.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 16, 2014

25 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள சியான் விக்ரம்..!



பாலாவின் சேது திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி, அதன் பிறகாக விருதுகளையும், ரசிகர்களையும் குவித்த சியான் விக்ரம் திரைத்துறையில் தனது இருபத்தைந்தாவது வருடத்தில் காலடி எடுத்துவைத்துள்ளார். சியான் விக்ரம் தனது நடிப்பாற்றலால் தேசிய
விருதுகளையும், தமிழக அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

நடிகர் விக்ரமை சியான் விக்ரமாக அறிமுகம் செய்தது பாலாவின் சேது திரைப்படமாகும். அதற்கு முன்பே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்
சேது திரைப்படமே விக்ரமின் திரைப் பயணத்தைத் திசைதிருப்பியது எனலாம். அப்படத்திற்குப் பிறகாக அவர் தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஹீரோவாக உயர்ந்தார். அவரின் தில், தூள், சாமி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததுடன் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் பலமடங்காக மாற்றியது.

இயக்குனர் ஷங்கரின் அந்நியன் திரைப்படம் இவரின் நடிப்பாற்றலை மேலும் மெருகேற்றியது. அத்திரைப்படத்தில் ஒரே சமயத்தில் மூன்று கதாபாத்திரமாக மாறி மாறி நடித்தது ரசிகர்களாலும், இதர நடிகர்களாலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

சியான் விக்ரம் தற்பொழுது மீண்டும் இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும்
நிறைவுற்றிருக்கும் நிலையில் விரைவில் இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

 
back to top