.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 10, 2013

பெயர் மாற்றம் நடிகைகளுக்கு கை கொடுக்கிறதா?

 Actresses change of name given to the hand?

  
ராசி, சென்டிமென்ட், நியூமரலாஜி, வாஸ்து போன்ற இன்னும் என்னென்ன இருக்கிறதோ, அவ்வளவும் சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இன்றியமையாத விஷயமாகி விட்டது. பெயரை மாற்றியும், தோற்றத்தை மாற்றியும், மூக்கு ஆபரேஷன் செய்தும், எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிக்கின்றனர். அந்தவகையில் பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை இப்போது அதிரடியாக மாற்றி வருகின்றனர்.



பல படங்களில் நடித்துள்ள சுனேனா, இப்போது அனுஷா என்று மாறியுள்ளார். 


வசுந்தரா, அதிசயா என்ற பெயரில் நடித்தார். ஒர்க்கவுட் ஆகவில்லை. வசுந்தரா கஷ்யப் என்ற பெயரில் நடிக்கிறார். 


அமலா பால், அனகா என்ற பெயரில் சில படங்களில் நடித்தார். ‘மைனா’ அவருக்கு மைலேஜ் கொடுக்க, மீண்டும் அமலா பால் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பிசியாக இருக்கிறார்.



 சரண்யா, சரண்யா நாக் என்று மாறினார். ஹன்சிகா மோத்வானி, இனி மோத்வானியைப் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லி விட்டார்.


மனோசித்ரா, நந்தகி ஆனார். ஒர்க்கவுட் ஆகாத நிலையில், மனுமிகா என்ற பெயரில் நடித்தார். இப்போது மனோசித்ரா ஆகியிருக்கிறார். 


சுஜா, சுஜா வாருனீ என்று பெயரை மாற்றியுள்ளார். 


ஹாசினி, இப்போது சாரிகா ஆகிவிட்டார். 


‘பேராண்மை’ வர்ஷா, அஸ்வதி என்ற பெயரில் நடிக்கிறார். 


மோனிகா, மலையாளத்தில் பார்கவி என்ற பெயரில் நடிக்கிறார். 


ஷாம்னா காசிம் முதலில் ஷாம்னா, பிறகு தாமரை என்ற பெயர்களில் நடித்தார். எதுவும் ஒர்க்கவுட் ஆகாததால், பூர்ணா என்று மாறிவிட்டார்.


 மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம். ‘அழகன் அழகி’ ஆருஷி, தற்போது ஆருஸ்ரீ என மாறியுள்ளார். 


‘அழகர்சாமியின் குதிரை’ அத்வைதா, கீர்த்தி ஆகிவிட்டார். கீர்த்திகா, ஹன்சிபா என பெயர் மாறியுள்ளார். 


‘ஊ ல ல லா’ திவ்யா பண்டாரி, கீர்த்தி பண்டாரி என்ற பெயருக்கு மாறி, மீண்டும் திவ்யா பண்டாரி ஆகிவிட்டார். 


மலையாளத்தில் ‘அபூர்வா’ என்ற பெயரில் நடித்தவர், தமிழில் ஓவியா என்ற பெயரில் நடித்து வருகிறார். 


பிரியங்கா கோத்தாரி, ‘ஜே ஜே’ மூலம் அமோகா என மாறி, பிறகு நிஷா கோத்தாரி என்ற பெயரில் நடித்து, இப்போது பிரியங்கா கோத்தாரியாக இருக்கிறார். 


தெலுங்கில் மீரா சோப்ரா பெயரில் இருப்பவர், தமிழில் நிலா என்ற பெயரில் நடிக்கிறார். மேக்னா சுந்தர் என்ற பெயரில் நடித்தவர், இன்று மேக்னா ராஜ் ஆகிவிட்டார்.


 இவ்வாறு பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை மாற்றி நடித்தாலும், பெயர் மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. இந்த லிஸ்ட்டில் ஹன்சிகா, அமலா பால் மட்டுமே முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். மற்றவர்கள் தட்டுத்தடுமாறியபடிதான் இருக்கி றார்கள்.


விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!




குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது, 


மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு. 


இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன் உலகம் முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!


தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.


10 - malala
 


பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.


பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதி ‘நான் மலாலா’ என்ற பெயரில் 276 பக்க புத்தகமாகி உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது..


New book from Malala Yousafzai details journey from schoolgirl to activist

****************************************


 

easy to forget she is still a teenager, and now a long way from home.The memoir I Am Malala goes some way toward redressing that balance. Published around the world on Tuesday, the book reveals a girl who likes Ugly Betty and the cooking show Masterchef, worries about her clothes and her hair, but also has an iron determination that comes from experience beyond her 16 years.The book, written with the British journalist Christina Lamb, recounts Malala’s life before and after the moment on Oct. 9, 2012, when a gunman boarded a school bus full of girls in Pakistan’s Swat Valley and asked “Who is Malala?” Then he shot her in the head.

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!


கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர்.


10 - choclets.MINI

 

அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து போதையை உண்டாக்குகிறது.எனவே தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவது, அபின் போன்ற போதை பொருள் சாப்பிடுவதற்கு சமம் என்றுதான் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.


ஆனாலும் இப்போதும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடுவதை யாரும் தடுக்க இயலாது.


என்வே கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.


தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது. இந்நிலையில், தேர்வில் ‘பாஸ்’ ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான ‘வேஃபர்’ வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.ஆக -2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்..


 
back to top