.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 3, 2013

வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ உங்களுக்கான தீர்வு!






 



 தொழில்நுட்ப வளர்ச்சியானது தற்போது மூலை முடுக்கு எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றது.


தற்போது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக முப்பரிமாண பிரிண்டிங் முறையில் பற்தூரிகை(Toothbrush) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


இதனைப் பயன்படுத்தி வெறும் ஆறு செக்கன்களில் பற்களை மிகவும் துல்லியமான முறையில் சுத்தம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் நாக்கினை சுத்தம் செய்யும் டங் கிளீனராகவும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

3வது முறையாக உடைந்தது நயன்தாராவின் இதயம்!


3rd time broken Nayantara's heart


மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம். நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங்.



சிம்புவுடன் காதல் முறிந்த பிறகு, உடைந்து போன அவரது இதயத்தை ஒட்ட வைத்தவர் பிரபு தேவா. திருமணம் வரை இவர்கள் காதல் போனது. பிறகு பிரபு தேவாவை நயன் பிரிந்ததும் நண்பராக மட்டுமே இருந்த ஆர்யா, நயனின் நெருங்கிய நண்பராகிப்போனார். இது எல்லாம் நடந்தது ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையேதான். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார். வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப¢பட்ட வட்டாரம். தன் மீது சிறிது அன்பு செலுத்துபவர்கள் மீது கண்மூடித்தனமாக பதிலுக்கு அன்பு செலுத்திவிடுகிறார் நயன். அவர்களை அதிகம் நம்பிவிடுகிறார். யதார்த்தம் வெளிப்படும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் இருக்கிறார் என்கிறது நயனுக்கு வேண்டப்பட்ட அதே வட்டாரம்.

QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!






 



சில இரகசியத் தரவுகள் உட்பட இணையத்தளங்களை மொபைல் சாதனங்கள் மூலம் விரைவாக பயன்படுத்துவதற்கு QR கோட் உதவிபுரிகின்றது.


இந்த QR கோட்டினை உருவாக்குவதற்கு விசேட மென்பொருட்கள், ஒன்லைன் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.



அதேபோன்று கூகுளின் பிரபல சேவைகளுள் ஒன்றான Google Docs இலும் QR கோட்டினை சுயமாகவே உருவாக்கிக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.


இதனை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, அதனை இங்கே காணலாம்.

ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்!!

Viswaroopam choice for Oscar Award competition betrayal? Kamal answer


விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை.



இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது குறித்து கேட்டதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுவரை என்னுடைய படங்கள் 7 முறை ஆஸ்கர் போட்டிக்கு சென்றுள்ளது. விருது கிடைக்கிறதா என்பதைவிட இந்திய படவுலகின் திறமை அமெரிக்க படங்களின் போட்டி விழாவில் பங்கேற்பதே ஒருவிதத்தில் சிறப்பு. இந்த பாணியில்தான் சத்யஜித்ரே இந்திய படங்களை உலக அளவுக்கு கொண்டு சென்றார். அமெரிக்காவை பொறுத்தவரை நாம் இப்போது வெறும் பார்வையாளர்களாகவும், டூரிஸ்ட்டுகளாகவும் மட்டுமே இருக்கிறோம் என்றார்.

 
back to top