.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 28, 2013

தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...

பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.

பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.


சோப்புத் தண்ணீர்

கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால் கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து, அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம்.

கள்ளிச்செடி

கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், கள்ளிச்செடியின் பாலில் இருந்து வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்.


 தேங்காய் நார்

தேங்காய் நாரைக் கொண்டு, சுவற்றில் இருக்கும் கம்பளிப்பூச்சிகளை ஒன்று சேர்த்து, அதன் மேல் தேங்காய் நாரை போட்டு எரித்தால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்.


வெள்ளை வினிகர்


வெள்ளை வினிகரை கம்பளிப்பூச்சியின் மீது தெளித்தால், அந்த வினிகரில் உள்ள ஆசிட், கம்பளிப்பூச்சியை உடனே கொன்றுவிடும்.


பூண்டு


பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அவை இறந்துவிடும்.


வெங்காயம்


தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தால், அந்த வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாசனையால், கம்பளிப்பூச்சிகள் வராமல் இருக்கும்.

ஜின்செங்


ஜின்செங் என்னும் வேரில் உள்ள சாற்றை எடுத்து, அதில் சர்க்கரை சேர்த்து கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், அந்த வேரில் உள்ள கசப்புத் தன்மையால், கம்பளிப்பூச்சிகள் அழிந்துவிடும்

 மிளகு


மிளகை பொடி செய்து, அதனை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை தடுக்கலாம்.

இது புகைப்பட பாஸ்வேர்டு.

http---www.vaptim.com-picword-index 

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது.

 பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் மீது இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும் அல்லது புகப்படத்தின் மையத்தில் கிளிக் செய்ய வேண்டும் என தீர்மானித்து கொள்ளலாம்.


அடுத்த முறை கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்யும் போது நாம் தேர்வு செய்த படம் ஸ்கிரின் சேவை போல வரவேற்கும். அதில் நாம் தேர்வு செயத வகையில் கிளிக் செய்தால் உள்ளே நுழைந்து விடலாம். வழக்கமான பாஸ்வேர்டை டைப் செய்யும் முறையை விட இது சுவாரஸ்யமானது. கம்ப்யூட்டருக்குள் லாக் இன் செய்வதற்கான நவீன வழி என்று இதை உருவாக்கிய வேப்டிம் தளம் வர்ணிக்கிறது.


எந்த புகைப்படம் தேவை, அதில் எந்த வகையான இலக்குகளை கிளிக் செய்ய அமைக்க வேண்டும் என்பதை இஷ்டம் போல தீர்மானித்து கொள்ளலாம்.இந்த சேவையை புகைப்பட பாஸ்வேர்டாக பயன்படுத்தலாம்.ஒருவேளை புகைப்பட பாஸ்வேர்டு ம‌றந்து போய்விட்டால் பிரச்ச‌னையில்லை , இந்த சேவையை அன் லாக் செய்வதற்கான ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமையான லாக் இன் முறை தேவை என்றால் டவுன்லோடு செய்து பயன்ப‌டுத்தி பார்க்கலாம்.


டவுன்லோடு செய்ய: http://www.vaptim.com/picword/index.html



பிக்வேர்டு எனும் பெயரிலேயே மற்றொரு டவுன்லோடு சேவையும் இருக்கிறது.


இந்த சேவை பிலேஷ்கார்டு முறையில் பிற மொழிகளை கற்றுக்கொள்ள உதவுகிறது.http://download.cnet.com/Picword/3000-2279_4-10223742.html

பார்வையற்ற பெண்ணை காதலிக்கும் 5 ஹீரோக்கள்!


 Blind woman in love heroes of 5



பார்வையற்ற பெண்ணை 5 ஹீரோக்கள் காதலிக்கும் கதையாக உருவாகிறது உயிர்மொழி.

 இதுபற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது:


5 வகை குணம் கொண்டவர்களாக மனிதர்களை பிரிக்கலாம்.


இந்த 5 குணம் கொண்ட வாலிபர்கள் பார்வையற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள்.


அவர்கள் அவள் மீது காதல் கொள்கின்றனர்.


 அவர்களின் பிடியில் சிக்கும் அப்பெண் படும்பாடுதான் கதை.


ஐந்து குணம் கொண்டவர்களாக சர்தாஜ், சசி, சாம்ஸ், ராஜீவ், பாபி ஆண்டனி

 நடிக்க பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் கீர்த்தி.


இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.


கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.


 அனைத்து பணிகளும் தற்போது முடிந்துவிட்டது.


குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.


ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் நிறுவனம் இணைந்து


தயாரித்திருக்கிறது. இவ்வாறு இயக்குனர் ராஜா கூறினார்

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன்!


நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.


1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.



சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.

“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.

 
back to top