

நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.

நெல்லிக்காய்

கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய்.
எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

ப்ளாக் டீ/காபி

ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி.
அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!




Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.



141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. 


இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. 


மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 
back to top